Thursday, August 04, 2005

அதே நெருப்பு

புகை பிடிப்பவரரா நீங்கள் -

தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொள்ளும் புதுமைப் பித்தர்.

உங்கள் கொள்ளியில் இறப்பது பக்கத்திலுள்ள புகைக்காதவர்களும் தான்.

நாளைக்கு விடுகிறேன் என்று தம்மைத் தாமெ ஏமாற்றிக் கொள்ளும் சுயநலவாதி..

நீங்கள் இறப்பதால் இறங்கிப்போவது உங்கள் குடும்பத்தின் வாழும் தரம்.

ஆயிரம் பேர் இறந்தாலும் அடுத்தது நானில்லை என்பது என்ன நம்பிக்கை..

இன்றைக்கு இருபதாயிரம் பேர் புதிதாக புகை பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

நீங்கள் சமாதான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டு நாட்டைக் காக்க வேண்டாம்.

இதோ உங்கள் வாய்ப்பு . உங்கள் கையில் இருக்கும் பெட்டியைத் தூர எறிந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் மட்டுமில்லை.. இந்த உலகத்தையும் காப்பற்றுங்களேன்.

உங்கள் கையில் இருப்பது மூன்றங்குல அணுகுண்டு. நீங்கள் செய்வது மூன்று நிமிடத் தற்கொலை முயற்சி.

முதுகில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு இறக்கும் தீவிரவாதி நீங்கள்.

சிந்தியுங்கள்.. உங்கள் உயில் தயாரா.. அடுத்த 15 வருடங்களுக்கு உங்கள் குடும்பம் கவலையின்றி வாழ முடியுமா..

பணம் சம்பதித்துக் கொள்வார்கள்.. உங்கள் குழந்தைக்கு அப்பாவும் மனைவிக்கு கணவனும் பணத்தால் கிடைப்பார்களா..

இவர்கள் பழக்கத்தைப்பற்றி ஒரு கவிதை

அன்புடன் விச்சு

அதே நெருப்பு

மதுரையில் இட்டாள் கற்புக்கு இலக்கணம்
இலங்கையில் இட்டான் பக்திக்கு உதாரணம்
காட்டிலே இட்டதால் கடைவழித் தேற்றம் - வெண்
சுருட்டிலே இட்டதால் நிச்சயம் மரணம்

மனதிலே புகைந்தது வயிற்றிலெ எரிச்சல்
வதந்தியாய் புகைந்தது வாழ்க்கையில் குழப்பம்
குடந்தையில் புகைந்தது கருகின மலர்கள் - நம்
வாயிலே புகைந்தால் விரைவிலே மரணம்

அடுப்பாய் எரிந்தால் வயிற்றுக்கு உணவு
தெருவிலெ எரிந்தால் மனமகிழ் பொங்கல்
தீபம் எரிந்தால் தெருவுக்கு வெளிச்சம் - புகை
குழல் எரிந்தால் தொடர்ந்திடும் மரணம்.

1 comment:

Narayanan Venkitu said...

Vichu , super poems. I have to mention this line

மனதிலே புகைந்தது வயிற்றிலெ எரிச்சல்

Not sure why you wrote this..but I went down with ulcers thanks to a lot of stress..which caused acidity.!

Smoking..I hate it.! 2nd hand is even worse.