Thursday, August 04, 2005

நம்பிக்கை 7

நம்பினேன் நம்புவேன்

அப்பாடி .. எட்டுவரியிலிருந்து மீண்டேன்.. எனினும்
தலைப்பு இன்னும் மாறவில்லை
மனதில் இருத்திவிட்டார் வெங்கிட்டு
உணர்வைத்தூண்டி விட்டார்
கவிதை எழுதுகிறேன் என்மனம் மகிழ்ந்திருக்க
படித்துப் பிடித்திருந்தால் கருத்தைக் எழுதிடுங்கள்

அன்புடன் விச்சு

வானிலே மேகமாய் விளைநிலப் பயிர்களாய்
தவழ்ந்திடும் மழலையாய் தாவிடும் மாக்களாய்
உயிர்களாய் பிரிந்தவன் உலகெலாம் நிறைந்தவன்
அணுவிலும் உளனாகி அனுதினம் காப்பவன்

தோல்வியும் வெற்றியும் தொடரும் வாழ்க்கையும்
கல்வியும் கலைகளும் கனவொடு நனவிலும்
தொலைந்ததும் கிடைத்ததும் தொழுததும் அழுததும்
உறைவது இறைவனில் கண்டனன் மெய்ப்பொருள்.

நம்பினார் கெட்டதாய் சரித்திரம் இல்லையே
நம்பினால் நல்லதே நாளெலாம் வெல்லுமே
நம்பினேன் இதுவரை நாளையும் நம்புவேன்
நல்லதே நடக்குமே நனினிலம் வாழுமே.

No comments: