Wednesday, June 22, 2005

அப்படி போடு அருவாள - கற்பழிப்பும் பாரதப் பண்பாடும்.

அப்படி போடு அருவாள - கற்பழிப்பும் பாரதப் பண்பாடும்.

"அவன் ரேப் பண்ணியதற்குக் காரணம் அந்தப் பெண்தான். பசித்தவர்களுக்குச் சாப்பாடு பரிமாறுவதுதானே பாரதப் பண்பாடு.அவனுக்கு வேற பசி; சாப்பாடு போடச் சொல்லி அவளிடம் கேட்டுள்ளான். அவள் போடாததால், அவனே எடுத்துக் கொண்டான். அதனால் அந்தப் பெண்தான் குற்றவாளி "

தமிழை மட்டும் தான் காப்பாத்துவீங்களா.. தமிழ் பண்பாட்டையும் காப்பாத்துவீங்களா? இப்படி ஒரு கருத்தை பரப்பிய தமிழ் தொலைக்காட்சி வாழ்க.


கல்லூரி விடுமுறை என்பதால் என் இரு மகன்களுடன் அமர்ந்து, கடந்த 8_ம் தேதி டி.வி.யில் ‘‘சொர்க்கம்’’ தொடர் பார்த்துக்கொண்டு இருந்தேன். அதில் வந்த ஒரு காட்சி, என்னை அதிர வைத்தது

அசிஸ்டெண்ட் கமிஷனர் மரியா ஜோன்ஸிடம் தன் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க ஒரு பெண் வருவாள். பத்திரிகையைப் படித்துப் பார்த்த மரியா, ‘‘ஏம்மா உனக்கு வேற நல்ல பையனே கிடைக்கலையா? ஒரு கைதியைப் போய் கல்யாணம் பண்ணிக்கிறே? அவன் ஒரு பெண்ணை ரேப் பண்ணியுள்ளான்’’ என்று கூறுவார்.

அதற்கு அந்தப் பெண் அலட்சியமாக, ‘‘அவன் ஆயுள் தண்டனைக் கைதிதானே? தூக்குத் தண்டனை கைதி இல்லையே! அவனை சுலபமாக என்னால் வெளியில் கொண்டுவர முடியும். அவன் ரேப் பண்ணியதற்குக் காரணம் அந்தப் பெண்தான். பசித்தவர்களுக்குச் சாப்பாடு பரிமாறுவதுதானே பாரதப் பண்பாடு. அவனுக்கு வேற பசி; சாப்பாடு போடச் சொல்லி அவளிடம் கேட்டுள்ளான். அவள் போடாததால், அவனே எடுத்துக் கொண்டான். அதனால் அந்தப் பெண்தான் குற்றவாளி!’’ என அகம்பாவத்துடன் கூறுவாள்.

கல்லூரி செல்லும் பையன், பெண்ணுடன் அமர்ந்து இக் காட்சியைப் பார்க்கும் பெற்றோர் எவ்வளவு தர்மசங்கடமாக உணர்வார்கள். என்ன தான் அந்தப் பெண் அமெரிக்காவிலிருந்து வந்திருப்பதாகக் காட்டினாலும், அவளும் தமிழ்ப்பெண்தானே? தமிழர்களுக்கு என்று இருக்கும் சில பண்பாடுகளை, சீரியல் எடுக்கும் புண்ணியவான்கள் மறந்தது ஏனோ? தேர்ந்தெடுத்துப் பார்க்கும் ஒன்றிரண்டு சீரியல்களையும் இனி நிறுத்திவிட வேண்டும் போலுள்ளது. டி.வி. மெகா தொடர்களுக்கும் சென்சார் அவசியம்.

_ ச. ஜெயலெட்சுமி, சென்னை. கடிதம் குமுதத்தில் வந்தது.


மூன்றாம் மொழிப்போராளிகளே, இது போல தொடர் சன் டிவி ல வருதுன்ன பரவாயில்லை கண்டுக்காதீங்க.. கலைஞர் வீட்டு டிவில சொன்னா சரியாத்தான் இருக்கும். அடுத்த தேர்தல்ல தொகுதி கிடைக்காம போயிட போகுது... ஆங்கிலம் மட்டுமே நமக்கெதிரி.. தமிழ் பண்பாடு இன்னும் 25 வருடம் கழித்து பார்த்துக்கலாம்.

அன்புடன்

விச்சு..

1 comment:

NONO said...

சொந்த மனைவியையே உடல் உறவுக்கு வைப்புறுத்துவது/வண் புணர்ச்சிகொள்வது சட்டப்படி குற்றம்!

ஏன் நான் அறிந்த அளவில் அமேரிக்காவிலும் அப்பிடித்தான்!!!!!