Friday, August 19, 2005

96.சிறுகதை - சபலம்

கொஞ்ச நாட்களாகவே இந்த ஆசை இருந்தது... வீட்டில் பூர்த்தி செய்துக்கொள்ள முடியவில்லை , அம்மாவிற்கு தெரிந்தா திட்டுவாங்க! என்ன பன்றது?.. நானும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன், இதோ இப்போதுதான் வீட்டை விட்டு இவ்ளோ தூரம் வந்துட்டேனே.. அதுவும் பூனாவுல தனியா கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன்.. இந்த வாய்ப்பை விட கூடாது.. முடிவு செய்தேன்..

மதியமே அலுவலக வேலையெல்லாம் முடித்துக்கொண்டு 6.30 மணிக்கெல்லாம் கெஸ்ட் ஹவுஸ் வந்தேன்... மெதுவாக கெஸ்ட் ஹவுஸ் இன்சார்ஜிடம் பேச்சு கொடுத்தேன் ... அப்படி இப்படி சில விஷயங்களை பேசி விட்டு .. மெதுவாக "................" வேனுமே கிடைக்குமா?? ஆவலாக பதில் எதிர்பார்த்து காத்திருந்தேன்.. "நஹி சாப்" ஹிந்தியில் சொன்னான்..எனக்கு சற்று ஏமாற்றமாகத்தான் போனது... ஏன் என்றேன்..நான் கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்கனும்.. வெளில போக கூடாது சார், சாரி என்றான் இந்தியில்.

என்ன செய்ய இப்போ... நமக்கு மொழி தெரியாது, எப்படி போய் என்னனு கேட்கிறது?சரி எங்கே இருக்கும் சொல்லு நான் போயிட்டு .. ஹ்ம்ம்..... இங்கே ரூமுக்கு வந்து..... ஏதும் பிரச்சனை இல்லையே? சற்று இழுத்தேன்.. இல்ல சார் .ஒன்னும் பிரச்சினை இல்லை .. ஏற்கனவே இங்க தங்கின நிறைய பேர் பண்ணியிருக்காங்க..

அப்பாடா சந்தோஷம்.. ரெண்டு நாளா மழை, ஆனா இன்னைக்கு வெய்யில். கொஞ்சம் அதிகம் தான்.. .. இப்போ வேணுமா??.. இருக்கட்டுமே நல்ல அனுபவமாக தான் இருக்கும்...இன்னைக்கு ஓகே! அப்புறம் பின்னாடி ஏதாச்சும் பிரச்சினை வந்துட்டா.. அட அதெல்லாம் வராது... சீப் பா போனதானே .. நம்ம காஸ்ட்லியா தானே பார்க்க போறோம்.... மனதை தேற்றிக்கொண்டேன்.சரி இடத்தை கேட்டுக்கொண்டு, டிரஸ் செய்துக்கொண்டு கிளம்பி சென்றேன், சைகை பாஷை , அப்படி இப்படி அறைகுறை இந்தியில் பேசி, விலை எல்லாம் கேட்டு .. சரியாக எண்ணி கொடுத்து ..ஆஹா ! இதோ நான் கொஞ்ச நாளாகவே அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட்ட விஷயம் .. என் கையில் இப்போது .மனசு சந்தோஷபட்டது..

இங்கேயே ஆரம்பிக்கலாமா??ஐயோ! வேண்டாம் மனசு சொன்னது, கொஞ்சமாவது? ஹேய் என்ன அவசரம் .கைக்கு தான் வந்தாச்சே .. பொறுமையா ரூமுக்கு போய் அனுபவிக்கலாம்ல மீண்டும் மனசு சத்தம் போட்டது..

சரியென்று, மெதுவாக இடையை பிடித்து அருகில் கொண்டு வந்து.. "உனக்காக தான் இவ்ளோ நாள் ஐயா வெயிட்டிங்" என்று சொன்னேன்...

புரிந்திருக்குமா??? புரிந்தால் என்ன , புரியாட்டி என்ன...
கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தேன்.. என்ன சார் கிடைத்ததா?? கேட்ட இன்சார்ஜிடம் ஹ்ம்ம்ம் என சொல்லிவிட்டு ரூமுக்கு வந்து .. கட்டிலில் போட்டுவிட்டு ..கதவை தாழிட்டேன்...

கட்டிலில் அமர்ந்து , மீண்டும் இடையை கையில் பிடித்து, மேலிருந்த மூடியை (மூடியா?) எடுத்துவிட்டு, உதட்டோடு உதடு வைத்து அனுபவித்து உறிஞ்சினேன்...அடா அடா ! எவ்வளவு அருமை..

இந்த வெயிலுக்கு இதமா, ... மொத்தமாக உறிஞ்சி குடித்துவிட்டு , காலி பெப்சி பாட்டிலை கட்டிலில் வீசிவிட்டு டி வி யைப் போட்டேன்

இன்றைக்கு ரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு என்று சோதிக்க வில்லை.. அந்த இயந்திரத்தை வீட்டில் வைத்து மறந்து விட்டேன் போல இருக்கிறது.. டி வி யில் மாதுரி தீக்க்ஷித் சோளிக்குப் பின்னால் இருப்பதைப் பற்றி பாடிக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் மாதுரி அழகு தான்.

தினமும் ஒரு தரம் சாப்பிடும் மாத்திரையை இப்பொது சாப்பிட்டுவிடுவோம் என்று நினைத்தேன்.. செய்தேன். என்ன இருந்தாலும் சர்க்கரைத் தண்ணிர் தானே. திடீரென்று போன் அலறியது.. அம்மா..

"என்னடா சாப்புட்டியா.."

" சாப்டாச்சுமா.. தூங்கப் போய்க் கொண்டிருக்கிறேன்."

இன்றைக்கு பெப்சி குடித்த சந்தோஷத்தில் சாப்பிட மறந்துவிட்டது..அம்மா கிட்ட சொன்னா சர்க்கரை குறைந்து விடும் சாப்பிடு என்பார்.. எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் உணவகத்திற்கு.. சலிப்பாயிருந்தது.. பொய் சொல்லியாச்சு.

அது சரி மாத்திரை சாப்பிட்டேனோ? கரீஷ்மா செக்ஸி செக்ஸி என்று தன் பிரதாபத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள். புதுப் பட பாட்டு எல்லாம் போட மாட்டாங்களா? என்ன போச்சு.. இவ்வளவு பெப்சி குடித்திருக்கிறேனே.. சர்க்கரை எகிறி இருக்கும்..
மாத்திரையை சாப்பிட்டுவிடுவோம். படுத்துத் தூங்கினேன்.
காலையில் எழுந்து சென்னை போகவேண்டும் 6.30 க்கு விமானம். ******************************

விழித்துப் பார்த்தால்.. அட இது என்ன ஆஸ்பத்திரி போல இருக்கிறது.. என் அலுவலக நண்பர்கள் எல்லாம் இருக்கிறார்களே.. அட அம்மா.. மெதுவாகச் சொன்னார்கள்.. எனக்கு சர்க்கரை குறைந்து கோமா விற்குப் போய் விட்டேனாம்.. நல்ல வேளை கெஸ்ட் அவுஸ் இன் சார்ஜிடம் எது எப்படி போனாலும் காலைல விமானம் பிடிச்சே ஆகணும்.. தூங்கிட்டேன்னாலும் எப்படியாவது எழுப்பி விட்டுடுன்னு கைலையும் கொஞ்சம் கொடுத்திருந்தேன்..

அவன் தான் போலிஸைக் கூப்பிட்டு கதவை உடைத்து தற்கொலை முயற்சின்னு நினைத்து இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறான்.. 4 நாளில் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லி விட்டார்கள்.. சென்னை வந்து விட்டேன்.. அம்மா எதுவுமே சொல்ல வில்லை.. எனக்குத்தான் குற்ற உணர்வு. "ஒரு சின்ன சபலம்.. கொஞ்சம் அலட்சியம்.. அம்மா மன்னிச்சுக்கோ.." என்றேன்..

"உன் நல்லதுக்குத்தான் சொன்னேன்.. இனி நீயெ பார்த்து நடந்துக்கோ அது போதும்" என்றாள்..

இனி பெப்ஸி நிறுவனம் இருக்கும் பக்கம் கூடப் போகக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

வீ எம் / விச்சு

2 comments:

neyvelivichu.blogspot.com said...

திடீரென்று எதோ மணி அடிக்கும் சத்தம்.. எழுந்து பார்த்தால் அம்மாவிடம் இருந்து போன்..

பெப்ஸி பாட்டில்.. அட.. அதையே நினைத்துக்கொண்டிருந்த தால்.. கனவா.. சிரித்துக் கொண்டான்.. இன்னும் ஒன்றரை மாதம் தானே..

இப்படியும் முடிக்கலாம்..
அன்புடன் விச்சு
neyvelivichu.blogspot.com
வெற்றிகரமான நூறாவது பதிவை நோக்கி

வீ. எம் said...

hahahah really superb vichu..

nice relay race.. adhuvum u r in my team..

i am at the start , and u come in between to take over from there..
hope this combination will win..great !


vaazththukkal!

V M