Friday, July 29, 2005

மீண்டும் நம்பிக்கை

யாரிவர் என் கவிதை பொத்தானை தட்டிவிட்டவர்..

அன்புடன் விச்சு

மீண்டும் நம்பிக்கை

மண்ணில் விழுந்த விதைகளே மரங்களாய்
இலைகளாய் கனிகளாய் விதைகளாய் விறகுமாய்.
மனதில் விழுந்த நம்பிக்கை வெற்றியாய்
செயல்களாய் புதுமையாய் முயற்சியும் முடிவுமாய்

கண்ணில் விழுந்த காட்சிகள் வரைஞனின்
வண்ணக்குழம்பிலெ உலகமாய் உண்மையாய்
என்னில் எழுந்த சிந்தனை வாழ்க்கையில்
பொன்னிலே பொறித்திடும் சாதனை செயல்களாய்

No comments: