Friday, August 19, 2005

97. சிறுகதை - இளமையில் கல்

"என்ன சார் ஒரு அஞ்சு ரூபா போட்டுக் குடுன்னு கேட்ட ரொம்பதான் கிராக்கி பண்ணிகிறியே.. ஒரு டீ சாப்பிடர காசு புள்ளைக்கு பால் வாங்கித் தர உதவும்.." இந்த வசனத்தில் மடங்கினார் பயணி..

அவனும் எத்தனை நாளாக ஆட்டோ ஓட்டுகிறான்.. யாரிடம் என்ன சொன்னால் பணம் பெயரும் என்று தெரியாத என்ன..

நன்றாக சுதி ஏற்றிக் கொண்டு.. வீட்டு வாசலில் விழுந்து கிடந்தான்..

******************************

முகத்தில் தண்ணீர் கொட்டி எழுப்பினாள் அவள்.. "ஐய, ரோட்டுல விழுந்து கெடக்குரியே.. ஒரு நாளப் போல இதெ பொழப்ப போச்சி.. ஒரு அஞ்சு பைசா தரியா வீட்டுக்கு.. நீ இருக்கறதுக்கு இல்லமாயெ போயிடலாம்"

பூக்கூடையுடன் நடந்து மார்க்கெட்டில் அவளுடய வழக்கமான இடத்தில் அமர்ந்து கொண்டாள்..

"ஏம்மா.. 3 முழம் பத்து ருபான்னு தாம்மா.. "

"இன்னிக்கி பண்டிக நாளும்மா.. எனக்கு கட்டாது.. கிலோ 23 ரூபா விக்குது பூ.. பேரம் பேசத தாயீ..உன் கையால போணி பண்ணு. நீ தர அம்பது பைசால கொழந்தைக்கு ஒரு வேளா கஞ்சி காச்சி ஊத்துவேம்மா.. உனக்கு புண்ணியமா போகும்.."

அருகில் வந்த "அது" "அம்மா முட்டாயி வங்க துட்டு தாம்மா"

"த போ.. அவ அவ உயிர விட்டு கூவி சம்பதிக்கரா.. முட்டாயி வேணுமாமில்ல முட்டாயி.. "

"அம்பது அம்பதா இன்னிக்கி ஒரு 10 ரூபா தேரிடுச்சு..தலைவர் படம் உன்னொருக்கா பக்கலாம்"..என்று தியெட்டர் பக்கம் போனாள்.

*****************************************

ஓட்டல் காவலாளி கத்திக் கொண்டிருந்தான்..

"எலே யாருடா அது.. ஓடிப்போ.. உன்னொரு தரம் பத்தென் மவனே போலிஸண்ட பிடிச்சி குடுத்துடுவேன்.."

அவனுக்கு போக்கு காண்பித்து விட்டு. வெளியில் வரும் கஸ்டமரிடம் ஓடினான் "அது".. "சார் ஒரு ஒரு ரூபா தா சார்.. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு.."

words 181. (நிஜமாவே ரொம்ப சிறு கதை)

No comments: