Thursday, June 30, 2005

எனக்குப் பிடித்த பத்து படங்கள்

* சந்திரலேகா.. இவ்வளவு பெரிய ஒரு படத்தை அன்றைக்கு இருந்த தொழில் நுட்பத்துடன் எடுத்தது ஒரு பெரிய சாதனை.

* காதலிக்க நேரமில்லை.. நகைசுவைக்கு எடுத்துக்காட்டு

* வேதம் புதிது - துணிந்து உண்மையை சொன்ன படம்

* நாயகன் - ஒரு உலக தரமான படம்

* அழியாத கோலங்கள் - நெஞ்சில் இட்ட கோலம்.. அழிவதில்லை (ஷோபாவும் தான்)

* மூன்றாம் பிறை - sriதேவி கமல் போட்டி போட்டு நடித்த படம்.

* பாட்ஷா - தலைவர் தலைவர் ஆன படம்

* உலகம் சுற்றும் வாலிபன் - முழு பொழுதுபொக்கு படம்.

* தண்ணீர் தண்ணீர் - ஒரு பிரசினையைத் தத்ரூபமாகக் காட்டிய படம்

* மகாநதி - மனதை உலுக்கிய படம் (உன்னொரு முறை பார்க்க மாட்டேன்)

* வீர பாண்டிய கட்டபொம்மன் - ஏதும் சொல்ல வேண்டுமா என்ன.

* பாரதி

* காமராஜ்

பிற மொழிகள்
1. காந்தி எல்ல தேசிய தினஙளிலும் காட்டப் பட்டாலும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் படம்

2. ஈடி இது ஒரு வகை சந்தோஷம். ஸ்பீல்பெர்க் படஙள் எல்லமே வரும் இந்த வரிசையில் கலர் பர்பிள் (color Purple) உட்பட

3 DDLJ - என் காதல் கதை

4. மா பூமி - இன்னும் இந்த நிலையில் ஏழைகள் இருக்கிறார்கள் என்று உணர வைத்த படம். ஏதாவது மாறியதா என்றால் இல்லை

5. சிதம்பரம். சித்திரை மாதம் திருவாதிரை நாள். மனதில் நின்ற படம்

6. சங்கராபரணம் - எஸ் பி பி ஸோமயாஜுலு விஷ்வநாத் மஞ்ஜு பார்கவி கலக்கல்

7. மரோ சரித்ரா - கும்பகோணத்திலேயெ ஒருவருடம் ஓடிய படம் (இதனால் எக் துஜெ கெலியெ இல்லை)

8. லகான் - ஒரு வித்தியாசமான படம்

9. சுவாதி முத்யம் - மனதைத் தொட்ட உன்னொரு விஷ்வநாத் படம்

10. புஷ்பக். இது என்ன மொழிப்படம்?

எத்தனையொ படஙள் இடப்படவில்லை.. பத்து என்ற எண் (11 ஆனது மேலே) பெரிய கட்டுப்பாடு..

அன்புடன் விச்சு

பாவம் பெண்கள்

காஞ்சி பிலிம்ஸ் போலச் செய்ய வேண்டும் என்று ஆசை தான்.. இது விடுதலை நாளிதழில் படித்தது.

இங்குள்ள எல்லா பெண்களையுமே சூத்திரர்களாக பாவித்தது மநு.

இன்றுகூட... என்னை சந்தித்து வேத விளக்கங்கள் பெற வரும் பிராமணப் பெண்களிடம் `நீ சூத்ரச்சி... உன் அம்மா சூத்ரச்சி... உன் பெண்ணும் சூத்ரச்சி...’ என்று கூறுவேன்.உடனே அவர்கள் மெல்லியதாக கோபப்பட்டு `எப்படி?’ என்பார்கள். நமது °மிருதியிலேயே இதுதான் விதி என சொன்னதும் `அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையோடு அடங்கிப் போய் விடுகிறார்கள்.ஆக...

மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது.

அதனால்... சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.அதாவது...

``°ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்...’’

பெண்கள் அனைவரும் சூத்ர ஜாதி.

`நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம்...’

அதனால்... பெண்களும், சூத்ரர்களும், வேதங்களை ஓதக்கூடாது. வேத ஓசையை கேட்கக்கூடாது. யாகங்கள் நடந்தால்... அதில் ஓதப்படும் வேத மந்த்ரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடைவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும்.

பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது.

33 சதவீத ஒதுக்கீடு என்ன ஆச்சு..

பொறியியல், முதுகலை போன்ற கல்வி கற்ற பின்னரும் பொரியல் மட்டும் செய்யும் பெண்கள் இருக்கிறார்கள். வேலைக்குப் போனாலும் திரும்பி வந்து சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என்று எல்ல வேலைகளயும் அவர்களே செய்யவேண்டிய நிலைதான். இன்றைக்கும் பலருக்கும் இதே நிலை தான் ஒரு சில பெண்கள் தவிர..

"அவர்கள்" சாத்திரம் என்று சொல்லிக்கொண்டு செய்கிறார்கள் மற்றவர்கள் "அவர்களை" திட்டிக்கொண்டு செய்கிறார்கள்.. அது தான் வித்தியாசம்..

இன்று செய்திதாள்களில் ஒரு பெண் விருப்பமின்றி திருமணம் செய்து வைத்ததால் தற்கொலை செய்துகொண்ட செய்தி வந்திருக்கிறது.

"கனாக் கண்டேன் " படம் போல எத்தனை பேரால் தப்பிக்க முடிகிறது.

அன்புடன் விச்சு

குறிப்பு

முதலில் இட்டிருந்த பதிப்பு காணாமல் போன காரணத்தால் அதே பதிப்பை மீண்டும் இட்டிருக்கிறேன்

நேர்காணல் - என் கேள்விக்கென்ன பதில்

அருண், ரங்கா, முகமூடி, டோண்டு மாமா, குழலி, பாஸ்டன் பாலா, மாயவரத்தான் உட்பட யார் வேண்டுமானாலும் பதில் தரலாம். உங்கள் பதில்கள் நல்ல சில கருத்துக்களை தமிழ் மணத்தில் பரப்ப வெண்டும் என்பதே நோக்கம்..,

உங்கள் வலைப்பதிவில் பதில் தந்தால் இந்த பதிவில் தயவு செய்து குறிப்பிடுங்கள்

ஷ்ரெயாவின் கேள்விகள், துளசி அக்கா சார்பில் என் பதில்கள்.

1. யாருடைய கண்ணிலும் தெரிய மாட்டீர்கள் (invisible) என்றால் என்னென்ன செய்வீர்கள்?அப்புறம் என்ன பயன். யாராவது கூட இருந்தாதானே மகிழ்ச்சியே. எல்லார் கண்ணிலும் தெரிவது எப்படின்னு கண்டு பிடிப்பேன்.

2. புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்?அக்ஷய பாத்திரமாக இருக்கும்.. பசி தான் பெரிய கொடுமை.. அது இல்லமல் இருந்தால் பாதி பிரச்சினை இருக்காது.

3. உங்களுடைய முதல் ஞாபகம் என்ன?என் முதல் ஞாபகம் என் தங்கையுடன் விளையாடியது. இப்போது ஞாபகம் மட்டுமே மிச்சம்.

4. உலக வரலாற்றிலே எந்தக் காலகட்டத்திற்குமோ, அல்லது குறித்த ஒரு சம்பவத்திற்கோ 'செல்ல' முடிந்தால், எந்தக் காலம்/சம்பவத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
அப்படி எந்த காலத்திலும் பாலும் தேனும் ஓடியதாகத் தெரியவில்லை. பணக்காரர்களின் கதை மட்டுமே வரலாறாகிறது. ஏழைகளின் வாழ்க்கை இன்று இருப்பது போலவே தான் இருந்திருக்கும். இன்றைய தினமே மகிழ்ச்சியான நாள். இதைத்தான் கொண்டாடுகிறேன். கொண்டாடுவேன்.

5.கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து?மருந்து அடித்து கொல்கிறேன் என்றால் குழந்தை இருக்கு ஆஸ்ப்ரின் போட்டுத் துரத்தலாம் (எதோ ஒரு மகளிர் பத்திரிகையில் வந்த குறிப்பு) என்று மனைவி கூறுகிறார். திருமணம் ஆன பின் மனைவி கருத்தே என் கருத்து (குறைந்த பட்சம் வீட்டு விவகாரங்களில்)

நான் கேள்வி கேட்டால் இப்படித்தான் இருக்கும்.

1. நமக்கு அரசியல் வாதிகள் தேவையா?

2. ஈழம் தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமாக இருந்தால் எப்படி இருக்கும்

3. ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஆனால் என்ன செய்வீர்கள்? (வேண்டாமென்றால் அமெரிக்காவின் அதிபராக என்று வைத்துக்கொள்ளுங்கள்)

4. ஒருவரை அழித்தால் உலகம் நாளை முதல் மகிழ்ச்சியாக இருக்கும் என்றால் நீங்கள் யாரை அழிப்பீர்கள்.. ஏன்?

5. உங்களுக்கு மூன்று வரம் தருகிறது ஒரு தேவதை.. உங்களுக்கு என்று எதுவும் கேட்கக்கூடாது. என்ன கேட்பீர்கள்.

