Tuesday, January 03, 2006

குஷ்புவும் இயக்குனர் சேரனும்

சமீபத்தில் தவமாய்த்தவமிருந்து படம் பார்த்தேன்.

கதை நன்றாக இருக்கிறது. பலருடைய நடிப்பும் அபாரம். இவ்வளவு நேரம் இழுத்திருக்க வேண்டாமோ என்னமோ.

ஒரு விஷயம் உறுத்தியது.

திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொண்டால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளச்சொன்னதை எதிர்த்து ஊரைக்கூட்டிய (துடைப்பத்தோடும் தான்) தமிழ் பண்பாட்டுக் காவலர்கள், சேரன் படிக்கும் போதே உறவு வைத்துக் கொண்டு அந்தப் பெண் கர்ப்பமாகி வீட்டைவிட்டு ஓடிப் போவதாகக் காட்டியதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாதது ஏனோ.. (பாதுகாப்பாக உறவு வைத்தால் தான் தவறோ)

திரைப்படங்களில் புகை பிடித்தால் பார்ப்பவர்கள் மனது கெட்டு விடும் என்று கூறுபவர்களுக்கு, திரைப்படத்தில் திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொண்டால் மற்றவர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்று தோன்றாதது விந்தையே..

உங்கள் எண்ணத்தை எழுதுங்கள்..

அன்புடன் விச்சு

4 comments:

Anonymous said...

உங்க கண்டுபிடிப்பு வித்தியாசமாக இருக்கிறது..

குஷ்பு சொன்னது.."ஆள் கிடைக்கவில்லை என்றாலும் கடைத்தெருவில் நின்றாவது
பிடிங்க" என்று சொன்ன மாதிரி இருந்தது...

இந்த படத்தில் வருவது இப்படி அர்த்தம் வராது..

இன்னொன்று குஷ்பு " திருமணத்திற்கு உறவு வைக்காதவங்க யார் இங்க" என்று கேட்டதும் கேவலமாக இருந்தது...அதையும் நீங்க பாருங்க.

ஜெ. ராம்கி said...

Whatever it is, Cheran is pure Tamilian and Kushboo is not... :-)

மகேஸ் said...

அய்யா ஆரம்புச்சிடீகளா, கொஞ்ச நாள் இந்த விஷயத்தை மறந்து இருந்தோம்.

Anonymous said...

Mr. Anonymous,

Kushboo sonna appadithaan irrukkum.

Padam paartha vera maathiri irrukkum. Neenga kanda vithyaasam visithram aaga irrukkirathu.

Niraiya saakadaiyal ulla naatta, clean panna mudiyaathu.

I wonder, if someone can please tell me how it is that Tamilnadu is second most infected from Aids in India, yet, people are all following culture(?)? Aanalum, Kushboo sonna kEvalam thaan anna:-)

-Kajan