Wednesday, January 04, 2006

என்னுடைய பிரச்சினை

மொத்ததில் எனக்குத்தான் பிரச்சினை போல இருக்கிறது.

நேற்று "கண்ட நாள் முதல்" என்று ஒரு படம் பார்த்தேன். திரும்பவும் நல்ல கதை, நடிப்பு.. மொத்தத்தில் நல்ல படம்..

ஆனால் அதிலும் கதாநாயகியுடைய சகோதரி கல்யாணத்துக்கு முன்னால் கர்ப்பமாகி விட்டு வீட்டை விட்டு ஓடிப் போகிறார்.. என்ன கொடுமையடா சாமி இது.. எனக்கு ஏன் இந்த சோதனை.. நான் பார்க்கும் படங்கள் மட்டும் தான் இப்படி இருக்கிறதா.. விமர்சனங்களில் நல்ல படம் என்று சொன்ன படங்களைத்தானே தேடிப் பிடித்துப் பார்க்கிறேன்.

அடுத்து உள்ளம் கேட்குமே, வணக்கம் தலைவா அல்லது கஸ்தூரிமான் இந்த மூன்றில் இது போல காட்சி அமைப்பில்லாத படம் எது என்று யாராவது சொல்லுங்களேன். அதைப் பார்க்கிறேன்.

ஒரு நண்பர் சொல்லியிருக்கிறார்.

குஷ்பு சொன்னது.."ஆள் கிடைக்கவில்லை என்றாலும் கடைத்தெருவில் நின்றாவதுபிடிங்க" என்று சொன்ன மாதிரி இருந்தது...

ஆனா சரியாப் பார்த்தா அப்படி குஷ்பு சொல்லவில்லை.. உங்கள் அடிமனதில் குவிந்திருக்கும் வக்கிர எண்ணங்கள் தான் சொல்லுகின்றன நண்பரே.. உங்களுக்கே நீங்கள் சொல்வது தவறு என்று தோன்றுவதால் தானே பெயரை மறைத்து பின்னூட்டமிடுகிறிர்கள்..

அது சரி குஷ்பு வுக்கு பண்பாடு கற்றுத்தருபவர்களுக்கு ஒரு கேள்வி.. மறப்போம் மன்னிப்போம்னு சொன்னதும் நம்ம பண்பாடு தானுங்களே.. வசதியா மறந்துட்டோமா.. என்னமோ மாமியார் மருமகள் மண்குடம் பொன்குடம்னு எதோ அசந்தர்ப்பமா நினைவுக்கு வருது..

கருத்து என்பது ஏப்பம் அல்ல யார் வேண்டுமென்றாலும் விடுவதற்கு என்று தலைவரே சொன்னபிறகு நான் எல்லாம் கருத்து சொல்லலாமா..
மன்னிச்சுக்கோங்க..

அன்புடன் விச்சு

Tuesday, January 03, 2006

குஷ்புவும் இயக்குனர் சேரனும்

சமீபத்தில் தவமாய்த்தவமிருந்து படம் பார்த்தேன்.

கதை நன்றாக இருக்கிறது. பலருடைய நடிப்பும் அபாரம். இவ்வளவு நேரம் இழுத்திருக்க வேண்டாமோ என்னமோ.

ஒரு விஷயம் உறுத்தியது.

திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொண்டால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளச்சொன்னதை எதிர்த்து ஊரைக்கூட்டிய (துடைப்பத்தோடும் தான்) தமிழ் பண்பாட்டுக் காவலர்கள், சேரன் படிக்கும் போதே உறவு வைத்துக் கொண்டு அந்தப் பெண் கர்ப்பமாகி வீட்டைவிட்டு ஓடிப் போவதாகக் காட்டியதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாதது ஏனோ.. (பாதுகாப்பாக உறவு வைத்தால் தான் தவறோ)

திரைப்படங்களில் புகை பிடித்தால் பார்ப்பவர்கள் மனது கெட்டு விடும் என்று கூறுபவர்களுக்கு, திரைப்படத்தில் திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொண்டால் மற்றவர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்று தோன்றாதது விந்தையே..

உங்கள் எண்ணத்தை எழுதுங்கள்..

அன்புடன் விச்சு