Friday, August 26, 2005

இதை ரஜினி தட்டிக் கேட்பாரா?

‘‘எம் மக்களை நேசித்து அமரர் ஆன ஐயா, உங்கள் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல், உள்ள உறுதியுடன் ஏழை எளிய மக்களுக்கு உதவி வந்தீர்கள். நீங்கள் மறைந்தாலும், உங்கள் நற்செயல், நல் சிந்தனை அடிப்படையில் நாட்டில் உள்ள பாமர மக்களை விழித்தெழச் செய்து புதிய சமுதாயம் தோன்றிட நாங்கள் எங்கள் உயிரையும் பொருளையும் உண்மையுடன் அர்ப்பணிப்போம் என்று உங்கள் நினைவிடத்தில் சூளுரைக்கின்றோம்!’’

செண்டராயன் மலையடிவாரத்தில் புதர் மண்டிய கருவேலங்காட்டுக்குள் காவிரிக் கரையோரம் புதைக்கப்பட்டிருக்கும் வீரப்பனின் கல்லறையில், நெஞ்சுக்கூட்டுக்கு மேல் கையை நீட்டிச் சபதம் செய்கிறார் முத்துலட்சுமி வீரப்பன்.

வீரப்பன் புதைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. என்றாலும், இன்னமும் அந்த ÔசாகசÕக்காரனின் கல்லறையை வியப் போடு பார்த்தபடி செல்கிறார்கள் ஜனங்கள். சிலர் மலர்களைத் தூவுகிறார்கள். சிலர் அழுகிறார்கள். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியோ தன் கணவனின் கல்லறையில் உறுதிமொழி எடுத்த கையோடு, விஜயகாந்த்துக்கு அடுத்தபடியாக, அதிரடியாகக் கிளம்பி பொதுவாழ்க்கையில் கால் பதிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

‘‘பத்தாண்டு காலம் இந்த மக்கள் அனுபவிச்ச கொடுமைகளுக்கு அளவேயில்லை. அதனால் தான் ஒரு சிலர் என்கிட்டே வரத் தயங்குறாங்க. ‘உங்க பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கத்தான் நான் வந்திருக்கேன்’னு எடுத்துச் சொன்னதும், புரிஞ்சுகிட்டு வந்து ஒட்டிக்கிறாங்க. எனக்கு இருக்கிற ஆதரவைப் பார்த்துட்டு சில அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சியில சேரச் சொல்லி என்னைக் கூப்பிட்டாங்க. எனக்கும் சேரலாம்னு தோணிச்சு. ஆனா, என் கணவரால பயனடைஞ்சவங்க, அவரைக் காட்டுக் குள்ளிருந்து கடைசி வரைக்கும் வெளியே வரமுடியாதபடி சிக்கல் பண்ணிட்டு, அவங்க மட்டும் சவுகரியமா ஊருக்குள்ள இருந்துக்கிட்ட மாதிரி, என்னையும் ஒரு கூண்டுக்குள்ள அடைச்சிடு வாங்களோனு பயமா இருக்கு.

அவ்வளவு ஏங்க... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்கூட என் கணவருக்கு ஒரு கேசட் அனுப்பியிருந்தார். அதில், ‘அண்ணா! உங்ககிட்ட ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருக்கு. அதனாலதான் இப்படியெல்லாம் செய்ய உங்களால முடியுது. நீங்க வெச்சிருக்கிற கோரிக்கைகளிலும் நியாயம் இருக்கு. உங்களைப் பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. ஆனா, இந்தச் சூழ்நிலைல நான் வர முடியாது’ அப்படினு அன்பா பேசியிருந்தார். அப்புறம், அவரே பெங்களூர்ல போய் "வீரப்பன் ஒரு அசுரன். அவனை சம்ஹாரம் பண்ணணும்"னு மாத்திப் பேசலையா?

என் கணவரை சம்ஹாரம் பண்ணவங்கனு சொல்லி, அதிரடிப்படைக்காரங்களுக்கு அரசாங்கம் நிறையப் பணம், சொந்த வீடு எல்லாம் தந்திருக்கு. ஆனா, அதே அதிரடிப்படையால பாதிக்கப்பட்ட நூத்துக்கணக்கான குடும்பங்களுக்கு எந்த உதவியும் இல்லை. இதை ரஜினி தட்டிக் கேட்பாரா? அல்லது இந்த ஜனங்களை ஒரு தடவை நேர்லயாவது வந்து பார்த்து ஆறுதல் சொல்வாரா?’’ என்று ஆவேசமாகக் கேட்கும் முத்துலட்சுமி,
‘‘இவங்களையெல் லாம் நம்ப முடியாதுங்க. அதனாலதான் அரசியல் கட்சிகளே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். மனித உரிமைகளுக்காகப் போராடுற சில அமைப்பு களின் துணை இருக்கு. அது போதும் எனக்கு!’’ என்கிறார் உறுதியாக.

nanRi vikatan

2 comments:

முகமூடி said...

அண்ணா! உங்ககிட்ட ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருக்கு. அதனாலதான் இப்படியெல்லாம் செய்ய உங்களால முடியுது

;o)

neyvelivichu.blogspot.com said...

thalaiva,

deiveega sakthikkaaga oru super star pathavi thaanga..

anbudan vichchu