Saturday, August 13, 2005

காதல் விலங்கு (பாகம் 3)

கொஞ்சம் மெது மெதுவாக (நேரம் கிடைக்கும் பொது) தொடரும்இது என் முதல் கதை. தொடரவேண்டுமா என்றும் பின்னூட்டமிட்டும் நட்சத்திரங்களை சொடுக்கியும் சொல்லுங்கள்
பாகம் 1 http://neyvelivichu.blogspot.com/2005/07/1.html
பாகம் 2 http://neyvelivichu.blogspot.com/2005/08/2.html

அன்புடன் விச்சு


உஷா நல்ல புத்திசாலி. எந்த ஒரு பிரச்சினையையும் புது விதமாக அணுகுவாள். வித்தியாசமாக வழிகளைக் கண்டு பிடிப்பாள். நல்ல கதாசிரியராக எல்ல தகுதிகளும் அவளிடத்தில் உண்டு. எங்கள் நிறுவனத்தின் முதல் விதை. என்னை விட மூன்று வயது பெரியவள். தமிழ் பேச மட்டுமல்லாமல் எழுதப் படிக்கக் கூடத் தெரியும். (எனக்குத் தெரியாது. பாட்டி தாத்தா முயற்சி செய்தார்கள்.. அம்மா அப்பா நான் எல்லாருமாக அமெரிக்காவில் தமிழ் எதற்கு என்று ... இப்போது வருத்தமாக இருக்கிறது) நன்றாகப் பாடுவாள். பூனைக் கண்களுடன் அவளைப் பார்க்கும் போது எப்படி இவ்வலவு அழகாய் இருக்கிறாள் என்று எண்ணத்தோன்றும்..

சரி விஷயத்துக்கு வருவோம்.. சந்துரு பிரச்சினை பற்றி இருவரும் பேசினோம்.. அவன் கேட்டு மூன்று நாள் கழித்து தான் பேசவே முடிந்தது. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? என்ன மாதிரி நிறுவனத்தில் வேலை வேண்டும் சொல்லு வாங்கிடலாம் என்றாள்.. தொடர்ந்து பேசினோம்.. அப்போ அவனை கல்யாணம் பண்ணிக்கப் போகிறாயா.. முடிவு பண்ணியாச்சா.. என்று கேட்டாள்.. இல்லை. அது அப்படியே முடிவெடுக்காமல் இருக்கிறது.. அது பற்றி உன்னொரு நாள் பேசுவோம்.. இப்போ சந்துரு பிரசினைக்கு முடிவு சொல்லு என்றேன்.

"அடுத்த வாரம் கல்யாணம். முடிவென்ன இனிமேல். தெளிவாக நீ அவனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால், உடனடியாக ஒரு வழி இருக்கு கடைசி நேரத்தில் எந்த விவகாரமும் செய்யக்கூடாது" என்றாள்.

இதென்னடா பிள்ளையார் பிடிக்க குரங்கானதே என்று நினைத்துக்கொண்டு "அமாவாசைக்கும் ஆப்ரகாம் லிங்கனுக்கும் என்ன சம்பந்தம்" என்றேன்.

"இருக்கு.. நிச்சயமாக கல்யாணம்னு சொல்லு. பணம் பண்ணலாம்" என்றாள்.

இவள் என்னுடைய "கல்யாணம் வேண்டாம்" கருத்தை எதிர்ப்பவள்.. இந்தத் திருமண பேச்சு வார்த்தை விஷயங்களில் பெரிதும் மகிழ்ச்சியடைந்தவள் இவள் தான். திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு குஜராத்தி பெண் வந்து குழந்தைகளை பார்த்துக்கொள்ளவும் சமைக்கவும் செய்துவிட்டு போவாள். இங்கே பிரச்சினை இடம் மாறி அடுத்த மூன்று மணி நேரத்துக்கு என் திருமணம் பற்றி வாதங்களுடன் தொடர்ந்தது. வேறு யாராவதென்றால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று சொல்லிவிடுவேன்.. இவளிடம் அதுவும் முடியவில்லை. சொன்னாலும் போக மாட்டாள்.

ஒரு வழியாக அவள் கருத்தை ஆமோதித்து, கல்யாணம் செய்து கொள்கிறேன் கடைசி நேரத்தில் பின்வாங்க மாட்டேன் என்றதும், அவள் திட்டத்தைச் சொன்னாள்.

திட்டம் அருமையாகத்தான் இருந்தது. ஆனால் எங்கேயாவது சொதப்பினால் இரண்டு பேர் வாழ்க்கை, குடும்ப மானம் மரியாதை எல்லாம் போச்சு.. இருந்தாலும் இறங்கி விட்டேன்.. சந்துருவுக்குக் கூடத் தெரியாது. சொன்னால் இவ்வளவு ஆபத்தான விஷயத்தில் இறங்காதே என்று சொல்லுவான்.. சொல்லாதே என்று உஷா தான் சொல்லி இருந்தாள்

பதினைந்து நாளில் திருமணம் மண்டபம் பிடித்தாயிற்று என்று சந்துரு தொலைபேசினான்.. வீட்டிற்கு போனதும் அம்மா அதே செய்தியுடன் இனித்தாள்.. எனக்கு எதுவுமே தெரியாது.. எல்லாம் என் அம்மா அப்பா தான்.இன்னும் மனதுக்குள் அமைதி இல்லை.. இப்போது இரண்டு கவலை.. திருமணம் ஒன்று.. திட்டம் ஒன்று..
*********************************************

அடுத்த வாரம் திருமணம்.. உணவகத்திருந்த கூடத்தில் ஏற்பாடு.. அறுனூறு பேர் அமரலாம். அவ்வளவு பெரிய இடம்.. பத்திரிகை அனுப்பி, கொடுத்து எல்லாரிடமிருந்தும் வருகிறோம் என்று ஒப்புதல் வந்தாகி விட்டது.. மாமாவும் மாமியும் காலையில் பறந்து வருகிறார்கள்.. நண்பர்கள் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்கிறார்கள்.. ஏழு மணி தானெ ஆகிறது..

ஜானகிக்கு என்ன ஆச்சு.. ஒரு தரமாவது அவளாக அழைக்கக் கூடாதா.. இன்னும் மனதில் தயக்கம் போக வில்லையா.. மூன்று மணிக்குப் பேசிய போது நன்றாகத்தானே இருந்தாள்..
கல்யாண பரபரப்பாயிருக்கும்.. அடுத்த தெருதானே.. போய்ப் பார்க்கலாமா? சந்துருவுக்கு ஒரே குழப்பம்.. வேண்டாம்.. அவளுக்கு கோவம் வரும்.. வேலை இருக்கும் போது என்ன பார்வை என்று சொல்லுவாள்.. முசுடு.. போன் மட்டும் பண்ணலாம். பண்ணலாமா இல்லை அதுவும் வேண்டாமா.. ..

தயங்கித் தயங்கி தொலை பேசும்போது எதிர்முனையில்... இது ஜானகி இல்லை.. என்ன ஆச்சு ஜானகிக்கு.. போனை கழுத்தில் கயிறு கட்டித்தொங்க விட்டிருப்பாளே.. யாரையும் தொட விடமாட்டாளே.. தற்கொலையா.. கல்யாணம் வேண்டாம் என்று சொன்னது விளையாட்டில்லையா? அய்யோ..

"சந்துரூ" ஜானகியின் தாயாரின் குரல் அவன் எண்ணங்களைக் கலைத்தது.

"கொஞ்சம் வீட்டுக்கு வரியாப்பா.."

"என்னம்மா ஆச்சு.. ஜானகி எங்கே?"

"இங்கதான் இருக்கா.. நீ உடனே வா"

"இதோ வரேன்.."

அடுத்த மூன்றாம் நிமிடம் அவர்கள் வீட்டில்.. அதற்குள் எத்தனையோ எண்ணங்கள்.. நல்லது கெட்டது.. நடந்தது, நடக்கப்போவது.. நடக்க முடியாதது..எல்லாம் மனதில் ஓடின..

அவரிகள் வீட்டில் நுழைந்தும் அவள் அப்பா சொன்னார்

"ஜானகியைக் காணும்"

No comments: