Tuesday, August 02, 2005

நம்பிக்கை கவிதைப் போட்டி.. முதல் பரிசு..

நம்பிக்கை கவிதைப் போட்டி.. முதல் பரிசு..
அருண் வைத்யநாதன்
மதுமிதா
போயட் ராஜ்
சோமு
வெங்கட் கண்ணதாசன்.

ஐந்தில் வராவிட்டலும் அருமையான கவிதை தந்தவர்கள்
பெனாத்தல் சுரேஷ்
நித்யா ஸ்வாமிநாதன்
பசிடிவ் ராமா
ரங்கநாதன்

disclaimer:

வெங்கிட்டு நாராயணனின் நம்பிக்கைப் போட்டி முடிவுகள் வரும் பொது வரட்டும்.. என் கணிப்பு முதல் ஐந்து நல்ல கவிதைகள்..(இது முதல் இரண்டு என்ற வரிசையில் அல்ல) என் கவிதைகளைச் சேர்க்காமல்.

எல்ல கவிதைகளையும் தொகுத்துத் தந்திருக்கிறேன்.. படித்து உங்கள் தேர்வையும் எழுதுங்கள். lets help venkittu.

அன்புடன் விச்சு

நம்பிக்கை நம் கை - நமக்கு நம்பிக்கை
இளைஞன் - இந்தியாவின் நம்பிக்கை
வெற்றி - தோல்வியின் நம்பிக்கை
தலைவன் - தானையின் நம்பிக்கை
தண்ணீர் - தமிழ் நாட்டின் நம்பிக்கை
பயிர் - உயிர்களின் நம்பிக்கை
அடிதடி - "அந்நியனின்" நம்பிக்கை
அகிம்சை - அண்ணலின் நம்பிக்கை

ganesh venkat

வார்த்தைகளைக் கோர்த்து
எண்ணங்களைக் கிறுக்கி
கவிதையெனப் பேரிட்டு
வலைப்பதிவில் இட்டு
கருத்துகளுக்கு காத்திருக்கையில்
"அருமை!" என கருத்துவர
நம்பிக்கைப் பிறக்கும்
"இனி நானும் கவிஞன்!"
http://theydal.blogspot.com/2005/07/blog-post_22.html

நம்பிக்கை
நேத்தடிச்ச சரக்கால இன்னும் தூங்கறாரு அப்பா.
கருக்கையிலே ராட்டி தட்டப்போயிட்டா ஆத்தா.
முனியண்ணன் கடையிலேடீ கிளாஸ் கழுவினா நாஸ்தாக்காச்சு.
பன்னெண்டுக்குள்ள ஸ்கூலு போயிட்டா
சோறு பருப்போட சத்துணவாச்சு.
ராப்போதுக்கு ஆத்தா எதுனாச்சும் தரும்..
பசி பொறுக்க முடியாது, சின்னப்புள்ளை நான்!

நம்பிக்கை - 2
கஷ்டப்பட்டுப் படித்திருக்கிறேன்
கண்டிப்பாய் பாஸாகிவிடுவேன்..
அப்புறம் எதற்கு முச்சந்தி விநாயகனுக்குத்
தோப்புக்கரணமும், குட்டும்?!
ஜமாலும், ஜேம்சும் ஜம்மென்று
பாஸாவதில்லையா என்ன?
மனசுக்குள் முணுமுணுத்தபடி
விநாயகர் சன்னதி திருநீறெடுத்தேன்.
- அருண் வைத்யநாதன்

நம்பிக்கை - 3

நிலா நில்லாமல் ஓடி வரநேரமெடுப்பதால்
பூச்சாண்டியே துணை.
உம்மாச்சியின் அறிமுகம் கூட
கண்ணைக் குத்திவிடும் கொடூரனாய்த்தான்.
‘அங்கே போகாதே பூதமிருக்கு’
மிரட்டலாக ஆரம்பித்து, வாக்கியமாக மருவிவிட்டது.
நாளைய சந்ததிக்கான நம்பிக்கை விதைகள்
கார்ட்டூன் நெட்வொர்க்கில் நிழலாடுகிறது.

- அருண் வைத்யநாதன்

நம்பிக்கை!
ஒன்பது வாயில் கொண்ட
எண்சாண் உடம்பினோனே
ஏழ்வகைப் பிறப்பினோனே
அறுசுவை வாழ்வில் வெற்றி
அனுதினம் உன்னைச் சேர
ஐந்தெழுத்து மந்திரம் தந்தேன்
அதன் கொண்டே முயன்றுவிடு- உன்
இலட்சியத்தை வென்று விடு!

positive raama

நம்பிக்கை
லண்டனில் தொடர் வெடிகுண்டு
எகிப்திலும் தொடரும் வெடிகுண்டு நிலநடுக்கம்,சூறாவளி,சுனாமி,புயல்
எத்தியோப்பியா,நைஜீரியா எலும்புக் குழந்தைகள் வறுமை,தீவிரவாதம்,இன சாதி மத கோரம்பட்டினிச்சாவு,பாலியல் கொடூரம்
இத்தனையும் கடந்து இருள் இரவினில் தூங்கிஅத்தனையும் கடந்து புதுவிடியலில் விழிக்கச்செய்வது

மதுமித

நம்பிக்கை
ஒளிரத்தான் செய்கிறது சூரியன் -ஊழி வந்து
பிரட்டிப்போட்ட கடற்கரையிலும்.
பொழியத்தான் செய்கிறது மேகம் -நடுங்கி
அடங்கிய நிலத்தினிலும்.
புணரத்தான் செய்கிறார்கள் பெற்றோர் -தீ வந்து
மகவு தின்ற வீட்டிலும்..
நம்பத்தான் வேண்டும் நாமும் -
நாளையேனும் நற்பொழுதாய் விடியுமென.

penaththal suresh

நம்பிக்கை ஏரிக்கரையில் நிமிர்ந்த
பனைமரம்நீரிலும் நிமிரும் பிம்பமாக
தாவிக் குதிக்கும் தவளைகள்
நீச்சலும்கூடிப் பறக்கும் நாரைகள் எச்சமும்
சிறார்கள் வீசிடும் எச்சிற் பனங்கொட்டைகளும்
நீரில் அலையெழுப்பும் அவ்வப்போது
பிம்பம் கலைந்து குலைந்துஅலைந்து வளைந்து நெளிந்து தெளிந்து
மீண்டும் நிமிரும்வாழ்வின் நம்பிக்கைப் போல!

suntharamoorthy

நம்பிக்கை ௧
வெட்டப்பட்ட மரத்தில்சிதைந்த
கூட்டைப்பற்றிகவிதை எழுதிமுடிப்பதற்குள்..
வீழ்ந்த மரத்தின்குச்சிகளை கொண்டே
கட்டியது மற்றொரு கூட்டை..காக்கை.

நம்பிக்கை- 2

வாசு பத்தாம் வகுப்பு பாசாகிறதும்
சுப்பண்ணாவுக்கு பிரமோசன் கிடைக்கறதும்
மைதிலிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை அமையறதும்
சாந்தி அததைக்கு உடம்பு சரியாகிறதும்..
நன்றாக உடைபடும் தேங்காயிலிருந்துதான்
சிதறுகிறது நம்பிக்கைகளாக.
பார்த்து உடைங்க தேங்காய ஐயரே..

poetraj

நம்பிக்கை

வாழ்க்கைச்சுழலின் ஆதாரச் சக்கரம்.
வாழ்க்கை வளமாகஎளியவொரு சூத்திரம்.
நம்மேல் நாம் வைத்தால்வளரும் நம் சுயம்.
பிறர்மேல் நாம் வைப்போம்வளரட்டும் சமுதாயம்.

suresh in UK

அன்பை நம்புவோம்; ஆசை அழியும்
இரக்கத்தை நம்புவோம்; ஈகை பெறுகும்
உண்மையை நம்புவோம்; ஊனுக்கு மதிப்பு
எளிமையை நம்புவோம்; ஏக்கம் தணியும்
ஒழுக்கத்தை நம்புவோம்; ஓங்கட்டும் நம் புகழ்

pradeep kumar

Kஅடவுல் மெல் நான் வைக்கும் நம்பிக்கை-ஏன் புன்னகை

monu

நம்பிக்கை
போக்கிலாதொரு பெருவெளியிலும்
முகம் நோக்கி நீளுகின்ற மூன்றாம் கை!
யுகங்கள் தோறும்வெற்றியின் வாகனம்!
'கண்டம்' விட்டுப் போக கணிப்பொறி படிப்பு!
கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணமும் உண்டு!
தென்கோடி ஏவுகணைகளை டெல்லிக்கு(ம்) அழைப்பது!
கும்ப கோண விபத்துக்களில் குழந்தையில் கருகுவது!

ஈப்னு humdhin

ஆர்ஜுன link is not working

Snow on Mountain----------------

Malayee, unakku kulir eduthathanaal inthe ven paniyai eduthu pothi kondayo?
Vaanavil---------Ithu mazhaiyinaal azhiye koodum saayam alle,Vaanam endri thiryali mazhai thuligal variyum vannakkkolam...

Morpheus

Visithra, ranga and one more person (I think positve rama) the number of lines are more than 8 lines.

நம்பிக்கை
நாளை வரும் மரணம்எனும்
நம்பிக்கைதூண்டும்
எனைநன்றே வாழ்ந்து விட இன்று!!

anaamika

நம்பிக்கை***
ஆனந்த விகடன் ஆசிரியருக்கு
சாதனைச்சிறுவன் ஜனா!
பரட்டையன் டூ வேட்டையன்
இரண்டு மனைவி வேண்டுமா...?
மனைவியின் சொத்தை திருடிய கணவன் கைது...
பின்புலம் அறுந்த உருவகங்கள்
வலைப்பூக்களில் நம்பிக்கைத் தேடி
டிஸ்கவரி விண்ணோடம் -
ஒரு முடிவின் ஆரம்பம்

குசும்பன்

நம்பிக்கை கல்லாய் இருக்கும் சாமியின் மீதும்
சொல்லாய் இருக்கும் நாத்திகத்தின் மீதும்
இல்லாத விதியின் மீதும்
இல்லை என் நம்பிக்கை
மண்ணில் தெரியுது வானம்அது
நம் வசப்படல் ஆகாதோ
என்ற பாரதியின் வார்த்தை
என் நம்பிக்கை

Chenthil naathan

நம்பிக்கை!
மிட்டாய் காசில் கோலி வாங்கிகட்டிலின் அடியில் வானில்விட்டபட்டங்கள் அடுக்கி,
பம்பரம் சொடுக்கிகாய்ந்த பன்னை நீரில் நனைத்து
யூனிபாரத்தில் என்னை அமுக்கிகால்தடுக்கி
பள்ளிக்கு ஓடும்போதுஅம்மாவின் கண்களில் தெரிந்ததுதான்நம்பிக்கையின் கீற்றோ!!!

JVC

attempt 1
ஒரு கபில் போனால் ஒரு சச்சின்...ஒரு சச்சின் போனால் அங்கொரு திராவிட்...
99-இல் இங்கிலாந்து 2003-இல் தென் ஆப்ரிக்கா...உலகம் சுற்றும் வாலிபர்கள் 11 பேர்...
எங்கும் போகாமல் சற்றும் தளராமல்...ஆணி அறைந்தால் போல் இருப்பது...
நூறு கோடி மக்களின் நம்பிக்கை மட்டும் தான்...இன்னொரு "World Cup", இன்னொரு விடியல் என்று...

attempt 2

தாண்டிச் சென்றன எண்ணற்ற கால்கள்...அவனறியாத வண்ணங்களிலெல்லாம் பல காலணிகள்...
ஒரு அன்பர் வந்தார், சில நிமிடம் நின்றார்...தேடியும் கிட்டவில்லையென தன் திசையில் தொடர்ந்தார்...
முகம் வாடிய சிறுவனுக்கு ஆறுதல் சொல்வது போல்இன்னும் பல கால்கள் அவனை நோக்கி...
வாடிய முகத்தில் மெல்லிய புன்னகை...கையில் பிச்சைத் தட்டு, மனம் நிறைய நம்பிக்கை...

attempt 3
பசு ஒன்று வரைந்தாள், அதற்கு சிகப்பு நிறம் பூசினாள்அவள் கிறுக்கிய காக்கையின் நிறமோ பச்சை
அச்சிறுமி மாம்பழம் வரைந்தாள் என்றால் அவள் சொல்லித்தான் தெரியும் அது என்னவென்று
ஆனால் அவள் அம்மா பெருமையுடன் சிரித்தாள்ஓவியங்களைப் பார்த்து தனியே ரசித்தாள்
தன் பெண்ணும் பிற்காலத்தில்... ஒரு ரவி வர்மா என்ற நம்பிக்கையுடன்...

4. காய்ந்து போன அவள் அழகிய முகத்தில் பருக்கள் அல்ல, பல பிளவுகள்...
திடீரென உணர்ந்தாள் ஒரு குளிர்ச்சி...அலைபாயும் மேகங்களின் நிழல் அவள் மேல் விழுந்ததால்...
உடனே கொஞ்சம் சிலிர்ப்பு...அவள் கண்களில் மிகுந்த எதிர்பார்ப்பு...
அண்ணாந்து பார்த்தாள் முதல் மழைக்காக... நிலம், தனக்கே உரிய நம்பிக்கையுடன்...
nithya swamynathan
இயன்ற வரையில் இனிய தமிழில்
தமிழன் மட்டும் முன்னேறிவிட்டான்
தமிழை பின்னுக்குத் தள்ளிவிட்டான்
ஆங்கில மோகம் பிடித்ததினால்
பிள்ளையை கான்வென்டில் சேர்த்துவிட்டான்

