Saturday, September 17, 2005

மீண்டும் சுஜாதா..

கற்றதும் பெற்றதும் எழுதி சுஜாதா எதைப் பெற்றரோ இல்லையோ நிறைய சர்ச்சைகளைப் பெற்றிருக்கிறார்.

சில காலம் முன்பு வலைப்பதிவில் சுஜாதா சொன்னது தவறு என்று பல பதிவுகள் காணக் கிடைத்தது.

இப்பொது காலச்சுவடில் ஒரு கட்டுரை. http://tamil.sify.com/kalachuvadu/aug05/fullstory.php?id=13911806
படித்துப் பாருங்கள்.. அதைப் படித்ததும் எனக்கும் சில கருத்துக்கள் தோன்றின..

1. "நிச்சயம் இருக்கலாம், நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள் போல! முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபýக்கும்.
யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். அல்லது வெள்ளைக் கோபுரத்தில் ஏறி இரண்டு ஜீயர்களும் அழகிய மணவாளதாசர் என்பவரும் தற்கொலை செய்துகொண்ட செய்திகூட ஒளிந்திருக்கலாம்.'(ஆனந்த விகடன் 17.4.05)

அவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களாக இருக்கும். ஆதாரம் காட்டுங்கள் ஆதாரம்!!

கோம்பை எஸ். அன்வரின் கடிதம்: "விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்"

2.நம்மை ஆண்ட ஜரோப்பியக் காலனிய ஆதிக்கவாதிகள் பிரித்தாளும் சூழ்ச்சியோடும் மத ரீதியாகப் போரிட்ட தங்களுடைய வரலாற்றின் பிரதிபýப்பாக இந்திய வரலாற்றை எழுதும்போது தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகளுடன், பாரபட்சமாகவே எழுதியுள்ளனர் என்பதை நன்கறிந்தவன் நான். அத்தகைய வரலாற்றைக் காலனிய ஆதிக்கத்திýருந்து விடுதலை பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நம்மவர்கள் சிலர் அறியாமையிலும் பலர் அரசியல் சுயநோக்குடனும் பின்பற்றிவருகின்றனர். இத்தகைய தவறான வரலாற்றுத் தகவல்களால் நாம் இந்தியப் பிரிவினை, மதக் கலவரங்கள், பாபர் மசூதி இடிப்பு என்று அதன் பலனை இன்னமும் அனுபவித்துவருகின்றோம்.

அப்படியே கீழ ஒருத்தர் எழுதி இருக்காரு பாருங்க.. இதே இங்கிலீஷ் காரன் எழுதிய சரித்திரம்..

3. 'முகம்மதியர்கள் படையெடுப்பு' என்ற வார்த்தைப் பிரயோகமே தவறானது, மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் படையெடுப்பு என்ற வார்த்தை கொலை, கொள்ளை போன்றவற்றையே நமக்கு நினைவுபடுத்தக்கூடியது. அது மட்டுமன்றி முகம்மதியர்கள் படையெடுப்பின் மூலம் மட்டுமே இந்தியாவிற்கு வந்தனர் என்ற தவறான கருத்தையும் இது சித்தரிக்கின்றது.

தமிழகத்திலேயே வாழ்ந்தது மட்டுமல்லாமல் தமிழக அரசர்களின் படைகளில்கூடத் தமிழக முஸ்ýம்கள் இடம்பெற்றிருந்தபோது 'முகம்மதியப் படையெடுப்பு' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகத் தவறானதாகவே படுகின்றது.

அட அப்படிஎல்லாம் நடக்கவே இல்லைங்க.. எல்லா முஸ்லிமும் இந்தியாலயே தான் உற்பத்தியானாங்க.. சிவாஜி குரு கோபிந்த்சிங் எல்லாம் வெள்ளக் காரன் எழுதின கதை. இந்தியாவில எந்த முஸ்லிம் அரசரும் படைஎடுக்கவே இல்லை.. இந்துக்கள் வரலாறை மாற்றி எழுதிவிட்டாங்க..

4. தவிரவும் இந்திய வரலாற்றில் 'முகம்மதியர் படையெடுப்பு' என்றால் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு என்ற மாயை உள்ளது. வரலாற்றைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் சேர, சோழர், பாண்டியர், சாளுக்கியர், ஹொய் சாலர்களின் படையெடுப்புகளிலும் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு மற்றும் சிலைகளை அபகரித்தல் போன்றவை நடந்தேயுள்ளன.
11ஆம் நூற்றாண்டில் சோழர்களின் படையெடுப்பு குறித்து அங்கலாய்க்கும் மேற்கு சாளுக்கியக் கல்வெட்டுக்களைப் படித்துப் பாருங்கள். அதேபோல் 15ஆம் நூற்றாண்டில் கýங்க மன்னன் கபிலேஸ்வர கஜபதியாவானின் தமிழகப் படையெடுப்பில் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டு அங்குள்ள ஆபரணங்களும், சிலைகளும் அபகரிக்கப்பட்டன. இதுபோல் எண்ணற்ற ஆதாரங்களுடன் கூடிய வரலாற்று நிகழ்வுகளை எம்மால் எடுத்து வைக்க இயலும். ஆனால் இது அன்றைய கால கட்டத்தின் இயல்பு என்பதாலும், ஆறிப்போன இரணங்களை மீண்டும் கிளறுவதாக அமையும் என்ற பொறுப்புணர்வினாலும் தவிர்க்கிறோம்.

பாத்தீங்களா.. எத்தனை மன்னர்கள் செஞ்சிருக்காங்க.. முஸ்லிம் மன்னர்கள்செய்ததும் அதுதான்.. இதுக்கு போய் தப்பு சொல்லிகிட்டு..

அது சரி.. முதல் பத்தில இதெல்லாம் பொய்ன்னு சொல்லிட்டு அடுத்த பத்தில மத்தவங்களும் செஞ்சிருக்காங்கன்னு எழுதினா என்ன அர்த்தம்?

5.இத்தகைய சிந்தனையுடனே திரு. சுஜாதா மேற்கோள் காட்டியுள்ள 'கோயில் ஒழுகு' நூலை பெறப்பெற்று வாசித்தோம். முதýல் கண்ணில்பட்டது எண்ணிக்கைப் பிழை. நூýல் குறிப்பிடப்பட்டுள்ள 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள், 13,000 ஆக சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் உயர்ந்திருக்கிறார்கள். இதனை அச்சுப் பிழை என்று ஒதுக்கிவிடலாம்.

பதிமூன்றாயிரமா?.. பன்னிரெண்டாயிரம் பேர் தான் செத்தார்கள்.. அதனாலென்ன.. ஆயிரம் பேரை அதிகமாக கொன்ற சுஜாதா ஒழிக.

6. நூலைப் புரட்டுகையில் இன்னொரு குறிப்பும் நமது கண்ணில்பட்டது. பக்கம் 468இல் 'பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக் கலகம்' என்பது 'பன்னீராயிரம் குடிமக்களுடைய தலையைத் துண்டிக்கப்பட்ட நிகழ்ச்சி என்று பொருள்படும்' என்று விளக்கம் காணப்படுகிறது. ஆக 12,000 குடிமக்கள் ஸ்ரீவைஷ்ணவர்களாக அவதாரம் எடுத்துவிட்டனரா என்று தெரியவில்லை.

சுஜாதாவும் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். வைஷ்ணவர்கள் எல்லாரும் பிராமணர்கள் அல்ல.. உதாரணம் காந்தி.. திருப்பதி பாலாஜியை வழிபடும் பெரும்பாலானவர் வைஷ்ணவர்கள் தான். அது சரி.. சாதாரணமக்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா..

7. இவ்வாறாகப் பல கேள்விக்குரிய முரண்பாடுகளுடன், சங்கப் பரிவாரத்தின் பத்திரிகையான 'பாஞ்சஜன்ய'த்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவந்த 'கோயிலொழுகு' நூல் ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாச்சார்யர்

உண்மை இதோ.. அவர் பஞ்ஜஜன்யத்தில் கட்டுரை எழுதினால் அவருடைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை.

8. ஜெ. ராஜா முகமதுவின் கடிதம்: 'ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ' ஆனந்த விகடன் 17.4.05 இதழில் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் சுஜாதா வைஷ்ணவஸ்ரீ எழுதியுள்ள ஸ்ரீரங்கம் தல வரலாறு கூறும் கோயில் ஒழுகு புத்தகத்தில் வரும் செய்திகளை அலசியுள்ளார். ஸ்ரீரங்கத்திற்குத் சித்திரைத் தேர் இழுக்க வரும் கோவிந்தா கூட்டம் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் பிரதிபýக்கக்கூடும் எனவும், கி.பி. 1323இல் முகம்மதியர் படையெடுப்பின்போது 13,000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம் எனவும் தனது விபரீதக் கற்பனையைக் கடைவிரித்துள்ளார்! வரலாற்று நூல்களில் காணாத விஷயம்!

இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததா? 1323இல் டெல்ý சுல்தான் முகம்மது பின் துக்ளக் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு மதுரையில் ஆட்சியமைத்தார். இந்தப் படையெடுப்பின்போது முஸ்ýம்களின் படை ஸ்ரீரங்கம் சென்றது குறித்தும் அங்கு 13000 வைஷ்ணவ பிராமணர்களைக் கொன்றது குறித்தும் முஸ்ýம் வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பில் செய்தி ஏதும் இல்லை. சமகாலத்துத் தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பிலும் செய்தி ஏதும் இல்லை.

ஆறாவது குறிப்பை பாருங்க.. அன்வர் எதோ ஒரு செய்யுளுக்கு விளக்கம் குடுத்திருக்காரே.. அது சமய குறிப்பா.. சரி சரி.. வரலாறு இல்லை..



9. அப்போது 13000 வைணவ பிராமணர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற புள்ளி விவரத்தை எந்த சென்சஸ் புத்தகத்திýருந்து சுஜாதா எடுத்தார்?

10. திருவரங்கன் திருமேனியைக் கண்டு காதல் கொண்டு தனது காதல் நிறைவேறாததால் ஸ்ரீரங்கம் வந்து செத்து மடிந்த டில்ý சுல்தானிய இளவரசிக்கு ஸ்ரீரங்கம் கோவிýல் துலுக்க நாச்சியார், பீவி நாச்சியார் என்ற பெயரில் இன்றும் வழிபாடு நடைபெறுகிறது. இதை 1961இல் வி. ஹரிராவ் எழுதியுள்ள ஸ்ரீரங்கம் கோவில் ஒழுகு சிறப்பித்துக் கூறுகிறது. இது சமய நல்ýணக்கம் நிமித்தம் ஏற்பட்ட பாசமும் நேசமும் நிறைந்த கதையாகக்கூட இருக்கலாம். இதை ஏன் சுஜாதா கண்டுகொள்ளவில்லை? வெட்கமா?

துலுக்க நாச்சியாரோட தான் தினமும் காலை உணவு இன்னிக்கும் திருவரங்கத்தில.. ரொட்டிதான் சாப்பிடரார்.. அது சரி அதுக்கும் இதுக்கும் என்னங்க தொடர்பு.. விட்டா ஜார்ஜ் புஷ் கெட்டவர்னு எழுதினாரா சுஜாதா இந்த கட்டுரைலன்னு கேட்பீங்க போல இருக்கே

11. இந்திய இனங்களுக்கிடையே பகைமைத் தீயை உண்டாக்க 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் திட்டமிட்டு இந்திய வரலாற்றைத் திரித்து எழுதினர். இதன் ஒரு பகுதிதான் மாýக் காபூர் படையெடுப்பு குறித்த செய்தியும்! இது குறித்து நமது நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மேலாய்வு செய்யாமல் கிளிப்பிள்ளைகளாக இருந்து வந்துள்ளனர். உண்மை புதைந்து போயிற்று! ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ இன்னும்கூட எரிந்துகொண்டுதான் இருக்கிறது. தனது பங்கிற்கு சுஜாதாவும் கொஞ்சம் நெய் அபிஷேகம் செய்திருக்கிறார்! சுஜாதாவிடம் ஆதாரம் இருந்தால் காட்டட்டும். ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் தயார்.

யாரோ மசூதில சொல்லி கொடுத்தி சொல்லராப்போல இல்ல எல்லாரும் ஒரெ கருத்த சொல்லராங்க.


சுஜாதாவின் எதிர்வினைகள்

12. "இப்போது தயங்குகிறேன்'ஆனந்த விகடன் 1.5.05 மற்றும் 17.4.05 இதழ்களில் பிரசுரமான க-பெ விஷயங்களுக்கு வந்த கடிதங்களில் குறிப்பிடத்தக்கவை இவை ...
... அடுத்து, குறும்படம் தயாரிக்கும் கோம்பை எஸ். அன்வர் நுங்கம்பாக்கத்திýருந்து ஒரு நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார். 'கோயில் ஒழுகு' பிரதியை வாங்கி வாசித்ததாகவும், 'அதில் 12,000 பேர் கொல்லப்பட்டதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. 13,000 என்று ஒரு ஆயிரம் ஜாஸ்தியாகச் சொல்ýவிட்டீர். குடிமக்கள் தலைதான் வெட்டப்பட்டதாக அந்த நூýல் உள்ளது. எப்படி அவர்களை ஸ்ரீவைஷ்ணவராக்கினீர்? மொத்தச் செய்தியின் சரித்திர ஆதாரமே தப்பானது. முரண்பாடுகள் கொண்டது. இது போன்ற ஆதாரமற்ற கருத்துக்களை முன்னிலைப்படுத்துவது விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்' என்று எழுதியுள்ளார்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் என்றால் அந்தணர்கள் மட்டுமல்ல, திருமாலைத் தொழுபவர்கள் அனைவரையும் அப்படிச் சொல்வோம். அவர்கள் காலைப் பிடித்துக் கொள்வோம்! பார்க்க எ.பி.க.

தமிழ்க் கொலை, விஷவித்து, விபரீதக் கற்பனை விரிப்பு ... இன்னும் என்னவெல்லாம் பரிசுகள் காத்திருக்கின்றனவோ! ஒன்று மட்டும் சொல்ல முடிகிறது ...

இந்தப் பகுதி மிக மிக உன்னிப்பாக மிகப் பலரால் படிக்கப்படுகிறது. எப்படாப்பா தப்பு வரும் என்று ஜனங்கள் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, முஸ்ýம்கள் பற்றி எதுவுமே சொல்லக் கூடாது.

அது தான் உண்மை.. முஸ்லிம் களைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது. உ.பி அளவு முஸ்லிம்கள் இங்கெ இல்லை. இருந்தால் இது ஒட்டு தரும் ஒரு அரசியல் பிரச்சினை ஆகி சுஜாதாவுக்கு தூக்குக் கயிறு மாட்டியிருப்பார்கள்.

சானியா மிர்சா அணியும் உடையை மாற்றா விட்டால் கொல்கொத்தாவில் விளையாட விட மாட்டோம் என்று ஒரு கும்பல் மிரட்டி இருக்கிறது. கேட்டால் நமது வலைப்பூ அன்பர்கள் அவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள்.. ஆனால் இந்துக்களைப் பற்றி பேசும் போது ஷிவ சேனாவும் குஜராத்தும் தான் குறிப்பிடப்படும்.. கோவையிலும் இந்துக்கள் தான் குண்டு வெடித்தார்கள்..

எங்கேயோ இடிக்கிறதே.. 90 சதவீதம் எப்படி இருக்கிறார்கள் என்பது தான் இனத்தின் அடையாளம்.. தேடிப் பாருங்கள்.. தெரியும்.

3 comments:

erode soms said...

ஒளிதரும் நெய்வேலிக்காரருக்கு வணக்கம்
சுஜாதாவை கொஞ்சம் கதையடிப்பார்
என நினைத்தேன்,நன்றாகவே ...

ரவி ஸ்ரீநிவாஸ் said...
This comment has been removed by a blog administrator.
அரவிந்தன் நீலகண்டன் said...

Great posts! Superb sense of humor! THank you.