Tuesday, June 21, 2005

அப்படி போடு அருவாள.. தலித் கட்சியில் பிராமணர்கள்..

அப்படி போடு அருவாள.. தலித் கட்சியில் பிராமணர்கள்..

ஓட்டு என்ன எல்லாம் செய்கிறது பாருங்கள்.. தம்மை தாழ்ந்தவர்களாக்கியவர்களுடனேயே கூட்டணி.

தமிழகத்தில் தம்மை காலில் போட்டு மிதிதுக்கொன்டிருந்த வன்னியர் மற்றும் முக்குலத்தோர் கூட கூட்டணி வைக்கலாம் என்றால்.. இதுவும் பரவாயில்லை.


காங்கிரஸ் கண்டுக்காத சமூகத்தினரை தங்கள் பக்கம் இழுக்கிறார் மாயாவதி

உத்தரபிரதேசத்தில் பிராமண சமூகத்தினரை கவரும் வகையில் சமீபத்தில் மாயாவதி மாநாடு ஒன்றை நடத்தினார். தலித் சமூகத்தினரை மட்டுமே நம்பியிருந்தால் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்காது என்பதால், மாயாவதி இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், பிராமண சமூகத்தினரிடையே இழந்த செல்வாக்கை மீண்டும் பெற வேண்டும் என கடந்த ஒரு ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தாலும் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. எல்லாம் பேச்சளவில் மட்டுமே உள்ளது. உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த பிராமண வகுப்புத் தலைவர் யாரையும் முக்கிய பதவியில் நியமிக்கவில்லை.


இந்த மாநிலத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் மற்றும் மகாவீர் பிரசாத் ஆகியோரும் பனியா மற்றும் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களே. மேலும், கடந்த ஒரு ஆண்டில் உ.பி.,யில் இருந்து மாநில கவர்னர்களாக நியமிக்கப்பட்ட ஏ.ஆர்.கித்வாய், சையது சிப்தே ரஸியும் முஸ்லிம் சமூகத்தினரே. மேலும், மாநில காங்கிரஸ் தலைவரான சல்மான் குர்ஷித்தும் முஸ்லிம் இனத்தவரே.

உ.பி., மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி கொஞ்சம், கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்கிறது. பிராமண சமூகத்தினரின் செல்வாக்கை பறி கொடுத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் அவர்களை புறக்கணிக்கிறது. இந்நிலையில், பல நுõறு ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டு வந்த தலித் தலைவர்களுக்கு பிராமண சமூகத்தினர் ஆதரவு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றே கூறப்படுகிறது. போகிற போக்கைப் பார்த்தால் மாயாவதிக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்றே தோன்றுகிறது. ஆதரவை அள்ளுவாரா மாயாவதி?

நன்றி தினமலர்

5 comments:

முகமூடி said...

பார்ப்பண பத்திரிக்கையான தினமலரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.... உங்க செய்தி என்னான்னு நான் இன்னும் படிக்கல விஷிதகிங்.... பார்ப்பணர்னு தலைப்பு... தினமலர் கடைசி வரி... சரி யாரோ இந்த டயலாக் அடிக்கத்தான் போராங்க... அதான் நான் முதல்ல இருக்கலாம்னு.... டயலாக் செய்திக்கு பொருத்தமா இருந்தா நம்மள ஒரு வரி பாராட்டுங்க - மருத்துவர் முகமூடி

முகமூடி said...

இன்னுமொரு விஷயம் மறந்திட்டேன்... (போற இடத்துல எல்லாம் விளம்பரம் பண்ணனும்னு ஐடியா :: உதவி ஞானபீடம்)

*********************
விளம்பரம்

தூங்கிக்கிடக்கும் தமிழனை தட்டி எழுப்பி ஒப்பாரி sorry வீரப்பாடல் பாடி இன்று முதல் தமிழகத்தை நாசமாக்க... ச்சே...

முன்னேற்ற உதயம்: பச்சோந்தி மக்கள் கட்சி

********************

neyvelivichu.blogspot.com said...

அடுத்த தேர்தலில் எல்ல இடங்களுக்கும் சொந்தக் காரங்க இருக்கங்களா.. நான் வேணா அமெரிக்காவையே தொகுதியாக்கி நிக்கவா..(தொகுதி சீரமைப்புல இதயும் சேர்த்து விட்டுருங்க) தமிழ்மணதில ஓட்டு பொட்டுடுவாங்க.. அப்படியே ஆதிகேசவன் போல தொழில் தொடங்கலாம்.. புஷ் கூட கூட்டணி வச்சி இந்தியாவ நல்ல வெலக்கி வித்துடலாம்..பில் கேட்ஸ் வாங்கிக்குவார்.

எப்படி திட்டம்..

விச்சு

முகமூடி said...

என்னங்க விச்சு, சுசாமிகிட்ட ட்ரெய்னிங் எடுத்த மாதிரி பேசறீங்க.... வுட்டா நம்ம கட்சியவே வித்துருவீங்க போல

மாயவரத்தான் said...

விச்சு.. உங்களுக்கு தெரியாததா என்ன? நம்ம முகமூடியார் (அரசியல் கட்சி ஆரம்பிச்சிட்டாரில்ல.. இனிமே இப்படி தான் கூப்பிடணும், இல்லாட்டி ஒரு மரியாதை மட்டு தெரியாதா, சூடு சொரணை கிடையாதா?ன்னு ரொம்ப மரியாதையா கேள்வி கேட்பாரு!) உண்மையில் சி.ஐ.ஏ.வின் ஏஜண்ட்.