தமிழில் இருவர் பேசிக்கொண்டால்
தரக்குறை வென்றொரு கருத்திருக்கு
வலைப்பூவில் தமிழ் மலர்ந்ததினால்
பிறந்தது புதுத் தெம்பெமக்கு

kaps

கை வைத்ததால் சுரந்ததாம் வைகை!
பட்டணக் கூலி வாழ்க்கை, நிரந்தரம் ஒரு வேளை உலை,இவை எல்லாம் துச்சம் என
விடியலில் படுக்கை தொலைத்து நிலத்தில் கால் பொதித்து, கலப்பயில் கை பதித்து,
தலையில் கை வைக்காமல் “இங்கும் சுரக்கும் வைகை”என்று, உழைக்கிறானே என் காவிரிப்படுகை விவசாயி, அவனது மறுபெயர் தான் நம்பிக்கை

TJ

அவ(ள்) நம்பிக்கை
ஊரடங்கும் உறங்கிப்போகும்பலகணி வழியே பால் நிலா காய்ந்திருக்கபஞ்சணை மீதோ பாவை நிலா மாய்ந்திருக்கும்
சுவர்க்கோழி சத்தமிடஇரவும் மெல்ல கரைந்துவிடும்
சேவக்கோழி கூவலிடகிழக்கும் மெல்ல வெளுத்துவிடும்
ஊருக்கு மட்டும் விடிந்திருக்கும்!

A.Thiyagarajan

தினந்தோறும் அல்லது நம்பிக்கையே வாழ்க்கை
காலையில் விழித்தேன் நல்ல நாள் இதுவென்று
அவசரம் அவசரம் ஆயிரம் அவசரம்
குளித்து துடைத்து கண்டதை உடுத்தி
முட்டி மோதி பேருந்து பிடித்து
அலுவல் முடித்தால் மீண்டும் ஓட்டம்
வாழ்க்கை வழிமுறை மாறுமென்ற கனவுகள்
நம்பிக்கை மனதிலே நல்லநாள் விரைவிலே
படுக்கையில் விழுந்தேன் நாளை நல்ல நாள்

நம்பிக்கை கவிதை 2.

நம்பிக் கைதந்த நாயகி ஒருபுறம் - என்மேல்
நம்பிக்கை தந்த குழந்தைகள் ஒருபுறம்.
நம்பிக்கை வளர்த்த பெற்றோர் ஒருபுறம் -தினம்
நம்பித் தோள்தரும் தோழர் ஒருபுறம்..

இவரென்னை நாடி வந்தாரோ இல்லை
அவரை நம்பிநான் நின்றேனோ வாழ்வில்
நம்பிக்கை போனால் நானென்ன நீயென்ன
நம்பினோர் வாழ்க்கையில் நாளும் வசந்தமே

நம்பிக்கை 3

கண்ணில்லதவர் பாடிப் பிழைத்தார்
காலில்லதவர் கடையொன்றமைத்தார்
சொல்லில்லா ஊமை செவிகேளா மனிதர்
கையாலே பேசி வாழ்வைப் பிழைத்தார்

ஏழ்மையும் துன்பமும் வாழ்க்கையை நிறுத்துமோ
சோம்பி திரிந்திடல் வாழ்விற்கடுக்குமோ
உடலிலே ஊனம் உள்ளத்தில் இல்லை
உன்னைநீ நம்பினால் வானமே எல்லை.

neyveli vichchu

நம்பிக்கை குழிவிழுந்த கன்னமும்
தோல்சுற்றிய தேகமும்
ஒட்டிய வயிறுமாய்
வறண்டபூமியில் ஒர்தளிர்
செஞ்சிலுவையின் நேசக்கரத்திற்காக காத்திருக்கையில்கண்கள்மட்டும்
ஒளிரும்உயிர்வாழும் நம்பிக்கையில்!

venkat kannadasan

உனைப் பார்க்க முடிவதில்லை...
பார்த்தாலும் பேச முடிவதில்லை...
பேசினாலும் எண்ணங்களைப்
பரிமாறிக்கொள்ள முடிவதில்லை...
எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டாலும்
இதயத்தை இருத்த முடிவதில்லை...இருந்தும்.........
உன்னை நேசிக்கவே செய்கிறேன்...ஏனெனில்..
நான் சுவாசிக்க வேண்டும்!

paLLi kondaan

4 comments:

Narayanan Venkitu said...

Vichu,
Oru mail anuppi irukka koodadha...Nan ella kavidhaigalaiyum pudithu/padithu, emailil pohtu..indiakku anuppinen.!

Ippo adhu en mama kayyil irukku....! Latest news - thalaiyai pichukkarar endru amma sonnargal indru.!

Thanks again.!

Arun Vaidyanathan said...

Dear Vichu,
Its nice to see all the poems in one post. Gr8 effort!

Boston Bala said...

Thx!

JVC said...

Thanks for the great effort you have taken in this!
JVC