Wednesday, August 24, 2005

101.ஊடாடிப் படித்தல்.. அம்மாவின் பேட்டி

ஊடாடிப் படித்தல்.. அம்மா சொன்னதும் சொல்லாததும்

கூட்டணி விஷயத்தில் திறந்த மனதுடன் இருக்கிறோம்: ஜெயலலிதா ஆகஸ்ட் 24, 2005 சென்னை:

கூட்டணி விஷயத்தில் அதிமுக திறந்த மனதுடன் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று கோட்டையில் நிருபர்களை சந்தித்தார் ஜெயலிலதா. அவர் கூறுகையில்

தமிழக சட்டமன்றத்தை முன் கூட்டியே கலைக்கப் போவதில்லை. முன் கூட்டியே தேர்தலை சந்திக்கும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை.

"இருந்தாலும் எனக்குத் தெரியாது.. என் ஜோசியருக்குத்தான் தெரியும்.":

நாங்கள் தேர்தலை மனதில் வைத்து எந்தத் திட்டத்தையும் நான் அறிவிக்கவில்லை. மக்களுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது ஒரு அரசின் கடமை. அதைத் தான் செய்கிறோம். அதை எப்படி தேர்தலோடு முடிச்சு போட முடியும்.

"இத்தனை நாள் இது போன்ற திட்டங்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. தேர்தல் கண்ணில் தெரியும் போது தான் இதெல்லாம் தெரியவருகிறது. இரண்டாவதாக அறிவிப்பது தான் அரசின் கடமை.. செயல் படுத்துவது அல்ல.. "

கூட்டணி விஷயத்தில் நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம். கூட்டணி குறித்து பேச நிறைய கால அவகாசம் உள்ளது என்றார் ஜெயலலிதா.

"தி.மு.க கூட்டணி முடிவு செய்யும் வரை அவகாசம் இருக்கிறது..அப்போது தான் அவர்கள் தருவதை விட 5 இடம் அதிகமாகத் தந்து கட்சிகளை வளைக்கலாம். எங்களுக்கு 150 இடம் அது தான் இப்போது தெரியும் "

கூட்டணி குறித்து எந்தக் கட்சியாவது உங்களை அணுகியதா என்று கேட்டபோது, சிறிய கட்சி எங்களை அணுகி இருந்தாலும் கூட அதை எப்படி நான் இப்போதே வெளியில் சொல்ல முடியும் என்றார் ஜெயலலிதா.

"பெரிய கட்சி என்றால் சொல்லலாம்.. சிறிய கட்சி அணுகினால் சொல்வதால் ஏதும் பயன் இல்லை"

போலீஸைக் கொண்டு திமுக கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நீங்கள் முயல்வதாக கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, போலீஸை வைத்து அதை எப்படிச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை போலீசை பயன்படுத்துவதில் அவர் கில்லாடியாக இருக்கலாம் என்றார்.

"ஊளவுத்துறை போலிஸ் ஆனாலுல் அதை போலிஸ் என்று கூறுவதைக் கண்டிக்கிறேன். மேலும் தி மு க இதற்கு யாரை எல்லம் தயார் படுத்தியதோ அவர்களையே பொறுப்பில் வைத்திருக்கிறேன். பாம்பின் கால் பாம்பறியும் அதனால் தான் தாத்தாவுக்குக் கவலை."

வேலை உத்தரவாத சட்டத்தை அமலாக்கியதற்காக மத்திய அரசைப் பாராட்டிய அவர், தேசிய வளர்ச்சிக் கவுன்சிலில் நான் சொன்ன சில கருத்துக்களையம் உள்ளடக்கி இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது மிகுந்த மிகழ்ச்சியளிக்கிறது என்றார்.

"இது பாராட்டு எண் 17. மைத்ரேயன் இதை காங்கிரஸ் தலைவியின் எடுபிடிகளிடம் தவறாமல் தெரிவிக்கவும்."

மேலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டு வருவதில் மத்திய அரசைத் தாக்கி பாஜக கருத்து தெரிவித்துள்ளது குறித்து கேட்டபோது, பாஜகவுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவிக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார்.

"பா ஜா கா ஆதரவு நிலையை விட்டு விட்டோம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.. மைத்ரேயன் இதையும் சொல்லவும்"

சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.

"தாத்தாவிடம் போகாமல் என் காலில் விழுந்திருந்தாலே இன்னேரம் வேலை தந்திருப்பேன்.. கோர்ட்க்கா போரீங்க கோர்ட்க்கு.. தீர்ப்பு அடுத்த தேர்தலுக்குத் தான் வரும்.. அது வரை காத்திருங்க."

சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்படும் என்றார் ஜெயலலிதா.

"இதைச் செய்வதால் பெரிதான எந்த பலனும் இல்லை தேர்தலில்.. வீரமணி ஒரு அறிக்கை விடுவார்.. இருந்தாலும் கருணாநிதி இதில் முன்னிலை பெற்று விடக் கூடாதே என்பதால் ஒரு மனு தாக்கல் செய்து வைப்போம்"

இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாவிட்டால் சுய நிதிக் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று கூறியிருக்கிறீர்களே. அது சாத்தியமா என்று நிருபர்கள் கேட்டபோது,
வேறு வழியே இல்லாவிட்டால் அதைத் தான் செய்ய வேண்டும். இந்தக் கல்லூரிகளை அரசு ஏற்று நடத்த முடியும் என்றார்.

"என்ன, அவர்கள் மூலமாக வரும் வருமானம் குறையும்.. இதற்கு வேறு வழி யோசித்துக் கொண்டிருக்கிறோம்.. இப்பொது வெளியிட முடியாது"

No comments: