Friday, August 05, 2005

நம்பிக்கை கவிதை போட்டி(update)

முதல் பரிசு இவருக்கு (நம்பிக்கை கவிதை போட்டி)

எல்லக் கவிதைகளையும் தொகுத்து விட்டதாகத்தான் நினைத்தேன்.. நண்பர் சுட்டினார்..

சோமுவின் கவிதை முதல் ஐந்தில், தொகுப்பில் இல்லையெ என..

அய்யோ "அடேய் விச்சு" என்று அவர் வசனம் பேசி வரும் முன் அவர் கவிதை. ஏற்கெனவே மதிப்பெண் அளித்தவர்கள்.. இவரையும் கண்டுகொள்ளுஙள். (JPEG ஆக இருப்பதால் எங்கிருந்தோ சுட்டதாக நினைக்க வேண்டாம். அவர், அவர், அவரேதான் எழுதியிருப்பார்..நன்றி திருவிளையாடல்)

அன்புடன் விச்சு

1. கடைசியில் எழுதினான்
முதல் பரிசு பெறும் கவிதை
கிறுக்கி வைத்த வார்த்தைகள்
கிழிந்து போன காகிதங்கள்
நிறைந்துபோன குப்பைத்தொட்டி
தீர்ந்து போன பேனா மை
இவை சொன்ன கவிதையின் தலைப்பு
"கவிஞனின் நம்பிக்கை"

2. அன்று
கவலைப் படதே அம்மா
கஷ்டமே இல்லை அப்பா
படித்துவிட்டேன் ஐயா
டேய், இதுல ஒன்னுமே இல்லை
என்று சொன்ன நம்பிக்கை மாணவன்
இன்று பரிட்சை அறையில்
பிட் பேப்பருடன்

2 comments:

குழலி / Kuzhali said...

இரண்டும் கலக்கல் கவிதைகள் மிக நன்றாக இருந்தன

neyvelivichu.blogspot.com said...

nandri kuzhali, paaraattukkaL enakkalla, somuvukku..

anbudan vichchu