Thursday, July 28, 2005

நம்பிக்கை 3

நம்பிக்கை 3

கண்ணில்லதவர் பாடிப் பிழைத்தார்
காலில்லதவர் கடையொன்றமைத்தார்
சொல்லில்லா ஊமை செவிகேளா மனிதர்
கையாலே பேசி வாழ்வைப் பிழைத்தார்

ஏழ்மையும் துன்பமும் வாழ்க்கையை நிறுத்துமோ
சோம்பி திரிந்திடல் வாழ்விற்கடுக்குமோ
உடலிலே ஊனம் உள்ளத்தில் இல்லை
உன்னைநீ நம்பினால் வானமே எல்லை.

அன்புடன் விச்சு

3 comments:

Narayanan Venkitu said...

Fantastic vichu....very true indeed.!

Good luck

Woodooz said...

Simply awesome ! Liked it a lot !

வீ. எம் said...

விச்சு,
நல்ல வரிகள், ஆழமான கருத்து !
வீ எம்