அருண், ரங்கா, முகமூடி, டோண்டு மாமா, குழலி, பாஸ்டன் பாலா, மாயவரத்தான் உட்பட யாருக்கெல்லம் பதில் தர வேண்டுமொ தாருங்கள்.., உங்கள் வலைப்பதிவில் பதில் தந்தால் இந்த பதிவில் தயவு செய்து குறிப்பிடுங்கள்

அன்புடன்

விச்சு

சங்கராச்சாரியாரும் குற்றவியல் சட்ட மாற்றமும்

காவல்துறையினரிடம் கிரிமினல் சட்டம் 161-இன்கீழ் ஒருவர் வாக்குமூலம் கொடுத்தால் அது நீதிமன்றத்தில் ஏற்கப்படவேண்டும் என்று புது திருத்தம் கூறுகிறது. காவல் துறையினர் மிரட்டி வாக்குமூலம் வாங்கினர் என்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்ட வர்கள் இனி சொல்ல முடியாது என்பதுதான் புதிய திருத்தத்தின் நிலைப்பாடாகும்.

சங்கரராமன் வழக்கில் சாட்சிகள் முதலில் ஒன்று சொல்லி பின் போலிஸ் மிரட்டினார்கள் என்று சொன்னர்களே அது போல இனி முடியாது. (இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால்)

குற்றவியல் சட்டம் என்றால் மத்திய நீதிதுறை தானே மாற்றம் செய்யும்? மாநில அரசு ஏதும் சிபாரிசு செய்ததா..

ஆனால் இது சரியான சட்டமாகத் தென் பட வில்லை. அடித்து உதைத்து வாக்கு மூலம் வாங்கும் உலகத்தில் நீதி காணாமல் போய் விடும். அறிவிருக்கிறதா என்று நீதிபதிகள் அனைவரயும் கேட்க நேரிடும்.

அன்புடன் விச்சு

Wednesday, June 29, 2005

மதக்கலவரங்களும் போபாலும்

http://etamil.blogspot.com/2005/06/blog-post_111999293248001172.html
http://mayavarathaan.blogspot.com/2005/06/blog-post_29.html

இன்று இரண்டு பதிவுகளைப் படித்ததும் எனக்கு என் போபால் அனுபவங்களை எழுத வேண்டும் என்று தோன்றியது.

போபாலா.. இது ஒரு பெரிய கிராமம். நான் போபாலின் தென் பகுதியில் 2 வருடங்கள் இருந்திருக்கிறேன்..

பாகிஸ்தான் கொடி ஏற்றுவது, பாகிஸ்தான் ஜெயித்தால் பட்டாசு வெடிப்பது போன்றவை அங்கே சாதாரணம். பச்சை (அம்மாவுக்கு பிடித்த பாகிஸ்தான் கொடி கலர்தான்) நிறத்தில் வீட்டுக்கு வர்ணம் பூசும் அளவு தீவிரமான முஸ்லிம்கள் நிறைந்த ஊர்.

பாபர் மசூதியை உடைத்த போது நான் அங்கே இருந்திருக்கிறேன். ராத்திரி முழுக்க மொட்டை மாடியில் வீட்டில் இருக்கும் தோசை கரண்டி உட்பட இரும்பு ஆயுதங்களுடன் காவல் இருந்திருக்கிறேன். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டிருக்கு திரும்பி வந்தபின் இந்தியா அங்கே விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரவு 2 மணிவரை மொட்டை மாடியில் டி வி வைத்து ஆட்டம் பார்ப்பதில் நேரம் போகும்.

பகலில் திடீரென்று ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வரும். (பிறகு தெரிந்தது, அவர்கள் பயத்தின் காரணமாக முஸ்லிம்களை மசூதியில் வந்து பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள் என்று) தூரம் அதிகமாக இருப்பதால் என்ன தகவல் என்று புரியாது. ஒரு நாள் பரக்கத்துல்லா பல்கலைகழக மாணவர்கள் சைக்கிளில் வந்து இன்று இரவு முஸ்லிம்கள் தாக்க திட்டமிட்டிருக்கிரார்கள் என்று கத்திக்கொண்டே சென்றார்கள். இப்படி தான் செய்திகள் பரவின..

பழைய போபாலில் ஒரு முஸ்லிம் தன் பெட்ரோல் பங்கை இந்துக்களை எரிப்பதற்காக திறந்து விட்டுவிட்டார், ஒரு இந்துப் பெண்ணை அவள் முஸ்லிம் தோழி காப்பாற்றுவதாக தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன் சகோதரர்களை விட்டு கற்பழித்து கொல்லவைத்தாள், ஒரு பெரிய கோவிலின் விக்ரகங்களை எடுத்து சாக்கடையில் எறிந்து விட்டார்கள், ராணுவம் முஸ்லிம் பகுதிகளில் நுழையவே முடியவில்லை என்றெல்லாம் வதந்திகள்.

மொட்டை மாடியில் நின்று பார்த்தால் நிறைய கரும்புகை தெரியும். பர்கெடாவில் கடையை எரிய விடுகிறார்கள். அங்கே எரிகிறது இங்கே எரிகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். ரேடியோவில் தொடர்ந்து அமைதிகாக்கச் சொல்லி செய்திகள் வரும்.

நான் இருந்த இடம், ஓய்வு பெற்ற BHEL தொழிலாளர்கள் நிறைந்த இடமாதலால், அனைவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.

தொலைபேசி வேலை செய்ய வில்லை. ராணுவத்தின் பொறுப்பில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மாலை சாயும் நேரம். திடீரென்று எங்கள் அடுத்த வீட்டில் இருந்தவர் என் வீட்டு சொந்தக்காரரை அழைத்து நம் பகுதியில் எதோ கலவரமாம். வாருங்கள் போய் தடுக்கலாம் என்று அழைத்தார்.

நாங்கள் இருந்த இடம் இந்துக்கள் நிறைந்த இடம். என் வீட்டுக்காரர் உடனே கான்(khan) சாப் (saab) எங்கே என்று கேட்டார். மூன்றாவது வீட்டில் இருந்த கான் மட்டும் தான் எங்கள் தெருவில் இருந்த ஒரே முஸ்லிம். நாங்கள் மூவருமாக அவர் வீட்டுக்குப் போய் அவரை அழைத்தோம். அவர் வெளியே வந்ததும் "உங்கள் மனைவி குழந்தைகளுடன் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் " என்று எங்கள் வீட்டுகாரர் கூறினார். கான் அதற்கு, "அல்லா கிருபையால் ஒரு கஷ்டமும் வராது, கவலைப்படாதீர்கள்" என்று பதில் சொன்னார்.
என் வீட்டு சொந்தக்காரார் உடனே அவர் வீட்டுக்குள் சென்று "சகோதரி வெளியெ வா, குழந்தைகளை அழைத்துக்கொள், கான் சாபுக்கும் புரியவை.. ஆபத்து வரும் போல இருக்கிறது. அல்லாவும் கணேசும் உங்களை நன்றாகவே வைத்திருப்பார்கள் ஆனால் சில சமயங்களில் நம் அறிவை பயன் படுத்த வேண்டும்" என்று சத்தமாக கத்தி சொன்னார். அந்த அம்மா என்ன நினைத்தார்களோ தெரியாது, "சகோதரர் சொல்வது சரியாக படுகிறது வாருங்கள்" என்று கூறி எங்கள் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினார்கள். உடனே கானும் எங்கள் வீட்டுக்கு வந்தார்.

அடுத்த ஒரு மணியில் ஒரு 50 பேர் கொண்ட கும்பல் அரிவாள் பட்டாக்கத்தி பெட்ரோல் சகிதமாகஎங்கள் பகுதியில் ஒரு வீட்டுக்கு நெருப்பு வைத்திருப்பதாக அறிந்து ஓடினோம். எங்களுக்கு முகமூடி அணிந்திருந்த அவர்களில் யாரையும் அடையாளம் தெரியவில்லை. கடும் வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருந்தன.. அவர்கள் முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு ஓடும் படி கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

நிறைய பேர் அவர்களை (கலவரக்காரர்களை) இங்கே எதுவும் செய்யக்கூடாது. இவர்கள் (முஸ்லிம்கள்) எங்களுடன் இவ்வளவு வருடமாக இருகிறார்கள் எங்கள் நண்பர்கள் என்றெல்லாம் வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். பழைய போபாலில் நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு பழி வாங்கியே தீருவோம் என்று பதில் வாதமும் வந்து கொண்டிருந்தது.

இதற்கிடையில் ஒரு பகுதி இதெல்லாம் (வாதிடுவது) காரியத்திற்காகாது என்று கூறிக்கொண்டு அடுத்த தெருவில் புகுந்து ஓடியது. நாங்களும் துரத்திக்கொண்டு ஓடினோம். ஒரு வீட்டின் மேல் மாடியில் ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தது. வீட்டின் சொந்தக்காரர் கீழே நின்று பிரிந்து போன கும்பலைத் திரும்பிப்போகச்சொல்லி திட்டிக்கொண்டிருந்தார். முடிந்தால் அவரை (house owner) முதலில் வெட்டிவிட்டு குடித்தனக்காரர்களை எதுவும் செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவருமாக அவர்களை அங்கிருந்து துரத்தினோம். எங்கள் பகுதியிலிருந்து அவர்கள் வெளியேரும்வரை அவர்களுடனேயெ சென்றோம். பலத்த வாக்குவாதங்கள் தொடர்ந்தன. எவ்வளவு நாள் காப்பாற்றுவீர்கள் என்று கேட்டுக்கொண்டே போய்விட்டனர். ஒரு குழு அங்கேயே நின்று கண்காணித்துக் கொண்டிருத்தது.

ஒரு குழு மற்ற முஸ்லிம்களை இந்துக்கள் வீட்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தது. அதுவரை முஸ்லிம்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள மாடியில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அன்று முஸ்லிம்களை காக்க காவல் இருந்தோம்.

இப்படி கலவரத்தின் போது எங்களால் முடிந்த முஸ்லிம் குடும்பங்களை காப்பாற்றி இருக்கிறோம். இந்த "எங்களால் முடிந்த" எதற்காக என்றால் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் கணவர் பாகிஸ்தானில் உள்ள உறவினர்களைக் காணச் சென்றிருந்தார். பாகிஸ்தானில் இருந்து வந்திருந்த அவரது மச்சான் வீட்டில் இருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களிடம் சென்று வேறு யார் வீட்டிற்காவது சென்று விடும்படி சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவ்ர் (மச்சான்) என்னிடம் துப்பாக்கி இருக்கிறது, யாரும் எங்களை ஏதும் செய்ய முடியாது என்று கூறிருக்கிரார். அவர்கள் வீடு ஊருக்கு வெளியில் கடைசி வீடு.

இரவில் ஒரு பனிரெண்டு மணி இருக்கும். இரண்டு பேர் ஓடிவந்து ஒரு முஸ்லிம் வீட்டில் 5 பேரைக் கொளுத்தி விட்டார்கள் என்று கூறினார்கள்.
உடனே மாடியில் இருந்த எல்லாரும் ஓடினோம். அருகில் செல்லும் போதே சதை எரியும் நாற்றம். ஐந்து உடல்களும் தெருவில் கிடந்தன. எல்லா வீட்டிலும் கதவு ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்தன. யாரும் தொடக்கூடாது.. போலிஸ் வரும். இறந்து விட்டார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. மனம் மிக பாரமாக இருந்தது. காலை 5.30 க்கு போலிஸ் வந்த தாக பின்னர் தெரிந்தது.

27 நாட்களுக்கு ப் பிறகு ஊரடங்கு உத்தரவு 6 மணி நேரம் தளர்த்தப்பட்டது. 2 மாதம் கழித்து 56 சாவுகளுக்குப் பிறகு இதெல்லாம் முடிவுக்கு வந்தது. மனதில் காயங்கள் ஆழமாக பதிந்து விட்டது. அவர்களின் பயமும் வெறுப்பும் அது போன்ற ஒரு இடத்தில் இருந்தால் தான் புரிந்து கொள்ள முடியும் HEY RAMல் வருமே அது போல ஒரு நிகழ்ச்சிகள் எல்ல குடும்பத்திலும் நடந்திருக்கிறது.. 50 60 வருடமாக கனன்று வரும் நெருப்பு.. குஜராத்திலும் அது தான் நடந்தது.. என் டி டி வி யில் பெண்களும் பக்கத்து வீட்டின் மேல் கல்லெடுத்து எறிவதெல்லாம் பார்த்தேன். போலிஸ் எதுவுமே செய்யமுடியாத நிலை. சுட்டால் கலவரம் அதிகமாகும்.

முஸ்லிம்கள் என்றாலே ஒரு வெறுப்பு. யாராவது இந்த நிலையை மாற்ற முயற்சி செய்தார்களா என்றால் இல்லை. இரண்டு கட்சிகளாக அரசியல் லாபத்துக்காக ஊதி தூபம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது என்றைக்காவது மாறுமா.. எனக்கு நம்பிக்கை இல்லை.

அமெரிக்காவிலும் இதே போல நிலையைத்தான் பார்க்கிறேன். என்றைக்கு எந்தப் போராளி தாக்குவானோ என்று ஒரு பயம். போராளியும் சாதாரண முஸ்லிமும் எல்லாம் ஒன்றுதான் அடையாளம் தெரியும் வரை..
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

பின் குறிப்பு: அந்த ஐந்து பேரும் இறக்க வில்லை. தப்பித்துவிட்டார்கள். குணமாகி வந்ததும் வீட்டை பழைய போபாலுக்கு மாற்றிச் சென்று விட்டார்கள். நிறைய பேர் பழைய போபாலில் இருந்த இந்துக்களுடன் வீடுகளை மாற்றிக்கொண்டு விட்டார்கள். Khan இன்னும் இங்கே தான் இருக்கிறார்..அடுத்த ஜுனில் நானும் டெல்லிக்குச் சென்று விட்டேன். இப்போதும் போபால் என்றால் இந்த நினைவுகள் வருகிறது.

Friday, June 24, 2005

ஜெயகாந்தனும் பாரதியும்

"கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்குகூறத்
தகாதவன் கூறினன் கண்டீர்!"

"வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது. பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேச வேண்டும் என்கின்ற தமிழறிஞர்கள், தம்மைத்தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப் பட்டிருந்தால், ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது" என்று அண்மையில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் சென்னை சமஸ்கிருத சேவாசமிதி நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் பேசியதாகச் செய்தி.

ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் அவருக்கு அடுத்த வாரம் நடத்திய பாராட்டு விழாவில் அவர் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். தன்னை அறியாமலேயே பிறரைப் புண்படுத்தி விட்டோமோ என்று வருத்தம் தெரிவித்து, விலங்கு உயிர்கள் எல்லாம் தம்மை மட்டும் நேசிப்பவை, மனிதன் மட்டுமே தன்னையும் தாண்டிப் பிற உயிர்கள் மீதும் கருணை காட்டுபவன், என்ற பொருளிலேதான் "தம்மைத்தாமே நக்கும் நாய்" என்று குறிப்பிட்டதாகச் சொன்னார். "நாய்க்குப் பதில் சிங்கம் என்று வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்களேன்!" என்றார் நகைப்புக்கிடையே. இதே தொனியில் "கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்யும் முயற்சியைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது; சமஸ்கிருதத்தில் கலைச்சொற்கள் படைத்திருந்தால் தமிழில் ஆங்கிலக் கலப்பு குறைந்திருக்கும்" என்று பொன் நாவரசு நினைவுச் சொற்பொழிவில் தொடர்ந்திருக்கிறார். *ஞானபீட விருது சாதாரணமான விருதல்ல. பொதுவாக அது விருது பெறும் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல், அவர் எழுதும் மொழிக்கும் பெருமை சேர்க்கும். ஞானபீட விருது பெற்றவர்களின் பேச்சுக்களை அவர் மொழியினர் மட்டுமல்லாமல், எல்லா இந்திய மொழியினரும் கவனிப்பார்கள். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கொண்டாடினானே பாரதி அவனுக்கு மட்டும் இலக்கிய நோபல் பரிசு கிடைத்திருந்தால்! அம்ம, நினைக்கவே இனிக்கிறதல்லவா! அந்நியனுக்கு அடிமைப்பட்டு வாடிய காலத்திலும் தன் பாடல்களின் ஒவ்வொரு சொல்லிலும் தன் நாட்டையும், மொழியையும் வானளாவ உயர்த்திப் பிடித்து, தன் காலத்தவர் மட்டுமல்ல, இனி வரும் ஒவ்வொரு தலைமுறையையும் நம் மரபைக் கொண்டாட வைக்கிறானே, அவனுக்கு மட்டும் விருது கிடைத்திருந்தால்!

எழுத்தாளன் என்பவன் எழுத்தை ஆள்பவன். சொல்ல வந்த கருத்தை அவனால் நளினமாகவும் சொல்ல முடியும்; நாற்றமடிக்கவும் செய்ய முடியும். இந்தியா என்ற கதம்பத்திலே ஒவ்வொரு பூவையும் நுகர்வதன் தேவையைப் பற்றி 1995 இல் ஞானபீட விருது பெற்றுப் பேசிய கன்னட எழுத்தாளர் யு. ஆர். ஆனந்தமூர்த்தி நளினமாகச் சொன்னார்.*கலைச்சொற்களைத் தமிழுக்குப் பதில் சமஸ்கிருதத்தில் படைத்திருந்தால் ஆங்கிலத்தின் ஊடுருவல் தணிந்திருக்குமா? சமஸ்கிருதச்சொற்களை இயல்பாகவே ஏற்றுக் கொள்ளக்கூடிய வடமொழிகளைப் பார்ப்போமே. நடந்திருக்கிறதா? வாழும் மொழியின் சொற்களை இரவல் வாங்குவதை விட்டுப் பண்டைய மொழியில் சொற்கள் படைப்பதும் புதிதல்ல. ஆங்கிலம் தன்னம்பிக்கையுடன் தலையெடுக்கும் முன்னர், அதன் சொல்வளம் பெருகுவதற்கு முன், அதன் மருத்துவ, அறிவியற் கலைச்சொற்கள் தங்கள் மொழிக்குடும்பத்துடன் தொடர்புள்ள ஐரோப்பிய மொழிகளிலிருந்து இரவலாகவும், செம்மொழிகளான கிரேக்கம், லத்தீனம் ஆகியவற்றின் வேர்களில் இருந்தும் படைக்கப் பட்டன.

ஆனால், அண்மையில் தோன்றிய கணினித் துறையில் கலைச்சொற்கள் தற்கால ஆங்கிலச் சொற்களின் அடிப்படையிலேயே உருவாகின. புதிய கருத்துகளை பல்லாயிரக்கணக்கானோர் வெகு விரைவில் உருவாக்கி எல்லோரிடமும் கருத்துப் பரிமாற்றம் கொள்ள முடிவது கணினித் துறையில் மட்டும்தான். இதில்தான் பத்து வயதுச் சிறுவர் பலரும் நிபுணராக முடிகிறது. கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்வதன் அடிப்படையே அதுதான். தாய்மொழியில் இருக்கும் சொற்களை நிபுணர்கள் துணையில்லாமலேயே புரிந்து கொள்ள முடியும். ஆனால் தாய்மொழியிலும் வேர்ச்சொற்களை அறிவதற்காகவாவது பயிற்சி தேவை.

தமிழ்நாட்டின் சிக்கல் அளவுக்கு மீறிய தமிழ்ப் பற்றால் அல்ல. தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பட்டம் பெற முடியும், வேலை பார்க்க முடியும். தமிழக ஊடகங்களின் தமிழில் அளவுக்குமீறிய பிறமொழிக் கலப்பு. தமிழ் மட்டும் தெரிந்த ஒரு நாட்டுப்புறத்தார் வழக்கு மன்றம் ஏறினார் என்றால், அவரைப் பற்றிய வழக்கு அவருக்குத் தெரியாத மொழியிலே நடக்கும். இது சரியில்லை என்று யாருக்கும் தோன்றுவதில்லை. ஏனென்றால், படித்த, பட்டம் பெற்ற, ஆங்கிலம் தெரிந்த நடுத்தட்டு மக்களுக்கு இது ஒரு சிக்கலே இல்லை. அவர்கள் தீர்வு எல்லோரும் ஆங்கிலம் படிக்கட்டுமே என்பதுதான். நமது முன்னோர்கள் சிலரும் இது போல, அப்போது ஆட்சி மொழி எதுவோ அதில் கருத்துப் பரிமாறிக் கொண்டிருந்ததால்தான், அந்த மொழிகளின் ஆட்சி வீழ்ந்த பின்னர் தொடர்ச்சியில்லாமல் தடுமாறுகிறோம்.

தமிழில் கலைச்சொற்கள் பல பிறமொழிச் சொற்கள்தாம். இவற்றில் பெரும்பாலானவை அந்நிய மொழி பேசுவோரின் ஆட்சிக்குக் கீழ்ப்பணிய நேர்ந்த போது உருவானவை. கலைச்சொற்கள் பிறமொழிச் சொற்களாக இருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. புதிய கருத்துகளைக் குறிக்கப் புதுச் சொற்களைப் படைப்பதற்கு வேர்ச்சொற்கள் இல்லாமல் போய்விடுகிறது. பிறமொழியில் படித்து, பிறமொழியில் சிந்தித்து, பிறமொழியில் வேலை செய்யும்போது இயல்பாகவே பிறமொழிக்காரர்களின் சிக்கல்களைத் தீர்க்கத்தான் தோன்றும். அதனால்தான் உலகிலேயே மிக அதிகமான கணினி நிபுணர்களைக் கொண்டிருந்தாலும், இந்தியர்கள் இன்னும் தம் மக்கள் சிக்கல்களுக்குத் தீர்வு காணாமல் பிறநாட்டவர்களுக்குக் குற்றேவல் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் கலைச்சொற்களை உருவாக்க முனைபவர்கள் கண்மூடித்தனமானவர்கள் அல்லர். அவர்கள் ஆழமான சிந்தனைகளை பேரா. ராதா செல்லப்பன் ("அறிவியல் தமிழ், இன்றைய நிலை"), முனைவர் மறைமலை ("சொல்லாக்கம்"), பேரா. வி. சி. குழந்தைசாமி போன்றோர் நூல்களிலிருந்து அறியலாம். கலைச்சொல்லாக்கம், ஆங்கிலத்தின் தாக்கம் பற்றி மேலோட்டமாகப் பேசி விட முடியாது. "ஞானபீடம்" என்ற மலைப்பான விருதுகளைப் பெற்றவர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது பயனுள்ள சொற்களைத்தான். "ஆறாது நாவினாற் சுட்ட வடு."*பாரதியார் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. தமிழ்த்தாய் தன் மக்களிடம் புலம்புவது போல் அந்தப் பாடல் அமையும்.

"கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்குகூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!"

அப்படி என்ன சொன்னான் அந்தப் படுபாவி?

"புத்தம் புதிய கலைகள் பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;மெத்த வளருது மேற்கே - அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை"

உண்மைதான். அதனால் என்ன, கொண்டு வருவோம் தாயே!

"சொல்லவும் கூடுவதில்லை - அவைசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை!"

அப்படியா சொன்னான்? பேதை! தமிழைப் பற்றி அவனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

அடப்பாவி! அப்படியா சொன்னான்? தாயே உன் காதிலா இந்த வசை விழுந்தது?

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"

அப்படியே செய்கிறோம் தாயே! யார் வசை பாடினாலும் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை!

அமெரிக்காவில் வெளி வரும் தென்றல் பத்திரிகையில் மணி மு. மணிவண்ணன் எழுதியது.
http://archives.aaraamthinai.com/thendral/puzhakadai.asp

அப்படி பொடு அருவாள - வள்ளுவர் சொன்ன வர்ணாச்ரமம்

தனது 82வது பிறந்தநாள் விழாவில் கருணாநிதி "திருக்குறளில் எந்தவொரு இடத்திலும் வர்ணாசிரம தர்மத்தைப் பற்றி கூறப்படவில்லை. ஜாதி பாகுபாட்டிற்கு வள்ளுவர் கருத்தில் இடமில்லை. கடவுளின் தலையில் பிறந்தவன், இடையில், தொடையில், காலில் பிறந்தவன் என்ற வேற்றுமையில்லை. எங்கு பிறந்தாலும் அவன் மனிதனே! எல்லாரும் ஓர் குலம் என்ற கொள்கை உடையவர்' என்றெல்லாம் பேசியுள்ளார்.

ஆனால், திருக்குறளில் 972வது பாடலில், வர்ணாசிரம தர்மத்தைப் பற்றி, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

முற்காலத்தில் உள்ள வர்ண பேதங்கள் இன்றளவும் மறையவில்லை என்பது தான் உண்மை.

வள்ளுவர் மேற்படி குறளில் என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்... பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களும் ஒன்றேயானாலும், அவரவர் செய்கிற தொழிலைப் பொறுத்து, ஆண்டான், அடிமை என்ற வேறுபாடு இருக்கத் தான் செய்யும். அவர்கள் ஒரே சிறப்புடையவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள் என்பதை கூறியுள்ளார்.

"இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் என ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்று அவ்வை மூதாட்டி கூறியுள்ள விதமாகவா நாட்டின்
இன்றைய நிலை உள்ளது?

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கிற எந்தவொரு அரசியல் கட்சியாவது ஜாதியை முற்றிலும் ஒழிக்க முன் வந்ததா? இல்லையே! மாறாக பிராமணர், வெள்ளாளர், கவுண்டர், மறவர், நாடார், பறையர் என்று ஒவ்வொரு குடிமகனின் முதுகிலும் அரசாங்க முத்திரை குத்தி, சான்றிதழும் வழங்கி, அதிலும் சில சிறுபான்மை சமூகத்தினரை முற்படுத்தப்பட்டோர் என்று அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும், சலுகைகளும் அளிக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டு, ஏனையோரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்றெல்லாம் இனம் பிரித்து சலுகைகளை வாரி வழங்கி வருவது ஏன்?

இவர்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தாலா என்றால் நிச்சயமாக இல்லை... தேர்தல் கால ஓட்டு வேட்டைக்குத் தான்.

வள்ளுவருக்கு வக்காலத்து வாங்கும் கருணாநிதியின் குடும்பம், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரக் குடும்பங்களில் ஒன்று என்ற உயர் இடத்தை அடைந்த பின்பும், தான் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் என்று மார் தட்டி கூறுவதேன்?

இன்னும் எத்தனை நுõற்றாண்டுகள் ஆனாலும், நம் நாட்டிலிருந்து ஜாதி, மத பேதங்களை ஒழிக்கவும் முடியாது, ஒழிக்க விடவும் மாட்டார்கள் ஆளும் வர்க்கத்தினர் என்பது தான் உண்மை.

இதை சொன்னது எஸ்.கண்ணுபிள்ளை, திருப்பதிசாரம், குமரி மாவட்டத்திலிருந்து. தினமலரில் இப்படி எழுதுகிறார்:

Thursday, June 23, 2005

அப்படி பொடு அருவாள - கோள்களுக்கு தமிழ் மாணவிகள் பெயர்.

கோவையைச் சேர்ந்த சரண்யா, செந்தளிர் என்ற இரண்டு மாணவிகள், 2003ம் ஆண்டு, இன்டெல் நிறுவனம் நடத்திய சர்வ தேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் பங்கேற்று வேப்பெண்ணையை உபயோகித்து இயூகலிப்டஸ் மரங்களின் பக்கவாட்டு வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது பற்றிய ஒரு ஆய்வறிக்கையை வழங்கினர். இதற்கு நான்காவது பரிசும் கிடைத்தது.

இப்போது எம் ஐ டி லிங்கன் ஆய்வகம் கண்டு பிடித்துள்ள இரண்டு சிறிய கோள்களுக்கு இந்த இரண்டு மாணவிகளின் பெயரை சூட்டியுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

19091 என்று அறியப்படும் கோளுக்கு செந்தளிர் என்றும் 19092 என்ற கோளுக்கு சரண்யா என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் கோவை அவிலா பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சரண்யா CஈT யிலும், செந்தளிர் குமரகுரு பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகிறார்கள்.

இதற்கு முன் கோள்களுக்கு ஐன்ச்டின், மெக்கார்டினி, வான் கோ போன்றோர் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

நம் தமிழ் பெண்கள் பெயர் வைக்கப்பட்டிருப்பது நமக்கும் பெருமை.

http://www.asiantribune.com/show_news.php?id=14672

Wednesday, June 22, 2005

ரஜினிகாந்தை திட்டிய ஆச்சி

1996இல் கலைஞரை ஆதரித்து ரஜினி "அந்த ஆண்டவனே வந்தாலும் " டயலாக் விட்டப்போ, ஆச்சி தான் அம்மாவுக்கு ஆதரவா ரஜினிய எதிர்த்து அறிக்கை விட்டாங்க

ஏன் என்ற கேள்வி எல்லார் மனதிலும் வந்தது..

அந்த பாழாப் போன ஜோசியக்காரன் எவனோ தெரியலை. அவனும் ஒரு ஆம்பளைதானே, அப்பிடித்தான் சொல்லுவான்! அவன் முகம்கூட எனக்குத் தெரியாது. ஆனா, அவன் வார்த்தை என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருச்சுங்கிறது அவனுக்குத் தெரியுமானு தெரியலை.

அய்யா, தர்மதொரைங்களே... ஆண்களே! உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டு இந்த ஆச்சி கேட்டுக்கறேன்... பொம்பளையாப் பொறந்தவ சமைக்க, துணி துவைக்க, பிள்ளைகளைப் பெத்துத் தர்ற மெஷின் மட்டும் இல்லய்யா. அவளும் உங்களை மாதிரி ஒரு மனுஷிதான்!

அவளை மதிக்கக் கத்துக்கங்கய்யா! அய்யா நீங்க, உங்க வீடு, குடும்பம் எல்லாம் நல்லா இருக்கட்டும்னு நான் எல்லா சாமியையும் கும்பிட்டுக்கிறேன்யா!


இப்பொ தான் புரியுது.. ரஜினி காந்தை திட்டி மனோரமா ஏன் பேசினாங்கன்னு.. ஒரு பெண்ணுக்காக ஒரு ஆணை திட்டி பேசி இருக்காங்க..

பாவம் ஆச்சி..

அன்புடன் விச்சு

அப்படி போடு அருவாள - கற்பழிப்பும் பாரதப் பண்பாடும்.

அப்படி போடு அருவாள - கற்பழிப்பும் பாரதப் பண்பாடும்.

"அவன் ரேப் பண்ணியதற்குக் காரணம் அந்தப் பெண்தான். பசித்தவர்களுக்குச் சாப்பாடு பரிமாறுவதுதானே பாரதப் பண்பாடு.அவனுக்கு வேற பசி; சாப்பாடு போடச் சொல்லி அவளிடம் கேட்டுள்ளான். அவள் போடாததால், அவனே எடுத்துக் கொண்டான். அதனால் அந்தப் பெண்தான் குற்றவாளி "

தமிழை மட்டும் தான் காப்பாத்துவீங்களா.. தமிழ் பண்பாட்டையும் காப்பாத்துவீங்களா? இப்படி ஒரு கருத்தை பரப்பிய தமிழ் தொலைக்காட்சி வாழ்க.


கல்லூரி விடுமுறை என்பதால் என் இரு மகன்களுடன் அமர்ந்து, கடந்த 8_ம் தேதி டி.வி.யில் ‘‘சொர்க்கம்’’ தொடர் பார்த்துக்கொண்டு இருந்தேன். அதில் வந்த ஒரு காட்சி, என்னை அதிர வைத்தது

அசிஸ்டெண்ட் கமிஷனர் மரியா ஜோன்ஸிடம் தன் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க ஒரு பெண் வருவாள். பத்திரிகையைப் படித்துப் பார்த்த மரியா, ‘‘ஏம்மா உனக்கு வேற நல்ல பையனே கிடைக்கலையா? ஒரு கைதியைப் போய் கல்யாணம் பண்ணிக்கிறே? அவன் ஒரு பெண்ணை ரேப் பண்ணியுள்ளான்’’ என்று கூறுவார்.

அதற்கு அந்தப் பெண் அலட்சியமாக, ‘‘அவன் ஆயுள் தண்டனைக் கைதிதானே? தூக்குத் தண்டனை கைதி இல்லையே! அவனை சுலபமாக என்னால் வெளியில் கொண்டுவர முடியும். அவன் ரேப் பண்ணியதற்குக் காரணம் அந்தப் பெண்தான். பசித்தவர்களுக்குச் சாப்பாடு பரிமாறுவதுதானே பாரதப் பண்பாடு. அவனுக்கு வேற பசி; சாப்பாடு போடச் சொல்லி அவளிடம் கேட்டுள்ளான். அவள் போடாததால், அவனே எடுத்துக் கொண்டான். அதனால் அந்தப் பெண்தான் குற்றவாளி!’’ என அகம்பாவத்துடன் கூறுவாள்.

கல்லூரி செல்லும் பையன், பெண்ணுடன் அமர்ந்து இக் காட்சியைப் பார்க்கும் பெற்றோர் எவ்வளவு தர்மசங்கடமாக உணர்வார்கள். என்ன தான் அந்தப் பெண் அமெரிக்காவிலிருந்து வந்திருப்பதாகக் காட்டினாலும், அவளும் தமிழ்ப்பெண்தானே? தமிழர்களுக்கு என்று இருக்கும் சில பண்பாடுகளை, சீரியல் எடுக்கும் புண்ணியவான்கள் மறந்தது ஏனோ? தேர்ந்தெடுத்துப் பார்க்கும் ஒன்றிரண்டு சீரியல்களையும் இனி நிறுத்திவிட வேண்டும் போலுள்ளது. டி.வி. மெகா தொடர்களுக்கும் சென்சார் அவசியம்.

_ ச. ஜெயலெட்சுமி, சென்னை. கடிதம் குமுதத்தில் வந்தது.


மூன்றாம் மொழிப்போராளிகளே, இது போல தொடர் சன் டிவி ல வருதுன்ன பரவாயில்லை கண்டுக்காதீங்க.. கலைஞர் வீட்டு டிவில சொன்னா சரியாத்தான் இருக்கும். அடுத்த தேர்தல்ல தொகுதி கிடைக்காம போயிட போகுது... ஆங்கிலம் மட்டுமே நமக்கெதிரி.. தமிழ் பண்பாடு இன்னும் 25 வருடம் கழித்து பார்த்துக்கலாம்.

அன்புடன்

விச்சு..

Tuesday, June 21, 2005

உலகம் அழியப் போகிறது? 6/6/6

உலகம் அழியப் போகிறது? 6/6/6


6 ஜுன் 2006


விவிலியத்தில் 666 என்ற எண் வரும் பொது ஆன்டி க்ரிச்ட் வருவான்.. உலகம் அழியும்.. நம்புவோரைக்காப்பாற்ற கிறிஸ்து உயிர்த்தெழுவார் என்று கூறப்பட்டிருக்கிறதாமே.. ஒரு பிரசங்கத்தில் கேட்டேன்..

வலையில் இருக்கும் அன்பர்கள் யாராவது இது என்ன என்று விளக்குவீர்களா..

அன்புடன் விச்சு

அப்படி போடு அருவாள - கைதட்டினால் நோய் குணமாகும்

அப்படி போடு அருவாள - கைதட்டினால் நோய் குணமாகும்

கைகளைத்தட்டி நமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பது உலகம் முழுவதும் உள்ள நல்ல பழக்கம். கைகளைத் தட்டினால் 90 சதவீத நோய்கள் குணமாகின்றன என சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. முகவரி: www.clap-clap.com

கைகளைத் தட்டும் போது ஏற்படும் உடலின் அதிர்வுகள் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்குகின்றன என மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு நோய்களுக்கு அடிப்படைக் காரணமாகும். இந்த அடைப்பு நீக்குவதினால் ரத்த நாளங்களில் எல்லாப் பகுதிகளிலும் ரத்த ஓட்டம் தங்குதடையின்றி சீராக நடைபெறுகின்றது. இதனால் ரத்த நாளங்களில் படியும் கொழுப்பு நீக்கப்படுகின்றது.

உடல் உறுப்புகளின் நரம்பு நுனிகள் கைகளில் முடிவடைகின்றன. கை தட்டுவதால் ஏற்படும் இந்த அதிர்வுகள் நரம்பு மண்டலத்திலுள்ள தேவையற்ற முடிச்சுக்களை நீக்கி நரம்பு மண்டலத்தைச் சீராக்கிறது. உணர்வுகளும் இதனால் சீர்படுகின்றது. ரத்த ஓட்டமும் நரம்பு மண்டலமும் சீராகி பலமடைவதால் உடலில் 90 சதவீத நோய்கள் குணமாவது சாத்தியமாகின்றது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் கைகளைத் தட்ட வேண்டும். ஒரு நிமிடத்திக்கு 60 முதல் 100 தடவை வரை கைகளை தட்டலாம்.

கை தட்டல் ஒலி பலமாகத் கேட்க வேண்டும் என்பதில்லை. இந்தப் பயிற்சிக்கு வயது வரம்பு ஏதுமில்லை. கை தட்டல் பயிற்சியின் மூலமாக ரத்த அழுத்தம் இதய நோய் சர்க்கரை நோய், எழும்பு தொடர்பான நோய்கள் குணமாகியுள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கை தட்டும் பயிற்சியை புதுவித யோகா பயிற்சியாக அங்கீகரித்துள்ளது என்பது கைத்தட்டல் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் உணர்த்துகின்றது.
எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க பார்க்கலாம்..

நன்றி தினமலர்.

அப்படி போடு அருவாள.. தலித் கட்சியில் பிராமணர்கள்..

அப்படி போடு அருவாள.. தலித் கட்சியில் பிராமணர்கள்..

ஓட்டு என்ன எல்லாம் செய்கிறது பாருங்கள்.. தம்மை தாழ்ந்தவர்களாக்கியவர்களுடனேயே கூட்டணி.

தமிழகத்தில் தம்மை காலில் போட்டு மிதிதுக்கொன்டிருந்த வன்னியர் மற்றும் முக்குலத்தோர் கூட கூட்டணி வைக்கலாம் என்றால்.. இதுவும் பரவாயில்லை.


காங்கிரஸ் கண்டுக்காத சமூகத்தினரை தங்கள் பக்கம் இழுக்கிறார் மாயாவதி

உத்தரபிரதேசத்தில் பிராமண சமூகத்தினரை கவரும் வகையில் சமீபத்தில் மாயாவதி மாநாடு ஒன்றை நடத்தினார். தலித் சமூகத்தினரை மட்டுமே நம்பியிருந்தால் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்காது என்பதால், மாயாவதி இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், பிராமண சமூகத்தினரிடையே இழந்த செல்வாக்கை மீண்டும் பெற வேண்டும் என கடந்த ஒரு ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தாலும் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. எல்லாம் பேச்சளவில் மட்டுமே உள்ளது. உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த பிராமண வகுப்புத் தலைவர் யாரையும் முக்கிய பதவியில் நியமிக்கவில்லை.


இந்த மாநிலத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் மற்றும் மகாவீர் பிரசாத் ஆகியோரும் பனியா மற்றும் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களே. மேலும், கடந்த ஒரு ஆண்டில் உ.பி.,யில் இருந்து மாநில கவர்னர்களாக நியமிக்கப்பட்ட ஏ.ஆர்.கித்வாய், சையது சிப்தே ரஸியும் முஸ்லிம் சமூகத்தினரே. மேலும், மாநில காங்கிரஸ் தலைவரான சல்மான் குர்ஷித்தும் முஸ்லிம் இனத்தவரே.

உ.பி., மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி கொஞ்சம், கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்கிறது. பிராமண சமூகத்தினரின் செல்வாக்கை பறி கொடுத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் அவர்களை புறக்கணிக்கிறது. இந்நிலையில், பல நுõறு ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டு வந்த தலித் தலைவர்களுக்கு பிராமண சமூகத்தினர் ஆதரவு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றே கூறப்படுகிறது. போகிற போக்கைப் பார்த்தால் மாயாவதிக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்றே தோன்றுகிறது. ஆதரவை அள்ளுவாரா மாயாவதி?

நன்றி தினமலர்

Wednesday, June 15, 2005

நான் ரஜினி, நீ கமல்

இன்னும் ஒரே வாரம். யாவராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட ‘அந்நியன்’ வெள்ளித்திரையைத் தொடுகிறது. ‘ஸ்மார்ட்’ சீயான், ‘மஜா’வாக அடுத்தபடத்திற்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார். கலகலப்பாக ‘துறுதுறு’வென்று பேசினார் விக்ரம்.

இதோ இப்போ ‘அந்நியன்’ ரீலீஸ்ன்னு வந்தாச்சு, கடைசிக்கட்ட பரபரப்பு எப்படியிருக்கு?

‘‘அப்படியே உருக்கி எடுத்த உழைப்பு. கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருஷம். அதைக்கூட கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சிட்டேன். அடுத்தபடம் ‘மஜா’வுக்குள்ளே இறங்கிடலாம்னு தோன்றிவிட்டது. ஆனால் சென்னையில் எங்கே பார்த்தாலும் அந்நியன் ஹோர்டிங்ஸ். யாரும் என் பார்வையிலிருந்து தப்ப முடியாது. இந்தப்படத்தில் ஷங்கர் என்ன அளவு சிந்தித்தார், எவ்வளவு சிரமம் எடுத்துக்கிட்டார். நான் எவ்வளவு உழைப்பைக் கொட்டினேன். அதெல்லாம் கொஞ்சம் தள்ளி வைச்சிட்டு, இந்த புரொடியூசர் கிடைச்சாரே, அதைத்தான் பெரிய புண்ணியம், பாக்கியம்னு நினைக்கிறேன்.’’

இன்னும் இதுமாதிரி பெரிய கேரக்டர் செய்யணும்னு தோணுதா? அப்பாடா ‘போதும்டா சாமி’ன்னு சோர்வு வருதா?

‘‘எனக்கு சாகசங்கள் பிடிக்கும். எந்த அனுபவத்தையும் தராத கேரக்டர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய! அந்நியனையே பாருங்க, இவ்வளவு பெரிய படம், பெரிய ஆக்ஷன். என்னைக் கவர்ந்தது கேரக்டரோட பெரிய விஸ்தீரணம். அந்த விஷயத்தில்தான் மனசு நிறைஞ்சு நிக்குது.’’

ஒரே படம். விதவிதமான நிஜமான முகத்தோற்றங்கள். வெவ்வேறு தோற்றம், வேறுபட்ட பாவங்கள், கோபம் தெறிச்சு, படு காதலாக எப்படி மாத்திக்க முடியுது?

‘‘இன்னிக்கு காலையில் கூட தூக்கம் வரவில்லை. பக்கத்தில் அசந்து தூங்கிட்டு இருந்த ஷைலாவை எழுப்பி பேசிட்டு இருந்தேன். ‘கனாகண்டேன்’ பார்த்தோம். பிருதிவிராஜ் ரோலைப்பத்திப் பேசிட்டு இருந்தோம். அந்த ரோலுக்கு மறைமுகமாக என்னை முயற்சி பண்ணாங்க என்று கேள்விப்பட்டேன். ‘நான் நடிச்சிருந்தால் எப்படியிருக்கும்’ என்று ஷைலாகிட்டே கேட்டேன். ‘நீ எப்படி இருப்பாய்னு தெரியாது. நீ மூஞ்சியை மாத்திடுவாய். எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு என்ன பண்ணுவாய்னு தெரியாது’ன்னு சொல்லிச் சிரிச்சாங்க. அவங்களுக்கே நான் ஒவ்வொரு தடவையும் என்ன வடிவத்தில் இருப்பேன்னு தெரியலை. அது கடவுளோட பரிசு.’’

‘கில்லி’ விழாவில் ரஜினி, ‘உங்களையும், விஜய்யையும் சேர்த்துப் பார்க்கும்போது எனக்கு நானும், கமலும் முன்னாடி இருந்த காலத்தை நினைவுபடுத்துகிறது’ என்றார். அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?

‘‘ரஜினி எதையும் பேச்சுக்காகன்னு சொல்ல மாட்டார். நானும் விஜய்யும் சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தோம். எனக்கு விஜய்யை தூரத்தில் இருந்து பார்த்தாலும், அருகில் பார்த்தாலும் பிடிக்கும். எனக்கும் விஜய்க்கும் ரஜினிசார் செய்த கௌரவம்தான் அந்தப் பேச்சு. அவர் பெரிய ஆக்டர். தன் மனசில் இருக்கிறதை வெளிப்படையாகப் பேசுவதே பெரிய விஷயம். எங்க விஷயத்தில் அது நடந்திருக்கு.’’

ரஜினி குறிப்பிட்டபடி பார்த்தால் இதில் யார் ரஜினி, யார் கமல்?

‘‘அவர் விஜய்யாகவும், நான் நானாகவும் இருந்திட்டுப்போறோம். ம்ம்ம்..... சரி. விஜய் ரஜினியாக இருக்கட்டும். நான் கமலாக இருந்துக்கிறேன். நான் ரஜினியோட ரசிகன். ஆனால் கமல்தான் என் குரு. ரஜினி சாரைப் பாருங்களேன், அவர் நிக்கிற, பேசுகிற, யோசிக்கிறதில் கூட என்னமாதிரி ஸ்டைல் பாருங்க. எல்லா நடிகர்களுக்கும் கமல் மாதிரி இருந்தாகணும் என்று தோணும். வேண்டாம் சார், விஜய், விஜய்யாகவே இருக்கட்டும். விக்ரம் விக்ரமாகவே இருக்கட்டும்.’’

இந்திப்படம் செய்யப்போறதா கேள்விப்பட்டோமே?

‘‘கோவிந்த் நிஹாலனி சென்னைக்கு வந்து என்னைப் பார்த்தார். என்னமாதிரி படம் செய்யலாம், எது எல்லாம் சாத்தியம்னு பேசினோம். கேதன் மேத்தாவும் பேசினார். இப்போ அவசரமாக இல்லை. உள்ளே ஒரு நடிகன் உட்கார்ந்து தீனி கேட்டுட்டு இருக்கான் இல்லையா, அவன் திமிறி எழுந்திருக்கும்போது செய்வேன்.’’


குமுதத்தில் வந்த விக்ரம் பேட்டி..

அன்புடன் விச்சு

Tuesday, June 14, 2005

அரசியல் தொடர்பில்லாத தமிழ் அரங்கேறாதோ?

தமிழுக்கு இவர் செய்த தொண்டுகள் சிறப்பானவை.. அரசியல் தலைவர் அல்லது திரைப்பட நடிகர் அல்ல என்பதால் தான் இந்த நிலையோ.. தமிழுக்கு சிறப்பு சேர்த்த வலம்புரி ஜான் வறுமையில் தான் இறந்தார்.. முழுநேர அரசியல் தொடர்பில்லாத தமிழ் அரங்கேறாதோ?

அன்புடன் விச்சு


தினமலரில் வந்த கட்டுரை:

அழிந்து போகும் நிலையில் உ.வே.சா., வீடு தமிழுக்கு தொண்டுக்கு கிடைத்த பரிசா இது?



தமிழுக்கு அருந்தொண்டாற்றிய உ.வே.சா., வீடு இன்று கேட்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறது. அரசுடமையாக்கப்பட்ட பின்பும் இந்த நிலையில் உள்ள அந்த வீட்டைப் பார்க்கும் தமிழ் ஆர்வலர்கள் மிகவும் நொந்து போய் உள்ளனர்.

"தமிழ்த் தாத்தா' என்று போற்றப்படுபவர் உ.வே.சாமிநாதய்யர் தான் பிறந்த ஊரான உத்தமதானபுரத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக ஊரின் முதல் எழுத்தான "உ'வை தன்னுடைய பெயரோடு இணைத்துக் கொண்டார். தஞ்சை பாபநாசம் அருகே உத்தமதானபுரம் உள்ளது. இவரது தந்தை வேங்கடசுப்பிரமணிய அய்யர், தாய் சரஸ்வதி அம்மாள். 19.2.1855ல் பிறந்த உ.வே.சா, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை குருவாக கொண்டவர். இன்றைக்கு சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கிய நுõல்களை படித்து தமிழறிவை வளர்த்துக் கொண்டு இலக்கியவாதிகளாக லட்கணக்கானோர் வலம் வருகின்றனர். இந்த அரிய இலக்கியப் பொக்கிஷங்களை சிந்தாமல் சிதறாமல் உலகுக்கு எடுத்து தந்தவர் உ.வே.சா.தான். அவர் தமிழ்மொழிக்கு உயிரூட்டிய விடிவெள்ளி.

காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஓலைச்சுவடி தான் நடைமுறையில் இருந்தது. பதப்படுத்தப்பட்ட பனைஓலையில் எழுத்தாணியால் எழுதி பயன்படுத்தி வந்தனர்.

அறிஞர் ராமசாமி முதலியார் என்பவரிடம் பாடம் கேட்க வந்த உ.வே.சா.வை பார்த்து "சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி' படித்திருக்கிறாயா என்று அவர் கேட்டார். அந்தக் கேள்வியே சாமிநாதய்யரை ஓலைச்சுவடிகளை தேடத் துõண்டியது.

ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்த சாமிநாதய்யருக்கு அவை கரையான் அரித்தும், மழையில் நனைந்தும் கண்ட இடங்களில் துõக்கி எறியப்பட்டும் கிடந்ததைக் கண்டு மனம் பதறினார். அரிய பொக்கிஷங்களான இவற்றை பேணிக் காக்காவிட்டால் காலப்போக்கில் இவை முற்றிலும் அழிந்து வருங்கால சந்ததியினர் இந்த இலக்கியங்களைப் பற்றி அறியாமலே போய்விடுவர் என்று பதை பதைத்தார்.

எனவே, அவர் பல்வேறு இடங்களுக்கு நடந்தே சென்று அரிய ஓலைச்சுவடிகளை ஒன்று திரட்டினார். இவ்வாறு அவருக்கு பத்துப்பாட்டு, புராணங்கள் 14, பிரபந்தங்கள் 42, இலக்கண நுõல்கள் போன்ற அரிய பொக்கிஷங்கள் ஓலைச்சுவடிகளாக கிடைத்தன. அவற்றையெல்லாம் பத்திரப்படுத்தி நுõல்களாக பதிப்பித்தார். இந்த நுõல்களெல்லாம் இன்றைக்கு காசு கொடுத்தால் எளிதாக கிடைப்பதற்கு காரணமே உ.வே.சா.தான். அவருடைய பெரும் முயற்சியால் தமிழுக்கு கிடைத்த கருவூலங்கள் அவை.

அவரது புலமையை அறிந்து அன்றைய அரசு 1906ம் ஆண்டு "மகா மகோ உபாத்தியாய' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கி கவுரவித்தது. தமிழ் நெஞ்சங்களோ இவரை, "தமிழ்த்தாத்தா' என்று பட்டம் வழங்கி அன்புடன் அழைத்தனர். தமிழுக்கு அருந்தொண்டாற்றிய உ. வே.சா., 1942ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி மறைந்தார். சென்னையில் இவர் வசித்த வீடு "தியாகராச விலாசம்' என்ற பெயரால் உள்ளது. சென்னையில் இவரது பெயரால் நுõலகம் ஒன்றும் இயங்கி வருகிறது.

தமிழுக்கு தொண்டாற்றி மறைந்த அந்த தமிழ்த்தாத்தா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த வீட்டின் நிலை இப்போது எப்படி இருக்கிறது?.

தமிழ் ஆர்வலரும், கலை விமர்சகருமான பாபநாசம் எழுத்தாளர் வீ.பி.கே.மூர்த்தி(69) என்பவர் பொதுமக்களின் கோரிக்கையான உ.வே.சா.வீட்டை அரசுடைமையாக்கி அதை நினைவு சின்னமாக்க வேண்டும். அதில் நுõலகம் வைக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைக்கு இப்போது வயது 30 ஆண்டுகள்.

இரண்டாவது முறையாக முதல்வரான ஜெயலலிதா விரைவில் உ.வே.சா.வாழ்ந்த வீட்டை அரசுடைமையாக்கி ஆணை பிறப்பித்தார். இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் உ.வே.சா. வீடு அவரது உறவினர்கள் வசம் இருந்தது. அந்த நேரத்தில் அந்த வீட்டை பிரித்து சீரமைக்கும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். அரசு உத்தரவை காண்பித்து அதிகாரிகள் வீட்டை முற்றுகையிட்டனர். உ.வே.சா உறவினர்களிடம் வீட்டை விலை பேசினர். வீடு பிரித்தது பாதி, பிரிக்காதது பாதியுமாக கிடந்த நிலையில் வீடு கைமாறியதாக தெரிகிறது. அதன்பின் அந்த வீட்டை சீரமைக்கும் பணி தொடரவில்லை. போட்டது போட்டபடி சிதிலமடைந்து கிடக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி பெய்த மழையில் வீட்டின் மாடியின் முன்பகுதி இடிந்து விழுந்தது. தற்போது வீட்டின் உள்ளேயே போக முடியாத நிலை உள்ளது. அதேபோல வீட்டின் பின்பக்க வழியாகவும் போக முடியவில்லை. கடந்த மே மாதம் பெய்த மழையில் வீட்டு சுவர்கள் பல இடிந்து விழுந்தன. மூங்கில்கள் பெயர்ந்து தொங்கிக் கொண்டு இருக்கின்றன. இப்போது வீடு பாழடைந்து பாம்புகள் குடிபுகுந்து விட்டன.

தற்போது தமிழ்த்தாத்தா வசித்த வீட்டில் பாதி தான் உள்ளது. முன்பகுதியில் ஓடுகள் விழுந்து குவிந்து கிடக்கின்றன. வாசற்கதவை திறந்து உள்ளே போக முடியாது. வேறுவழியாக சிரமப்பட்டு உள்ளே நுழைந்து பார்த்தால் ஓட்டு மாடி பாதி இடிந்து விழுந்தும் மற்றொரு பாதி எந்த நேரமும் விழத் தயாராகவும் உள்ளன. உள்வாசல் சுவர் முற்றிலும் விழுந்து கிடக்கிறது.

வீட்டின் அளவே சுமார் 30 அடி அகலம் 100 அடி நீளம் தான் இருக்கும். இதை சீரமைப்பது அரசுக்கு பெரிய சுமையாக இருக்காது என்றே தோன்றுகிறது.

மூர்த்தியின் ஆதங்கம்:
தமிழ் ஆர்வலரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான வீ.பி.கே.மூர்த்தி கூறியதாவது:

உத்தமதானபுரத்தில் நடைபெறும் பூஜைக்காக அங்கு அடிக்கடி செல்வேன். அப்போதெல்லாம் தமிழ்த்தாத்தா வீட்டை பார்த்து வருவேன். நாளுக்கு நாள் அந்த வீடு இடிந்து விழுவது என் உயிர் போவது போல் இருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா மனம் வைத்தால் இதற்கு ஒரு விடிவுகாலம் ஏற்படும். வீடு புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு அடையும் நாளில் உ.வே.சா. வீட்டோடு அவரது படத்தையும் போட்டு சிறப்பு தபால்தலை வெளியிட வேண்டும். தமிழுக்கு மகுடம் சூட்டிய தமிழ்த்தாத்தாவுக்கு இதன்மூலம் நமது அரசும் மகுடம் சூட்டிய பெருமை கிடைக்கும் என்றார்.

இந்தக் கவிதை நொபெல் பரிசு பெற்றது

எனக்கும் ஆசைதான்

இறவாக் கவிதை எழுத..

முதலில் தவறில்லாமல் சிந்திக்க தொடங்குகிறேன்

பின் தமிழில் எழுத்துப்பிழை இன்றி எழுதுகிறேன்.

பிறகு வரும் என் கவிதை

அதுவரை ஆங்கிலத்தில் அடுத்தவர் கவிதை படியுங்கள்..

அன்புடன்

விச்சு

தாகூரின் கீதாஞ்சலியில் இருந்து ஒரு பாடல்.

Where the mind is without fear and the head is held high;

Where knowledge is free;

Where the world has not been broken up into fragments by narrow domestic walls;

Where words come out from the depth of truth;

Where tireless striving stretches its arms towards perfection;

Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;

Where the mind is led forward by thee into ever-widening thought and action---

Into that heaven of freedom, my Father, let my country awake.

ஒரு அரிய வாய்ப்பு

http://pulambals.blogspot.com/2005/06/blog-post_10.html

ஒரு அரிய வாய்ப்பு

அம்மா கட்சி நண்பர்களே..

பள்ளிக்கூடங்களில் கழிப்பறையை சுத்தம் செய்ய மாணவர் களைப் பயன் படுத்துகிறார்களாம்..

என்ன கொடுமை..

உடனே புரட்சி தலைவி செயல் பட கடிதம் எழுதுங்கள்.. அமைச்சரிடம் கூறுங்கள்.. எதாவது செய்யுங்கள். ஒரு இடத்துக்கு 10000 முதல் 25000 சம்பாதிக்க வாய்ப்பு.

50000 பள்ளிகளுக்கு, ஆயாக்கள் நியமிக்கலாம்.. தேர்தல் காலத்தில் கீழ்நிலை தொண்டருக்கு வருமானத்துக்கு வழி...முதுகலை பட்டதாரிகளும் நிறைய பேர் கிடைப்பார்கள்..

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.. விட்டால் அடுத்த அரசு அதை பயன் படுத்திக்கொள்ளும்..

கண்டுபிடித்துச் சொன்னவர்

விச்சு

Monday, June 13, 2005

பிரசினை இட ஒதுக்கீடு தான்." சுஜாதா என்ன சொன்னார்


அர்ச்சனா:கல்லூரியில் சேரும் போதே இடஒதுக்கீடு பிரச்னையால ஒதுக்கப்படுகிறோம். நாங்க பார்வர்ட் காஸ்ட்ல பிறந்துட்டோம்கிற ஒரே காரணத்துக்காக எவ்வளவு மார்க் எடுத்தும் நாங்க படிக்க விரும்புற சீட் எங்களுக்குக் கிடைக்கமாட்டேங்குது. ஒண்ணு, நாங்க பார்வர்டு காஸ்ட்டுல பிறந்திருக்கக் கூடாது. இல்லாட்டி, எங்க கிட்ட நிறைய பணமாவது இருந்திருக்கணும். இதையெல்லாம் நினைச்சுப் பாக்கறப்ப வேதனையா இருக்கு.

சுஜாதா : உங்க ஆதங்கம் உங்களுக்கு நியாயமா இருக்கலாம். ஆனா, இன்னும் கிராமத்துல எத்தனையோ ஜாதியைச் சேர்ந்த ஏழை மக்கள் பள்ளிக்கூடத்திற்குப் போய் படிக்க வசதியில்லாம இருக்காங்க. காலப்போக்குல ஒரு ஏற்றத்தாழ்வு நம்ம சமூகத்துல வந்திடுச்சி. அதைச் சரிப்படுத்தணும் என்று சொல்கிறது சட்டம். சட்டம் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

நிவேதிதா : அதை எங்களால புரிஞ்சுக்க முடியுது. ஆனா எங்க நிலைமை...?

சுஜாதா : இது ஒரு சிக்கலான பிரச்னைதான். இதற்கு தீர்வு சொல்றது கஷ்டம். ஆனா, நீங்க நம்பிக்கையை மட்டும் இழந்துறாதீங்க. முட்டி மோதி முயற்சி செஞ்சுகிட்டே இருங்க. முயற்சி எல்லோரையும் ஜெயிக்க வைக்கும்.

குமுதத்தில் வந்த கலந்துரையாடல் இது.. நல்ல பதில் அளித்த சுஜாதா வாழ்க.

அன்புடன் விச்சு

ஜெயகாந்தன் கருத்தும் பிராமண எதிர்ப்பும்

//இங்கே பிறப்பினால் உயர் குலத்தோன் என்று சொல்லப்படுபவர் சமூகம் தரும் அத்தனை சலுகைகளையும் சுகத்தையும் மரியாதையும் அனுபவித்துக்கொண்டு பிறப்பினால் உயர்வு தாழ்வு இருந்தால் தான் வாழ்வு சுவாரசியமாக இருக்கும் என்று கூறும் ஒரு நோயுற்ற மனப்பாண்மையை கண்டித்து பேசிக்கொண்டிருக்கின்றோம் //

இந்த கருத்தை நானும் பல முறை எனக்கு நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. சில சமயங்களில் நாம் ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு நம் முன்னேற்றத்தை தடுத்துக்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது.

கேரளத்தில் இருந்த அளவு இந்த இன பேதம் (பெண்கள் மேலாடை அணியத்தடை, எதிரில் நடந்து வரக்கூட தடை) மோசமாக தமிழகத்தில் இருக்க வில்லை என்றே நினைக்கிறேன்.. இந்த விஷயத்தில் நாராயண குரு கொண்ட கொள்கை (உங்களுடைய எதுவும் வேண்டாம், எங்களுக்கு நாங்களே ) ஈழவர்களுக்கு அவர்கள் முன்னேற வழி காட்டியது போல தோன்றுகிறது.

தமிழகத்தில் இது சமூகம் சார்ந்த நிகழ்வாய் பெரியாரால் தொடங்கப்பட்டு அரசியலாக்கப்பட்டதும் அதன் முக்கியதுவம் குறைந்து விட்டது என்பது என் கருத்து.. ஆனால் கேரளத்தில் இன்னும் அது சமூக இயக்கமாகவே தொடர்வதால் ஏற்றத் தாழ்வுகள் மிகவும் குறைந்து விட்டதென்றும் நினைக்கிறேன்.

தமிழகத்தில் இரு கோடுகள் கதை நடக்கிறது.. பெரிய கோட்டை அழித்து சிறிய கோட்டை பெரியதாக காட்டும் முயற்சியில், பெரியதும் போச்சு, சிறியதும் வளர வில்லை. இல்லையென்றால், இன்றும் ஒரு தாழ்த்தப்பட்டவர் இனம் பொருளாதார அடிப்படையிலோ கல்வி அடிப்படையிலோ முன்னேறி இருக்கிறோம் என்று கூற முடியாத நிலை இருக்காது.

இரண்டாவது, தமிழகத்தில் பிராமணர்களைத் தூக்கி எறிந்துவிட்டு அதற்கு அடுத்த வர்ணக்காரர்கள் தமக்கு கீழ் உள்ளவர்களை நசுக்கும் நிலையும் தென்படுகிறது.. எங்கெல்லாம் தலித்துகள் தாக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களை நசுக்குபவர்களெல்லாம் பிராமணர்கள் அல்ல என்பதயும் கவனிக்க வேண்டும்..

இன்றைய தினத்தில் பிராமணர்களுக்கு அவர்கள் சொல்லி நடத்தச் செய்யும் அளவு பலம் இருப்பதாக தோன்ற வில்லை. இந்த நிலையில் பிராமண எதிர்ப்பு என்பது செத்த பாம்பை அடிப்பதற்கு ஒப்பாகும்.. ஓட்டு வாங்க உதவுமே தவிர தாழ்த்தப்பட்டவர்கள் நல்வாழ்விற்கு உதவுமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

கடந்த 25 ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி கற்க சமமான தளம் அமைந்திருப்பதை மறுக்க முடியாது. நானும் மாநகராட்சி பள்ளியில் படித்து வளர்ந்தவன் தான். ஆங்கிலத்தில் பேசவே கல்லூரி சென்றுதான் கற்றுக்கொண்டேன். இப்பொது அமெரிக்காவில் நல்ல ஒரு வேலையில் இருக்கிறேன். என்னுடன் இருக்கும் பலரும் அப்படி படித்து வந்தவைகள் தான். முயற்சி தான் இந்த நிலையைத் தந்தது.. ஊக்கம் நமக்குள்ளிருந்து வரவேண்டும். யாரும் எதுவும் இலவசமாகவோ எளிதாகவோ கிடைக்கப்பெறுவதில்லை. நாம் முன்னேறாவிட்டால், நாம் தான் பொறுப்பு.. அடுத்தவர்களைத் திட்டி பழி போட்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமோ என்று தோன்றுகிறது.

ஏழைகளுக்கு தானம் கொடுக்கும் போது அந்தப் பகுதியில் செல்வோர் எல்லாம் கை நீட்டி தானம் பெறும் மனப்பாங்கும் இங்கே தென்படுகிறது. இதில் பலன் பெறுவோர் பலர் இடைப்பட்ட சமூக அந்தஸ்தில் உள்ளவர்களே. தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள வேலைவாய்ப்பு இடங்கள் நிரப்ப ஆள் கிடைக்காமல் காலியாக உள்ளது, அவர்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

இத்தனைக்கும் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களில் ஜெயலலிதா தவிர அனைவருமே பிராமணர் அல்லதோர் தான். இலவசத் திட்டங்களும், படி அரிசித்திட்டங்களும் போட்டு ஓட்டு வேட்டையாடியதைத் தவிர அவர்களை முன்னேற்ற யாருமே முனைப்புடன் செயல்பட வில்லையென்பது தன் கட்சி, தலைவர் என்ற தடுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் தெளிவாகத்தெரியும்.

எப்படிப்பட்ட நடவடிக்கை தேவை என்றால், குடும்பக்கட்டுப்பாடு, போலியோ தடுப்பு போன்றவற்றில் காட்டப்பட்ட அளவு ஆர்வம் தேவை. மதிய உணவு தந்து காமராஜரும் எம் ஜி ஆரும் மாணாக்கர் களை பள்ளிக்கு கொண்டு வந்தார்களே அது போன்ற முயற்சி தேவை.. அப்படித்தானே 100 சதவீத கல்வி நிலைக்கு தமிழகம் வந்தது. அதே முயற்சி தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்திலும் காட்டப்பட்டால் தாழ்த்தப்பட்டவர்களும் முன்னேறுவார்கள், தமிழகமும் முன்னேறும். பல நூறாண்டு களங்கமும் நீங்கும்.

Sunday, June 12, 2005

மைக்கல் ஜாக்சன் தற்கொலை முயற்சி

.
.
இன்று காலை அனைவரது கவனமும் இந்த செய்தி நோக்கியே இருக்கிறது.

இந்த பெயரில் உங்களுக்கு செய்தி வந்தால்,

ஜாக்கிரதை..


இது ஒரு ட்ரஜன் வகை வைரஸ் என்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியின் சுட்டியைத் திறந்ததும் உங்கள் கணிப்பொறியில் மால்வேர் எனப்படும் கெடுமென்பொருள் தானாகவே இறங்கி உங்கள் கணிப்பொறியை செயலிழக்கச்செய்யும்..

எனவே கவனம்

அன்புடன்
விச்சு