Tuesday, August 23, 2005

99. சிறுகதை.. பயம்

வெளியில் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கத் தொடங்கியது... வழக்கம் போல இன்றும் நாகினி அம்மாவைப் படுத்தத் தொடங்கினாள்.. "அம்மா நானும் அவங்க கூட விளையாடப் போறேன்"
.
எத்தனையொ எடுத்துச் சொல்லியாகிவிட்டது.. அவங்க கூட எல்லாம் நாம விளையாட முடியாது..நம்மைப் பார்த்தால் அவங்களுக்கு பயம்.. அதனால் சேத்துக்க மாட்டாங்க.எத்தனை சொன்னாலும்.. "பரவாயில்லை நான் ஒரு தரம் போய் முயற்சி பண்ணிட்டு வந்துடறேன்" என்ன செய்யலாம் என்றே புரியவில்லையே..

இன்றைக்கு எதையோ சாப்பிடக் கொடுத்து பொழுதைக் கழித்தாகிவிட்டது..

இந்தக் குழந்தைக்கு யாராவது புரியம்படி சொல்லுஙகளேன்.. அவர்கள் அருகில் பார்த்து விட்டால் அடித்தே கொன்று விடுவார்கள்.
********************
அது ஒரு பெரிய வீடு.. ரொம்ப மரியாதையான குடும்பம்.. பல வருடங்களாக அந்த ஊரில் முதல் மரியாதை அவர்களுக்குத்தான்.. இரண்டு குழந்தைகள்..எல்லாம் நான்கு ஐந்து வயதிற்குட்பட்டவை.. வீட்டின் பின் கோடியில் வேலைக்காரனுக்கு ஒரு வீடு கொடுத்திருந்தார்கள். அவனுடைய குடும்பமும் அங்கே தான் இருந்தது. பெரிய வீட்டுக் குழந்தைகளோடு தான் நாகினியும் விளையாட வேண்டும் என்று ஆசைப் படுகிறாள்.. ஆனால்..

************

திடீரென்று வெளியில் ஒரே கூச்சல்..

"டேய் அதெல்லம் போய்த் தொடாதடா.. அப்பா திட்டுவா.."

முகுந்தன் கையிலெ எடுத்து தட்டாமலை சுற்றி தூக்கிப் போட்டான்..

"இதுவும் நம்ம ராமு மாதிரி தாண்டா.. ஒன்னும் ஆகாது.." முகுந்தன் பதில் சொன்னான்.

"வேண்டாம் நான் அம்மாவை கூப்பிடறேன். அம்மா இங்க ஓடி வந்து பாரேன்.. இந்த முகுந்தன் என்ன பண்றான்னு.." இது கிருஷ்ணன்.

அம்மா ஓடி வந்தாள்.. பார்த்து விட்டு அலறினாள்.. "டேய் முனியா.. "அத" அடிச்சு கொல்லுடா"

நாகினிக்கு இன்னும் புரியவில்லை.. நான் இவர்களோடு விளையாடினால் தப்பா.. அடி விழும் போது அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.. "அவர்களுக்கு நம்மைக் கண்டால் பயம்.. அம்மா சொன்னது சரி தானோ.." அடி பட்டு வலியில் உடம்பு துடிக்கிறது.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அடிக்கிறானே.. அம்மா காப்பாத்த வர மாட்டியா?

வாழும் பாம்பைக் கொன்றதால் விளக்கு வைத்து பதினோறு நாள் புற்றிற்கு பால் வைக்க வேண்டும் என்று பாட்டி சொன்னாள்.தாய் பாம்பு உயிருக்கு பயந்து வீட்டின் கடைசியில் இருந்த புற்றிலேயெ இருந்து கண்ணீர் விட்டது..

No comments: