Thursday, July 14, 2005

அதிகார வர்கம் ஒரு சந்தேகம்

கீழ்க்காணும் கட்டுரையை உண்மை பத்திரிகையில் படித்தேன்.
சில சந்தேகஙள் எழுகின்றன..(இவை இந்தக் கட்டுரையிலிருந்து மட்டுமல்ல) யாராவது விளக்குங்கள்.

1. சாதி இந்துக்கள், ஆதிக்க வர்கம் இரண்டும் ஒன்றா.. அதில் இடம் பெறுபவர்கள் பிராமணர்கள் மட்டும் தானா அல்லது தேவர் நாடார் செட்டியார் படைஆட்சி வெள்ளாளர் கவுண்டர் முதலியார் நாயுடு போன்றவர்கள் (எனக்கு இவ்வளவு சாதிகள் தான் தெரியும்:)))) நிலச்சுவாந்தார்கள் தொழில் வியாபாரம் போன்ற வற்றில் சிறந்த இனங்களும் உண்டா?

2. அப்படியானால் இவர்களும் ஆரியர்கள் தான?

3. இல்லைஎன்றால் அவர்களும் ஆதி திராவிடர் என்ற பிரிவுக்குள் வருகிரவர்களா? அவர்களுக்கும் எ ஸி எஸ் டி பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு உண்டா..

4. நம் அரசர்களில் (அதிலிருந்து கடவுள்களாக மாறிய) யாருமே பிராமணர்கள் இல்லை என்று படிக்க நேர்ந்தது.. அப்படியானால் பிராமணர்கள் எப்பொதிலிருந்து ஆதிக்க ஜாதி ஆனார்கள்? கடவுள் களுக்கு நூல் மாட்டியது யார்? அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?

5. பிராமணரல்லாத அரசர்களும் மனு நேதி சாஸ்திரத்தை பின்பற்றியே அரசாண்டார்களா.. அப்போதும் கல்வி மறுப்பு, தீண்டாமை போன்றவை இருந்ததா. இது பற்றி சரித்திரக் குறிப்பு ஏதும் உண்டா.. இல்லை சென்ற நூற்றாண்டில் தான் பிராமணர்கள் ஆதிக்க ஜாதி ஆனார்களா?

6. தமிழகத்தில் இன்றும் பிராமணர்கள் ஆதிக்கம் நீங்கவில்லையா? 30 ஆண்டு திராவிட அரசாங்கங்கள் இதை மாற்ற முயற்சி செய்யவில்லையா? 100 சதவீத கல்வி, வேலை வாய்ப்பை தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கொடுக்கத் தடையாயிருந்தது எது?.. யார்?

7. சூத்திரர்கள் (டெக்னாலஜிச்ட், சூத்திரம் - தொழில் நுட்பம், சாத்திரம் - வழிமுறைகள். தொழில் நுட்பம் தெரிந்தவன் சூத்திரன் ஆனான் சாத்திரம் தெரிந்தவன் சாஸ்திரி ஆனான்) என்பது பிராமணர்கள் அல்லதவரைக்குறிக்கும் சொல்லா? க்ஷ்த்திரியர்களும் (அரசர் அமைச்சர் படை வீரர்கள்) வைசியர்களும் (வியாபாரிகள், பெரும்தனக் காரர்கள்) நல்ல சமுதாய அந்தஸ்தில் இருந்தவர்கள் தானே. அவர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள் உண்டா.. அது ஏன்?

8. அரசியல் லாபத்துக்காக ஜாதிகளை உபயோகப்படுத்துகிறார்களா.. அப்படியென்றால் அரசியல் கட்சிகள் இருக்கும் வரை ஜாதியை அழிக்கவே முடியாதே. இதற்கு என்ன முடிவு?

இன்று ஒருவர் இது பற்றி எழுதி இருந்தார் வலைப்பதிவில்.. அதிலிருந்து எழுந்த கேள்விகள் இவை.

உண்மையில் வந்த கட்டுரை கீழே படியுங்கள்.

அன்புடன் விச்சு.

இந்தியா முழுவதும் முஸ்லீம்கள் வாழ்கிற காரணத்தால் மத அடிப்படையில் இந்தியாவைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் ஜின்னாவுக்கு 1939 வரையில் ஏற்படவில்லை.

ஆங்கிலேயர்களின் ஆளுமையிலிருந்து இந்தியா விடுதலை பெற்றபின் இந்தி மொழிக்கும் ஆரியர்களுக்கும் அடிமையாக திராவிடர்களைப் போல முஸ்லீம்களும் இருக்க நேரும் என்று, அன்றைய நீதிக்கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியார் தலைமையில் பம்பாய் சென்ற 5 பேர் குழு 8- 1 - 1940 அன்று ஜின்னாவிடம் தெரிவித்தது. இந்த நிகழ்வில் அண்ணல் அம்பேத்கரும் கலந்து கொண்டார்.

1919-லேயே (12-8-1919 லண்டனில் பாராளுமன்ற குழுவின் முன்னால்) தென்னிந்தியாவுக்கு தனி டொமீனியன் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான சர். கே. வி. ரெட்டிநாயுடு, எழுப்பியதையும் அப்பேச்சின் போது இக்குழுவினர் நினைவு கூர்ந்தார்கள்.

இதற்குப் பின்னர்தான், முழுவதும் உருது மொழியை மட்டுமே பேசுகின்ற முஸ்லீம்கள் வாழுகின்ற சிந்து மாகாண பகுதிக்கு (இன்றைய பாகி°தான்) டொமீனியன் அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முகமது அலி ஜின்னாவால் எழுப்பப்பட்டது.

இத்தகைய சூழலில் இந்தியா முழுவதும் பரவியுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் (ஆதிதிராவிடர்) பாதுகாப்பு குறித்து கவலை கொண்ட பெங்களூர் ஆதிதிராவிட மகாஜன சபையினர், 10-6-1940 அன்று, பெங்களூர் கன்டோன்மென்டில் மாநாடு ஒன்றைக் கூட்டினார்கள். இந்த மாநாட்டில் அன்றைய ஆதி திராவிட மக்களின் தனிப்பெரும் தலைவராக விளங்கிய இரட்டைமலை சீனிவாசனார் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார்.

லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் ஆதிதிராவிட மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் இரட்டைமலை சீனிவாசனார் என்பதால், அவரிடம் இதுபற்றி கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய முக்கிய உரை தமிழாக்கம் செய்யப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது.

இந்த உரை ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு பெங்களூர் ஆதிதிராவிடர் மகாஜன சபையினரால் 12-5-1940 அன்று வெளியிடப்பட்டது ஆகும்.

கனவான்களே,
தாழ்த்தப்பட்ட மக்களின் கவனத்தைக் கட்டாயமாக அய்ரோப்பாவில் நடக்கும் போருக்கு அழைக்கும்போது, ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களின் எதிர்காலத்தின் மீது அது ஒரு நேரடி பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் முதலில் ஆக்ரமித்தது போல, இப்போதும் எதிரிகள் (ஜெர்மன்) வெற்றி அடைந்து இந்தியாவை ஆக்கிரமித்தால், புதிய ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற உயர்ஜாதி இந்துக்கள் செய்திகளை எல்லாம் தவறாகத் தெரிவித்து, அவர்களின் நல்லெண்ணத்தைப் பெற்று, பழமையான பழக்க வழக்கங்கள், ஜாதி மற்றும் மத நடைமுறைகளின் அடிப்படையில், தற்போது ஒடுக்கப் பட்ட பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் என்று அறியப்படும் இந்த நாட்டின் ஆதி இனமான திராவிட மக்களை ஒடுக்கவே முயல்வார்கள். இப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றால் எந்த வகை யிலேனும் ஆங்கில அமைச்சரவையிடமிருந்து ஆதிக்கம் செலுத்தும் அந்தஸ்தை ஜாதி இந்துக்கள் கோரி பெறுவார் கள்.

இந்தியாவில் உள்ள கோடிக்காணக்கான ஒடுக் கப்பட்ட, பிரிவு மக்களை அடக்கி ஆளும் கொடுங் கோன்மை நிறைந்த யதேச்சதிகார அரசை இவ்வாறு மீண்டும் கொண்டு வருவார்கள்.
நிலை இவ்வாறு தெளிவில்லாமல் இருக்கும்போது, இந்தியாவைப் பிரித்து இந்துக்களுடன் பகிர்ந்து கொள்ள முஸ்லிம்கள் ஓர் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்கள். இவ்வாறிருக்கையில், இந்த பங்கீட்டில் நாங்கள் எங்கே வருகிறோம், எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்பது மிகச் சரியானதே.

ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு விரட்டுவது என்ற உயர்ஜாதி இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வாதம் ஆங்கிலேயர் அன்னியர்கள் என்பதன் பலத்தின் மீது மட்டுமே நிற்பதாகும். இதே கருத்தை வைத்துக் கொண்டு பார்க்கும்போது, இந்தியாவை ஆங்கிலேயர்கள் வென்றடைந்திருந்தாலும் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் என்று கோரும் போது, இதே வாதத்தை முன்வைத்து முஸ்லிம்கள், இஸ்லாம் மதத்திற்கு மாறிய திராவிடர்கள், ஆரியப் பார்ப்பனர்கள், ஜாதி இந்து திராவிடக் குழுக்கள்(சூத்திரர்கள்), கிறித்துவர்கள், பார்சிகள் மற்ற பிறருக்கும் இந்தியாவின் மீது எந்தப்பிடிப்பும் இல்லை; அவர்கள் முற்றிலும் அந்நியர்கள் அல்லது தங்களின் முன்னோர்களின் மதங்களை விட்டு ஓடிச் சென்று அந்நிய நாட்டு மதங்களையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் ஏற்றுக் கொண்டவர்களே என்னும் சாதாரணமான காரணமே இதற்குப் போதுமானது. எனவே மண்ணின் மைந்தர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளத் தகுதி படைத்த ஒரே பிரிவு மக்கள், அட்லாண்டிக் நிலப் பகுதியில் வாழ்ந்தவர்கள் (சிந்து) முதல் இமயமலை அடிவாரத்திலிருக்கும் கங்கை, பிரம்மபுத்திரா சமவெளியில் வரை பரவியுள்ள, தற்போது 10 கோடி மக்கள் தொகை கொண்டுள்ளதாக சுமாராக மதிப்பி டப்பட்டுள்ள, இனக் கலப்பின்றி திராவிட இனத்தின் வழிவந்த, தற்போது தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் என்று அறியப் பட்டுள்ளவர்கள் மட்டும்தான்.

திராவிடர்கள் தங்களின் வளமான நாட்களில் ஓர் உயர்ந்த கலாசாரம் படைத்த இனத்தைச் சேர்ந்தவர் களாக இருந்தனர். அவர்களின் மொழியும் மதமும் தமிழ் மட்டுமே. ‘தங்கக் கதவுக் கோட்டை’ என்ற ழைக்கப்பட்ட ஒரு கோட்டையையும், காற்றின் சக்தி யால் செயல் படும் ‘ஆகாய விமானம்’ என்னும் விமா னங்களையும் அவர்கள் பெற்றிருந்தனர். அவர்களின் கலாசாரம், நாகரிகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டு விட்டதென் றாலும், இந்த மண்ணின் உண்மையான மைந்தர்கள் யார் என்பதைத் தேடி அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்று கண்டுபிடிக்கக் கோரி வலியுறுத்த அவர்கள் அனைத்து உரிமையும் பெற்றுள்ளனர்.

நமது நாட்டைத் திரும்ப நாமே எடுத்துக் கொள்ளத் தயாராக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதார நிலை ஆகியவை மற்ற ஜாதி மக்களின் நிலைக்கு உயரும் வரை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நாம் கோருகிறோம். அப்போதுதான், அப்போது மட்டும் தான், எந்தக் கலப்புமற்ற பண்டைய திராவிட இனத் தின் வழிவந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம் இந்தியா வின் நிர்வாகச் சாவியைக் கொடுத்து விட்டுச் செல்ல மேதகு இங்கிலாந்து நாட்டின் அரசரால் இயலும்.

இதற்கிடையே இந்த உலகப் போரில் நேசநாடுகள் விரைவில் வெற்றிபெற வேண்டும் என விரும்பும் நாம் நமது கோரிக்கைகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

No comments: