Saturday, August 13, 2005

காதல் விலங்கு (பாகம் 3)

கொஞ்சம் மெது மெதுவாக (நேரம் கிடைக்கும் பொது) தொடரும்இது என் முதல் கதை. தொடரவேண்டுமா என்றும் பின்னூட்டமிட்டும் நட்சத்திரங்களை சொடுக்கியும் சொல்லுங்கள்
பாகம் 1 http://neyvelivichu.blogspot.com/2005/07/1.html
பாகம் 2 http://neyvelivichu.blogspot.com/2005/08/2.html

அன்புடன் விச்சு


உஷா நல்ல புத்திசாலி. எந்த ஒரு பிரச்சினையையும் புது விதமாக அணுகுவாள். வித்தியாசமாக வழிகளைக் கண்டு பிடிப்பாள். நல்ல கதாசிரியராக எல்ல தகுதிகளும் அவளிடத்தில் உண்டு. எங்கள் நிறுவனத்தின் முதல் விதை. என்னை விட மூன்று வயது பெரியவள். தமிழ் பேச மட்டுமல்லாமல் எழுதப் படிக்கக் கூடத் தெரியும். (எனக்குத் தெரியாது. பாட்டி தாத்தா முயற்சி செய்தார்கள்.. அம்மா அப்பா நான் எல்லாருமாக அமெரிக்காவில் தமிழ் எதற்கு என்று ... இப்போது வருத்தமாக இருக்கிறது) நன்றாகப் பாடுவாள். பூனைக் கண்களுடன் அவளைப் பார்க்கும் போது எப்படி இவ்வலவு அழகாய் இருக்கிறாள் என்று எண்ணத்தோன்றும்..

சரி விஷயத்துக்கு வருவோம்.. சந்துரு பிரச்சினை பற்றி இருவரும் பேசினோம்.. அவன் கேட்டு மூன்று நாள் கழித்து தான் பேசவே முடிந்தது. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? என்ன மாதிரி நிறுவனத்தில் வேலை வேண்டும் சொல்லு வாங்கிடலாம் என்றாள்.. தொடர்ந்து பேசினோம்.. அப்போ அவனை கல்யாணம் பண்ணிக்கப் போகிறாயா.. முடிவு பண்ணியாச்சா.. என்று கேட்டாள்.. இல்லை. அது அப்படியே முடிவெடுக்காமல் இருக்கிறது.. அது பற்றி உன்னொரு நாள் பேசுவோம்.. இப்போ சந்துரு பிரசினைக்கு முடிவு சொல்லு என்றேன்.

"அடுத்த வாரம் கல்யாணம். முடிவென்ன இனிமேல். தெளிவாக நீ அவனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால், உடனடியாக ஒரு வழி இருக்கு கடைசி நேரத்தில் எந்த விவகாரமும் செய்யக்கூடாது" என்றாள்.

இதென்னடா பிள்ளையார் பிடிக்க குரங்கானதே என்று நினைத்துக்கொண்டு "அமாவாசைக்கும் ஆப்ரகாம் லிங்கனுக்கும் என்ன சம்பந்தம்" என்றேன்.

"இருக்கு.. நிச்சயமாக கல்யாணம்னு சொல்லு. பணம் பண்ணலாம்" என்றாள்.

இவள் என்னுடைய "கல்யாணம் வேண்டாம்" கருத்தை எதிர்ப்பவள்.. இந்தத் திருமண பேச்சு வார்த்தை விஷயங்களில் பெரிதும் மகிழ்ச்சியடைந்தவள் இவள் தான். திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு குஜராத்தி பெண் வந்து குழந்தைகளை பார்த்துக்கொள்ளவும் சமைக்கவும் செய்துவிட்டு போவாள். இங்கே பிரச்சினை இடம் மாறி அடுத்த மூன்று மணி நேரத்துக்கு என் திருமணம் பற்றி வாதங்களுடன் தொடர்ந்தது. வேறு யாராவதென்றால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று சொல்லிவிடுவேன்.. இவளிடம் அதுவும் முடியவில்லை. சொன்னாலும் போக மாட்டாள்.

ஒரு வழியாக அவள் கருத்தை ஆமோதித்து, கல்யாணம் செய்து கொள்கிறேன் கடைசி நேரத்தில் பின்வாங்க மாட்டேன் என்றதும், அவள் திட்டத்தைச் சொன்னாள்.

திட்டம் அருமையாகத்தான் இருந்தது. ஆனால் எங்கேயாவது சொதப்பினால் இரண்டு பேர் வாழ்க்கை, குடும்ப மானம் மரியாதை எல்லாம் போச்சு.. இருந்தாலும் இறங்கி விட்டேன்.. சந்துருவுக்குக் கூடத் தெரியாது. சொன்னால் இவ்வளவு ஆபத்தான விஷயத்தில் இறங்காதே என்று சொல்லுவான்.. சொல்லாதே என்று உஷா தான் சொல்லி இருந்தாள்

பதினைந்து நாளில் திருமணம் மண்டபம் பிடித்தாயிற்று என்று சந்துரு தொலைபேசினான்.. வீட்டிற்கு போனதும் அம்மா அதே செய்தியுடன் இனித்தாள்.. எனக்கு எதுவுமே தெரியாது.. எல்லாம் என் அம்மா அப்பா தான்.இன்னும் மனதுக்குள் அமைதி இல்லை.. இப்போது இரண்டு கவலை.. திருமணம் ஒன்று.. திட்டம் ஒன்று..
*********************************************

அடுத்த வாரம் திருமணம்.. உணவகத்திருந்த கூடத்தில் ஏற்பாடு.. அறுனூறு பேர் அமரலாம். அவ்வளவு பெரிய இடம்.. பத்திரிகை அனுப்பி, கொடுத்து எல்லாரிடமிருந்தும் வருகிறோம் என்று ஒப்புதல் வந்தாகி விட்டது.. மாமாவும் மாமியும் காலையில் பறந்து வருகிறார்கள்.. நண்பர்கள் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்கிறார்கள்.. ஏழு மணி தானெ ஆகிறது..

ஜானகிக்கு என்ன ஆச்சு.. ஒரு தரமாவது அவளாக அழைக்கக் கூடாதா.. இன்னும் மனதில் தயக்கம் போக வில்லையா.. மூன்று மணிக்குப் பேசிய போது நன்றாகத்தானே இருந்தாள்..
கல்யாண பரபரப்பாயிருக்கும்.. அடுத்த தெருதானே.. போய்ப் பார்க்கலாமா? சந்துருவுக்கு ஒரே குழப்பம்.. வேண்டாம்.. அவளுக்கு கோவம் வரும்.. வேலை இருக்கும் போது என்ன பார்வை என்று சொல்லுவாள்.. முசுடு.. போன் மட்டும் பண்ணலாம். பண்ணலாமா இல்லை அதுவும் வேண்டாமா.. ..

தயங்கித் தயங்கி தொலை பேசும்போது எதிர்முனையில்... இது ஜானகி இல்லை.. என்ன ஆச்சு ஜானகிக்கு.. போனை கழுத்தில் கயிறு கட்டித்தொங்க விட்டிருப்பாளே.. யாரையும் தொட விடமாட்டாளே.. தற்கொலையா.. கல்யாணம் வேண்டாம் என்று சொன்னது விளையாட்டில்லையா? அய்யோ..

"சந்துரூ" ஜானகியின் தாயாரின் குரல் அவன் எண்ணங்களைக் கலைத்தது.

"கொஞ்சம் வீட்டுக்கு வரியாப்பா.."

"என்னம்மா ஆச்சு.. ஜானகி எங்கே?"

"இங்கதான் இருக்கா.. நீ உடனே வா"

"இதோ வரேன்.."

அடுத்த மூன்றாம் நிமிடம் அவர்கள் வீட்டில்.. அதற்குள் எத்தனையோ எண்ணங்கள்.. நல்லது கெட்டது.. நடந்தது, நடக்கப்போவது.. நடக்க முடியாதது..எல்லாம் மனதில் ஓடின..

அவரிகள் வீட்டில் நுழைந்தும் அவள் அப்பா சொன்னார்

"ஜானகியைக் காணும்"

Thursday, August 11, 2005

படங்களுக்கு புதுசா கவிதைகள்

சரி கொஞ்சம் புதுசா கவிதைகள்

போன பதிவிலிருக்கும் படங்களுக்கு.
http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_11.html

1. பல்லில்லை?
அன்னாளில் பற்பசையில்லை
சொல்ல ஆளில்லை
சொன்னதை
நம்ப மனமில்லை.
அதனால்!

2. உருளும்
வர்த்தக
இயந்திரம்
வாழ்வை
உருளவைக்கும்
தினம் தினம்.
(IBM உலக வர்த்தக இயந்திரம்)

3. தண்ணீர்
வரவில்லை
கோலாவால்?
குழாயை
அழிக்கும்
நீரூற்று?
(கேரளத்தில், திருநெல்வேலியில் நடக்கும் போராட்டம் சார்ந்த கருத்து. நீரூற்று - fountain)

4. அட!
என்னைப்
போலவெ..
காலைமட்டும்
தூக்கவில்லையே
ஏன்?
(நாயின் வியப்பு)

5. செயலில்
மாற்றமில்லை
முறையில் மட்டும்தான்.
(கடனட்டையில் பிச்சை)

பிச்சை பாத்திரத்தில்
பங்கு கேட்கும்
அட்டைகள்.

(2% கமிஷன் இதிலும் உண்டு தானே? அட்டைகள் - கடனட்டைகள், இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் (கிருமி போஜனம் புகழ்?))

அன்புடன்

விசு

படம் பார்த்துக் கவிதை சொல்

படங்கள் நல்ல நகைச்சுவை உணர்வுடன் எடுக்கப் பட்டுள்ளன.

பார்த்ததும் கவிதை எழுதத் தோன்றியது.

இதோ என் கவிதை.

வெங்கட்டுவின் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்குப் பாராட்டும், வெங்கிட்டுவிற்கு வாழ்த்துகளும். (உங்கள் ஒரு முயற்சி என் மேல் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது பாருங்கள்.. இது போல் எத்தனை பேர் மேல் தாக்கமோ.. அத்தனையும் உங்கள் விதைக்குக் கிடைத்த பழங்கள்.. உஙள் நம்பிக்கை வீண் போகவில்லை).

அன்புடன் விச்சு
பல்லில்லை இந்தப் பழத்தால் பலனில்லை
(குடி)நீரில்லை இந்த நீரினால் பலனில்லை
சோறில்லை இந்த (திரு)ஓட்டினால் பலனில்லை
அட்டையால் தருவீர பணம்

உங்களுக்குள்ளும் கவிஞர்கள் இருக்கிறார்கள்.. தட்டி எழுப்புங்கள் உங்கள் கவிதைகளையும் தாருங்கள்























Friday, August 05, 2005

மூன்று செய்திகள் 1<->1 இல்லாதவை

மூன்று செய்திகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை

(என் கருத்துக்களுடன்)

1. சந்திப்புக்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் பல்வேறு தொழில் திட்டங்களை கமல்நாத் தெரிவித்தார். அவற்றை தமிழகத்தில் அமல்படுத்தவும் தயாராக இருப்பதாக கூறினார்.

ஆனால், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அதிமுக அரசுக்குத் தான் இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் சற்றும் அக்கறை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே என்றார் கருணாநிதி.

பின்னர் நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய அமைச்சர் கமல்நாத், சர்வதேச முதலீடுகளை கவர்ந்திழுப்பதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. சமீப காலத்தில் தயாரிப்புத் துறையில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் அனைத்துமே தமிழகத்தைத் தான் வந்தடைந்துள்ளன என்று பாராட்டினார்.

அட அவர் கிட்ட யாரும் தெளிவ சொல்லலியா.. தி மு க அமைச்சர்களால் தான் தமிழகம் முன்னேறியதுன்னு சொல்ல சொல்லி

2. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கத் தடை கோரும் திமுகவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அட இதத்தானெ அவங்களும் ஆசைப்பட்டங்க.. தி மு கா வெ அம்மாவுக்கு உதவுதே..

3. இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தயாரித்து, இயக்கி, நடித்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நியூ படம் ஆபாசம் நிறைந்திருப்பதாக கூறி அப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தைத் திரையிடவும் தடை விதித்துள்ளது. நியூ படம் வெளியாகி, பெரும் வெற்றியையும், வசூலையும் வாரிக் குவித்து, "அ ஆ' என்ற தனது அடுத்த படத்தை எஸ்.ஜே. சூர்யா தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவரப் போகும் நிலையில், நியூ படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அட போன வாரம் தானெ படத்தை எடுத்து "மண்ணின் மைந்தன் " படம் போட்டோம்.. எங்க கிராமத்துலயெ படம் ஓடி முடிஞ்சுடுத்தே என்ன செய்யலாம்? (சூரிய தொலைக்காட்சிக்குத் தான் பிரச்சினை!!)

நம்பிக்கை கவிதை போட்டி(update)

முதல் பரிசு இவருக்கு (நம்பிக்கை கவிதை போட்டி)

எல்லக் கவிதைகளையும் தொகுத்து விட்டதாகத்தான் நினைத்தேன்.. நண்பர் சுட்டினார்..

சோமுவின் கவிதை முதல் ஐந்தில், தொகுப்பில் இல்லையெ என..

அய்யோ "அடேய் விச்சு" என்று அவர் வசனம் பேசி வரும் முன் அவர் கவிதை. ஏற்கெனவே மதிப்பெண் அளித்தவர்கள்.. இவரையும் கண்டுகொள்ளுஙள். (JPEG ஆக இருப்பதால் எங்கிருந்தோ சுட்டதாக நினைக்க வேண்டாம். அவர், அவர், அவரேதான் எழுதியிருப்பார்..நன்றி திருவிளையாடல்)

அன்புடன் விச்சு

1. கடைசியில் எழுதினான்
முதல் பரிசு பெறும் கவிதை
கிறுக்கி வைத்த வார்த்தைகள்
கிழிந்து போன காகிதங்கள்
நிறைந்துபோன குப்பைத்தொட்டி
தீர்ந்து போன பேனா மை
இவை சொன்ன கவிதையின் தலைப்பு
"கவிஞனின் நம்பிக்கை"

2. அன்று
கவலைப் படதே அம்மா
கஷ்டமே இல்லை அப்பா
படித்துவிட்டேன் ஐயா
டேய், இதுல ஒன்னுமே இல்லை
என்று சொன்ன நம்பிக்கை மாணவன்
இன்று பரிட்சை அறையில்
பிட் பேப்பருடன்

Thursday, August 04, 2005

மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா

நம்பிக்கை பற்றி இன்னொரு கண்ணதாசன் பாடல்

அன்புடன் விச்சு

மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)

அதே நெருப்பு

புகை பிடிப்பவரரா நீங்கள் -

தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொள்ளும் புதுமைப் பித்தர்.

உங்கள் கொள்ளியில் இறப்பது பக்கத்திலுள்ள புகைக்காதவர்களும் தான்.

நாளைக்கு விடுகிறேன் என்று தம்மைத் தாமெ ஏமாற்றிக் கொள்ளும் சுயநலவாதி..

நீங்கள் இறப்பதால் இறங்கிப்போவது உங்கள் குடும்பத்தின் வாழும் தரம்.

ஆயிரம் பேர் இறந்தாலும் அடுத்தது நானில்லை என்பது என்ன நம்பிக்கை..

இன்றைக்கு இருபதாயிரம் பேர் புதிதாக புகை பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

நீங்கள் சமாதான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டு நாட்டைக் காக்க வேண்டாம்.

இதோ உங்கள் வாய்ப்பு . உங்கள் கையில் இருக்கும் பெட்டியைத் தூர எறிந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் மட்டுமில்லை.. இந்த உலகத்தையும் காப்பற்றுங்களேன்.

உங்கள் கையில் இருப்பது மூன்றங்குல அணுகுண்டு. நீங்கள் செய்வது மூன்று நிமிடத் தற்கொலை முயற்சி.

முதுகில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு இறக்கும் தீவிரவாதி நீங்கள்.

சிந்தியுங்கள்.. உங்கள் உயில் தயாரா.. அடுத்த 15 வருடங்களுக்கு உங்கள் குடும்பம் கவலையின்றி வாழ முடியுமா..

பணம் சம்பதித்துக் கொள்வார்கள்.. உங்கள் குழந்தைக்கு அப்பாவும் மனைவிக்கு கணவனும் பணத்தால் கிடைப்பார்களா..

இவர்கள் பழக்கத்தைப்பற்றி ஒரு கவிதை

அன்புடன் விச்சு

அதே நெருப்பு

மதுரையில் இட்டாள் கற்புக்கு இலக்கணம்
இலங்கையில் இட்டான் பக்திக்கு உதாரணம்
காட்டிலே இட்டதால் கடைவழித் தேற்றம் - வெண்
சுருட்டிலே இட்டதால் நிச்சயம் மரணம்

மனதிலே புகைந்தது வயிற்றிலெ எரிச்சல்
வதந்தியாய் புகைந்தது வாழ்க்கையில் குழப்பம்
குடந்தையில் புகைந்தது கருகின மலர்கள் - நம்
வாயிலே புகைந்தால் விரைவிலே மரணம்

அடுப்பாய் எரிந்தால் வயிற்றுக்கு உணவு
தெருவிலெ எரிந்தால் மனமகிழ் பொங்கல்
தீபம் எரிந்தால் தெருவுக்கு வெளிச்சம் - புகை
குழல் எரிந்தால் தொடர்ந்திடும் மரணம்.

நம்பிக்கை 7

நம்பினேன் நம்புவேன்

அப்பாடி .. எட்டுவரியிலிருந்து மீண்டேன்.. எனினும்
தலைப்பு இன்னும் மாறவில்லை
மனதில் இருத்திவிட்டார் வெங்கிட்டு
உணர்வைத்தூண்டி விட்டார்
கவிதை எழுதுகிறேன் என்மனம் மகிழ்ந்திருக்க
படித்துப் பிடித்திருந்தால் கருத்தைக் எழுதிடுங்கள்

அன்புடன் விச்சு

வானிலே மேகமாய் விளைநிலப் பயிர்களாய்
தவழ்ந்திடும் மழலையாய் தாவிடும் மாக்களாய்
உயிர்களாய் பிரிந்தவன் உலகெலாம் நிறைந்தவன்
அணுவிலும் உளனாகி அனுதினம் காப்பவன்

தோல்வியும் வெற்றியும் தொடரும் வாழ்க்கையும்
கல்வியும் கலைகளும் கனவொடு நனவிலும்
தொலைந்ததும் கிடைத்ததும் தொழுததும் அழுததும்
உறைவது இறைவனில் கண்டனன் மெய்ப்பொருள்.

நம்பினார் கெட்டதாய் சரித்திரம் இல்லையே
நம்பினால் நல்லதே நாளெலாம் வெல்லுமே
நம்பினேன் இதுவரை நாளையும் நம்புவேன்
நல்லதே நடக்குமே நனினிலம் வாழுமே.

Tuesday, August 02, 2005

நம்பிக்கை - 6

இன்னொரு நம்பிக்கை

கோவிலுக்குப் போவது தெய்வ நம்பிக்கை - அதை
நாத்திகர் சொல்வார் மூட நம்பிக்கை

ரசிகர்கள் கொள்வது குருட்டு நம்பிக்கை - அதே
தலைவர் மீதானல் நல்ல நம்பிக்கை

ஊழலும் கமிஷனும் கூட்டணி மாற்றமும்
என்றும் தருவது அவ நம்பிக்கை

ஓட்டு போடுவொம் மறுபடி மறுபடி - தேசம்
திருந்து மென்பதே நிஜ நம்பிக்கை

அன்புடன் விச்சு

நம்பிக்கை கவிதைப் போட்டி.. முதல் பரிசு..

நம்பிக்கை கவிதைப் போட்டி.. முதல் பரிசு..
அருண் வைத்யநாதன்
மதுமிதா
போயட் ராஜ்
சோமு
வெங்கட் கண்ணதாசன்.

ஐந்தில் வராவிட்டலும் அருமையான கவிதை தந்தவர்கள்
பெனாத்தல் சுரேஷ்
நித்யா ஸ்வாமிநாதன்
பசிடிவ் ராமா
ரங்கநாதன்

disclaimer:

வெங்கிட்டு நாராயணனின் நம்பிக்கைப் போட்டி முடிவுகள் வரும் பொது வரட்டும்.. என் கணிப்பு முதல் ஐந்து நல்ல கவிதைகள்..(இது முதல் இரண்டு என்ற வரிசையில் அல்ல) என் கவிதைகளைச் சேர்க்காமல்.

எல்ல கவிதைகளையும் தொகுத்துத் தந்திருக்கிறேன்.. படித்து உங்கள் தேர்வையும் எழுதுங்கள். lets help venkittu.

அன்புடன் விச்சு

நம்பிக்கை நம் கை - நமக்கு நம்பிக்கை
இளைஞன் - இந்தியாவின் நம்பிக்கை
வெற்றி - தோல்வியின் நம்பிக்கை
தலைவன் - தானையின் நம்பிக்கை
தண்ணீர் - தமிழ் நாட்டின் நம்பிக்கை
பயிர் - உயிர்களின் நம்பிக்கை
அடிதடி - "அந்நியனின்" நம்பிக்கை
அகிம்சை - அண்ணலின் நம்பிக்கை

ganesh venkat

வார்த்தைகளைக் கோர்த்து
எண்ணங்களைக் கிறுக்கி
கவிதையெனப் பேரிட்டு
வலைப்பதிவில் இட்டு
கருத்துகளுக்கு காத்திருக்கையில்
"அருமை!" என கருத்துவர
நம்பிக்கைப் பிறக்கும்
"இனி நானும் கவிஞன்!"
http://theydal.blogspot.com/2005/07/blog-post_22.html

நம்பிக்கை
நேத்தடிச்ச சரக்கால இன்னும் தூங்கறாரு அப்பா.
கருக்கையிலே ராட்டி தட்டப்போயிட்டா ஆத்தா.
முனியண்ணன் கடையிலேடீ கிளாஸ் கழுவினா நாஸ்தாக்காச்சு.
பன்னெண்டுக்குள்ள ஸ்கூலு போயிட்டா
சோறு பருப்போட சத்துணவாச்சு.
ராப்போதுக்கு ஆத்தா எதுனாச்சும் தரும்..
பசி பொறுக்க முடியாது, சின்னப்புள்ளை நான்!

நம்பிக்கை - 2
கஷ்டப்பட்டுப் படித்திருக்கிறேன்
கண்டிப்பாய் பாஸாகிவிடுவேன்..
அப்புறம் எதற்கு முச்சந்தி விநாயகனுக்குத்
தோப்புக்கரணமும், குட்டும்?!
ஜமாலும், ஜேம்சும் ஜம்மென்று
பாஸாவதில்லையா என்ன?
மனசுக்குள் முணுமுணுத்தபடி
விநாயகர் சன்னதி திருநீறெடுத்தேன்.
- அருண் வைத்யநாதன்

நம்பிக்கை - 3

நிலா நில்லாமல் ஓடி வரநேரமெடுப்பதால்
பூச்சாண்டியே துணை.
உம்மாச்சியின் அறிமுகம் கூட
கண்ணைக் குத்திவிடும் கொடூரனாய்த்தான்.
‘அங்கே போகாதே பூதமிருக்கு’
மிரட்டலாக ஆரம்பித்து, வாக்கியமாக மருவிவிட்டது.
நாளைய சந்ததிக்கான நம்பிக்கை விதைகள்
கார்ட்டூன் நெட்வொர்க்கில் நிழலாடுகிறது.

- அருண் வைத்யநாதன்

நம்பிக்கை!
ஒன்பது வாயில் கொண்ட
எண்சாண் உடம்பினோனே
ஏழ்வகைப் பிறப்பினோனே
அறுசுவை வாழ்வில் வெற்றி
அனுதினம் உன்னைச் சேர
ஐந்தெழுத்து மந்திரம் தந்தேன்
அதன் கொண்டே முயன்றுவிடு- உன்
இலட்சியத்தை வென்று விடு!

positive raama

நம்பிக்கை
லண்டனில் தொடர் வெடிகுண்டு
எகிப்திலும் தொடரும் வெடிகுண்டு நிலநடுக்கம்,சூறாவளி,சுனாமி,புயல்
எத்தியோப்பியா,நைஜீரியா எலும்புக் குழந்தைகள் வறுமை,தீவிரவாதம்,இன சாதி மத கோரம்பட்டினிச்சாவு,பாலியல் கொடூரம்
இத்தனையும் கடந்து இருள் இரவினில் தூங்கிஅத்தனையும் கடந்து புதுவிடியலில் விழிக்கச்செய்வது

மதுமித

நம்பிக்கை
ஒளிரத்தான் செய்கிறது சூரியன் -ஊழி வந்து
பிரட்டிப்போட்ட கடற்கரையிலும்.
பொழியத்தான் செய்கிறது மேகம் -நடுங்கி
அடங்கிய நிலத்தினிலும்.
புணரத்தான் செய்கிறார்கள் பெற்றோர் -தீ வந்து
மகவு தின்ற வீட்டிலும்..
நம்பத்தான் வேண்டும் நாமும் -
நாளையேனும் நற்பொழுதாய் விடியுமென.

penaththal suresh

நம்பிக்கை ஏரிக்கரையில் நிமிர்ந்த
பனைமரம்நீரிலும் நிமிரும் பிம்பமாக
தாவிக் குதிக்கும் தவளைகள்
நீச்சலும்கூடிப் பறக்கும் நாரைகள் எச்சமும்
சிறார்கள் வீசிடும் எச்சிற் பனங்கொட்டைகளும்
நீரில் அலையெழுப்பும் அவ்வப்போது
பிம்பம் கலைந்து குலைந்துஅலைந்து வளைந்து நெளிந்து தெளிந்து
மீண்டும் நிமிரும்வாழ்வின் நம்பிக்கைப் போல!

suntharamoorthy

நம்பிக்கை ௧
வெட்டப்பட்ட மரத்தில்சிதைந்த
கூட்டைப்பற்றிகவிதை எழுதிமுடிப்பதற்குள்..
வீழ்ந்த மரத்தின்குச்சிகளை கொண்டே
கட்டியது மற்றொரு கூட்டை..காக்கை.

நம்பிக்கை- 2

வாசு பத்தாம் வகுப்பு பாசாகிறதும்
சுப்பண்ணாவுக்கு பிரமோசன் கிடைக்கறதும்
மைதிலிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை அமையறதும்
சாந்தி அததைக்கு உடம்பு சரியாகிறதும்..
நன்றாக உடைபடும் தேங்காயிலிருந்துதான்
சிதறுகிறது நம்பிக்கைகளாக.
பார்த்து உடைங்க தேங்காய ஐயரே..

poetraj

நம்பிக்கை

வாழ்க்கைச்சுழலின் ஆதாரச் சக்கரம்.
வாழ்க்கை வளமாகஎளியவொரு சூத்திரம்.
நம்மேல் நாம் வைத்தால்வளரும் நம் சுயம்.
பிறர்மேல் நாம் வைப்போம்வளரட்டும் சமுதாயம்.

suresh in UK

அன்பை நம்புவோம்; ஆசை அழியும்
இரக்கத்தை நம்புவோம்; ஈகை பெறுகும்
உண்மையை நம்புவோம்; ஊனுக்கு மதிப்பு
எளிமையை நம்புவோம்; ஏக்கம் தணியும்
ஒழுக்கத்தை நம்புவோம்; ஓங்கட்டும் நம் புகழ்

pradeep kumar

Kஅடவுல் மெல் நான் வைக்கும் நம்பிக்கை-ஏன் புன்னகை

monu

நம்பிக்கை
போக்கிலாதொரு பெருவெளியிலும்
முகம் நோக்கி நீளுகின்ற மூன்றாம் கை!
யுகங்கள் தோறும்வெற்றியின் வாகனம்!
'கண்டம்' விட்டுப் போக கணிப்பொறி படிப்பு!
கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணமும் உண்டு!
தென்கோடி ஏவுகணைகளை டெல்லிக்கு(ம்) அழைப்பது!
கும்ப கோண விபத்துக்களில் குழந்தையில் கருகுவது!

ஈப்னு humdhin

ஆர்ஜுன link is not working

Snow on Mountain----------------

Malayee, unakku kulir eduthathanaal inthe ven paniyai eduthu pothi kondayo?
Vaanavil---------Ithu mazhaiyinaal azhiye koodum saayam alle,Vaanam endri thiryali mazhai thuligal variyum vannakkkolam...

Morpheus

Visithra, ranga and one more person (I think positve rama) the number of lines are more than 8 lines.

நம்பிக்கை
நாளை வரும் மரணம்எனும்
நம்பிக்கைதூண்டும்
எனைநன்றே வாழ்ந்து விட இன்று!!

anaamika

நம்பிக்கை***
ஆனந்த விகடன் ஆசிரியருக்கு
சாதனைச்சிறுவன் ஜனா!
பரட்டையன் டூ வேட்டையன்
இரண்டு மனைவி வேண்டுமா...?
மனைவியின் சொத்தை திருடிய கணவன் கைது...
பின்புலம் அறுந்த உருவகங்கள்
வலைப்பூக்களில் நம்பிக்கைத் தேடி
டிஸ்கவரி விண்ணோடம் -
ஒரு முடிவின் ஆரம்பம்

குசும்பன்

நம்பிக்கை கல்லாய் இருக்கும் சாமியின் மீதும்
சொல்லாய் இருக்கும் நாத்திகத்தின் மீதும்
இல்லாத விதியின் மீதும்
இல்லை என் நம்பிக்கை
மண்ணில் தெரியுது வானம்அது
நம் வசப்படல் ஆகாதோ
என்ற பாரதியின் வார்த்தை
என் நம்பிக்கை

Chenthil naathan

நம்பிக்கை!
மிட்டாய் காசில் கோலி வாங்கிகட்டிலின் அடியில் வானில்விட்டபட்டங்கள் அடுக்கி,
பம்பரம் சொடுக்கிகாய்ந்த பன்னை நீரில் நனைத்து
யூனிபாரத்தில் என்னை அமுக்கிகால்தடுக்கி
பள்ளிக்கு ஓடும்போதுஅம்மாவின் கண்களில் தெரிந்ததுதான்நம்பிக்கையின் கீற்றோ!!!

JVC

attempt 1
ஒரு கபில் போனால் ஒரு சச்சின்...ஒரு சச்சின் போனால் அங்கொரு திராவிட்...
99-இல் இங்கிலாந்து 2003-இல் தென் ஆப்ரிக்கா...உலகம் சுற்றும் வாலிபர்கள் 11 பேர்...
எங்கும் போகாமல் சற்றும் தளராமல்...ஆணி அறைந்தால் போல் இருப்பது...
நூறு கோடி மக்களின் நம்பிக்கை மட்டும் தான்...இன்னொரு "World Cup", இன்னொரு விடியல் என்று...

attempt 2

தாண்டிச் சென்றன எண்ணற்ற கால்கள்...அவனறியாத வண்ணங்களிலெல்லாம் பல காலணிகள்...
ஒரு அன்பர் வந்தார், சில நிமிடம் நின்றார்...தேடியும் கிட்டவில்லையென தன் திசையில் தொடர்ந்தார்...
முகம் வாடிய சிறுவனுக்கு ஆறுதல் சொல்வது போல்இன்னும் பல கால்கள் அவனை நோக்கி...
வாடிய முகத்தில் மெல்லிய புன்னகை...கையில் பிச்சைத் தட்டு, மனம் நிறைய நம்பிக்கை...

attempt 3
பசு ஒன்று வரைந்தாள், அதற்கு சிகப்பு நிறம் பூசினாள்அவள் கிறுக்கிய காக்கையின் நிறமோ பச்சை
அச்சிறுமி மாம்பழம் வரைந்தாள் என்றால் அவள் சொல்லித்தான் தெரியும் அது என்னவென்று
ஆனால் அவள் அம்மா பெருமையுடன் சிரித்தாள்ஓவியங்களைப் பார்த்து தனியே ரசித்தாள்
தன் பெண்ணும் பிற்காலத்தில்... ஒரு ரவி வர்மா என்ற நம்பிக்கையுடன்...

4. காய்ந்து போன அவள் அழகிய முகத்தில் பருக்கள் அல்ல, பல பிளவுகள்...
திடீரென உணர்ந்தாள் ஒரு குளிர்ச்சி...அலைபாயும் மேகங்களின் நிழல் அவள் மேல் விழுந்ததால்...
உடனே கொஞ்சம் சிலிர்ப்பு...அவள் கண்களில் மிகுந்த எதிர்பார்ப்பு...
அண்ணாந்து பார்த்தாள் முதல் மழைக்காக... நிலம், தனக்கே உரிய நம்பிக்கையுடன்...
nithya swamynathan
இயன்ற வரையில் இனிய தமிழில்
தமிழன் மட்டும் முன்னேறிவிட்டான்
தமிழை பின்னுக்குத் தள்ளிவிட்டான்
ஆங்கில மோகம் பிடித்ததினால்
பிள்ளையை கான்வென்டில் சேர்த்துவிட்டான்

தமிழில் இருவர் பேசிக்கொண்டால்
தரக்குறை வென்றொரு கருத்திருக்கு
வலைப்பூவில் தமிழ் மலர்ந்ததினால்
பிறந்தது புதுத் தெம்பெமக்கு

kaps

கை வைத்ததால் சுரந்ததாம் வைகை!
பட்டணக் கூலி வாழ்க்கை, நிரந்தரம் ஒரு வேளை உலை,இவை எல்லாம் துச்சம் என
விடியலில் படுக்கை தொலைத்து நிலத்தில் கால் பொதித்து, கலப்பயில் கை பதித்து,
தலையில் கை வைக்காமல் “இங்கும் சுரக்கும் வைகை”என்று, உழைக்கிறானே என் காவிரிப்படுகை விவசாயி, அவனது மறுபெயர் தான் நம்பிக்கை

TJ

அவ(ள்) நம்பிக்கை
ஊரடங்கும் உறங்கிப்போகும்பலகணி வழியே பால் நிலா காய்ந்திருக்கபஞ்சணை மீதோ பாவை நிலா மாய்ந்திருக்கும்
சுவர்க்கோழி சத்தமிடஇரவும் மெல்ல கரைந்துவிடும்
சேவக்கோழி கூவலிடகிழக்கும் மெல்ல வெளுத்துவிடும்
ஊருக்கு மட்டும் விடிந்திருக்கும்!

A.Thiyagarajan

தினந்தோறும் அல்லது நம்பிக்கையே வாழ்க்கை
காலையில் விழித்தேன் நல்ல நாள் இதுவென்று
அவசரம் அவசரம் ஆயிரம் அவசரம்
குளித்து துடைத்து கண்டதை உடுத்தி
முட்டி மோதி பேருந்து பிடித்து
அலுவல் முடித்தால் மீண்டும் ஓட்டம்
வாழ்க்கை வழிமுறை மாறுமென்ற கனவுகள்
நம்பிக்கை மனதிலே நல்லநாள் விரைவிலே
படுக்கையில் விழுந்தேன் நாளை நல்ல நாள்

நம்பிக்கை கவிதை 2.

நம்பிக் கைதந்த நாயகி ஒருபுறம் - என்மேல்
நம்பிக்கை தந்த குழந்தைகள் ஒருபுறம்.
நம்பிக்கை வளர்த்த பெற்றோர் ஒருபுறம் -தினம்
நம்பித் தோள்தரும் தோழர் ஒருபுறம்..

இவரென்னை நாடி வந்தாரோ இல்லை
அவரை நம்பிநான் நின்றேனோ வாழ்வில்
நம்பிக்கை போனால் நானென்ன நீயென்ன
நம்பினோர் வாழ்க்கையில் நாளும் வசந்தமே

நம்பிக்கை 3

கண்ணில்லதவர் பாடிப் பிழைத்தார்
காலில்லதவர் கடையொன்றமைத்தார்
சொல்லில்லா ஊமை செவிகேளா மனிதர்
கையாலே பேசி வாழ்வைப் பிழைத்தார்

ஏழ்மையும் துன்பமும் வாழ்க்கையை நிறுத்துமோ
சோம்பி திரிந்திடல் வாழ்விற்கடுக்குமோ
உடலிலே ஊனம் உள்ளத்தில் இல்லை
உன்னைநீ நம்பினால் வானமே எல்லை.

neyveli vichchu

நம்பிக்கை குழிவிழுந்த கன்னமும்
தோல்சுற்றிய தேகமும்
ஒட்டிய வயிறுமாய்
வறண்டபூமியில் ஒர்தளிர்
செஞ்சிலுவையின் நேசக்கரத்திற்காக காத்திருக்கையில்கண்கள்மட்டும்
ஒளிரும்உயிர்வாழும் நம்பிக்கையில்!

venkat kannadasan

உனைப் பார்க்க முடிவதில்லை...
பார்த்தாலும் பேச முடிவதில்லை...
பேசினாலும் எண்ணங்களைப்
பரிமாறிக்கொள்ள முடிவதில்லை...
எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டாலும்
இதயத்தை இருத்த முடிவதில்லை...இருந்தும்.........
உன்னை நேசிக்கவே செய்கிறேன்...ஏனெனில்..
நான் சுவாசிக்க வேண்டும்!

paLLi kondaan

காதல் விலங்கு (பாகம் 2)

கொஞ்சம் மெது மெதுவாக (நேரம் கிடைக்கும் பொது) தொடரும்இது என் முதல் கதை. தொடரவேண்டுமா என்றும் பின்னூட்டமிட்டும் நட்சத்திரங்களை சொடுக்கியும் சொல்லுங்கள்

பாகம் 1 http://neyvelivichu.blogspot.com/2005/07/1.html

அன்புடன் விச்சு

சந்துரு வீட்டில் உணவு ரொம்ப நன்றாக இருக்கும். இருந்தது. திருமணம் பற்றிய கேள்வியே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.. நானூறு பேருக்கு மேல் வருவார்கள் என்று கணக்கிட்டார்கள். வரும் ஆகஸ்டில் வச்சுக்கலாமா என்று என்னிடக் கேட்டார்கள்.. நான் என் நிலைமையை அவர்களுக்கு புரிய வைக்கலாமா என்று யோசிக்கும் போதே சந்துரு அவளுக்கு எப்போவென்றாலும் சரிதான் என்பது போல பதில் சொன்னான்.பிறகு நாங்கள் கிளம்பி வந்து விட்டோம்..

வெளியில் வரும் போது சந்துருவின் அம்மா "உன் அப்பா அம்மாவிடம் அடுத்த வாரம் பேசிவிடுகிறோம். நீ இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்று கூறினார்கள். அவர்களைப்பார்த்து சிரித்தேன்.. சந்துருவை பிறகு முறைத்தேன். காரில் வரும் போது திரும்ப என் எண்ணங்களைப்பற்றி அவனிடம் பேசினேன். எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று சொன்னான்.. எனக்கு சரியாய்ப் போக்கிக்கொள்ள வேண்டாம் என்று சொன்னதும் அவனுக்கு அதிசயமாய் கோவம் வந்தது..

"என்ன என்னைப் பிடிக்கலியா?" என்று வினவினான்..

திரும்ப விளக்கினேன். அருகிலிருந்த கடைத் தொகுப்பு ஒன்றில் நுழைந்தான்..எனக்குத் தெரியும்.. அவன் ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து சமாதானப் படுத்தப் போகிறான் என்பது புரிந்தது. இவனுக்குப் புரிய வைக்க முயற்சிப்பது வீண் என்பதும் புரிந்தது. நன்றாக புரிந்துகொண்டு செயல் படும் அவனுக்கும் இந்த விஷயத்தில் என்னைப் புரியவில்லயே என்பது வருத்தமாக இருந்தது. அவன், கொஞ்ச நாள் ஆனால் சரியாகிவிடுவேன் என்று நினைக்கிறான் போலத் தோன்றியது.. ஐஸ் கிரீமுடன் வாயில் அவன் முத்தமிட்டதும் ஸ்டிராபெரி சுவை இனித்தது. இருந்தும் மனம் லயிக்கவில்லை.
******************************
சாதிகா மூன்று வருடங்களாக எங்களுடன் வேலை பார்க்கிறாள். அவள் கணவன் மிகவும் நல்லவன். நல்லவன் என்றால்.. ம்ம்.. எதுவுமே அவள் இஷ்டம்தான். அவன் இடைப்படுவதே இல்லை.. அவளுக்குத் தன் பெண்மையை நிரூபிக்க குழந்தை பெற வேண்டும் என்ற ஆசை வந்தது.. அப்படியே செய்தாள். எல்லா நிலையிலும் 3 மாதத்திற்கு மேல் விடுமுறை எடுக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். குழந்தை 2 மாதம் முன்கூட்டியே பிறந்துவிட்டது..ஆறு மாதத்தில் மொத்தம் 1 வாரம் ஒழுங்காக வேலை பார்க்கவில்லை.. குழந்தை தான் முக்கியம் என்னால் முடியுமா தெரியவில்லை என்று கூறுகிறாள்.. எங்கள் வற்புறுத்தலுக்காக பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறாள்.

கணவன் சந்துரு போல நல்லவனாய் இருந்தாலும் நிச்சயமாக மற்ற பிரச்சினைகள் இருக்கவே இருக்கின்றன. மாலையில் சந்துரு என்னை எங்களது வழக்கமான இடத்திற்கு இரவு உணவுக்கு வரும்படி கூறியிருந்தான்.. எனக்குப் போகவே மனசில்லை.. நிறைய வேலை இருக்கிறது. ஒரு விளம்பரப் படம் அடுத்தவாரம் பத்திரிகைகளில் வந்தாக வேண்டும். ஏதோ அவசரம் என்று கூறுகிறான்.. தவிப்பாக இருக்கிறது. இன்றைக்கு முழு இரவும் இங்கெ தான் போல இருக்கிறது.திரும்ப வந்தே ஆக வேண்டும்.
******************

சந்துரு பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டான். அவன் நிறுவனம் பணப் பிரச்சினையில் எக்குத்தப்பாக சிக்கிக் கொண்டு அரசாங்கம் இன்று மூடுமா நாளையா என்று இருக்கிறதாம். இந்த நிறுவனத் திலிருந்து வந்தால் வேலைக்கு கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள் போல இருக்கிறது என்று புலம்பினான். ஆகஸ்ட் கல்யாணம் தான் அவன் பெரிய கவலை. தள்ளிப் போடலாம் என்று சொன்னதும் .. என்ன விளையாடறியா.. அப்பா கொன்று விடுவார் என்று சொன்னான். இது எப்படி.. வேலை இல்லாதவனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்னால் என்ன செய்யமுடியும் என்று கேட்கத்தோன்றியது. அவனைப்பற்றித் தெரிந்ததால் கேட்காமல் விட்டு விட்டேன்.

என்ன செய்யலாம் .. எதாவது ஐடியா சொல்லேன் என்று கேட்டான். என் நிறுவனத்தில் குமாஸ்தா வாக சேர்ந்து கொள் என்று சொல்லி வெறுப்பேற்றினேன்.. பின்னர் சிறிது ஆலோசனைக்குப் பிறகு தனியாக வியாபாரம் தொடங்கலாமே என்று கூறி பேசினோம். எல்லாம் முடிந்த பின் முதலுக்கு என்ன செய்வது என்று ஒரு ஆலோசனை.. அவனுக்கு அவன் அப்பாவிடம் பணம் கேட்க வேண்டாம். அவன் ஏற்கனவே வீட்டிற்காக கடன் வாங்கி இருந்தான். சரி 11 மணியாச்சு என் வேலை பாக்கியை முடிக்கவில்லை என்றால் நானும் அவன் மாதிரி ஆண்டிப்பண்டாரம் கதைதான் என்றேன்.. அடிக்க வரும் முன் ஓடினேன்..

வேலை முடிந்தாலும் அவனுக்கு எப்படி உதவுவது என்ற் சிந்தனை உள்மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நாளை உஷாவிடம் கேட்கலாம். அலுவலகத்திலேயே தூக்கம் காலையில் உஷா வந்து எழுப்பும் வரை.

Monday, August 01, 2005

புதுத் தலைப்பு புது கவிதை

மீள் பதிவு.. சில மாற்றங்களுடன்

அன்புடன் விச்சு

1. யார் குற்றம் (யாருக்காவது இந்த கவிதை புரிந்ததா? இலலை வைரமுத்து போல விளக்கம் தர வேண்டுமா?)

மனைவியைக் காதலி
சண்டைதான் வரும்
ஒரு கை ஓசையா?


2. நான் எழுத்தாளன்

காதலித்தேன் கவிதைகள் எழுதினேன் ;
காதலி மனைவியானாள்.
கவிதைகள் காசோலையாகின.

3. ஏழையின் சிரிப்பில் இறைவன்
என்னே கடவுள் பக்தி
என் தேசம் இன்னும் வறுமையில்

Saturday, July 30, 2005

இரு காதல் கவிதைகள்

இரு காதல் கவிதைகள்

நண்பருடன் பேசும்போது நம்பிக்கை கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெறும் கவிதை பற்றி பேச்சு வந்தது..

பின் கவிதை எப்பொழுது எழுதத்தொடங்கினோம் என்று..

பின் அது தொடர்பாக இரு கவிதைகளும் வந்தன.

இரண்டும் ஒரே தலைப்பில்

காதல் கவிதை

1. மனைவியைக் காதலி
சண்டைதான் வரும்
என்ன நம்பிக்கை(!).

2. காதலிக்கும் போது எழுதினேன் கவிதைகள்;
காதலியை மணந்தேன்
இப்போதொ எழுதுவதெல்லாம் காசோலையில் மட்டும்.


அன்புடன் விச்சு

நம்பிக்கை 5

நம்பிக்கை தோற்பதில்லை

தோல்வியும் துன்பமும் தொடர்கதை ஆனதால்
தோல்வியைத் தோண்டினேன் காரணம் தேடினேன்
அரைகுறை முயற்சியும் அவநம் பிக்கையும்
வெற்றியின் பாதையில் தடைகளாய் நின்றன.

துவண்ட மனதினைத் தூக்கி நிறுத்தினால்
தவறினை நீக்கினால் தலைவிதி மாறுமே
நம்பினோர் பாதையில் தடைகளே இல்லையே
வெற்றிச் சிகரங்கள் எட்டிடும் தூரமே.

Friday, July 29, 2005

மீண்டும் நம்பிக்கை

யாரிவர் என் கவிதை பொத்தானை தட்டிவிட்டவர்..

அன்புடன் விச்சு

மீண்டும் நம்பிக்கை

மண்ணில் விழுந்த விதைகளே மரங்களாய்
இலைகளாய் கனிகளாய் விதைகளாய் விறகுமாய்.
மனதில் விழுந்த நம்பிக்கை வெற்றியாய்
செயல்களாய் புதுமையாய் முயற்சியும் முடிவுமாய்

கண்ணில் விழுந்த காட்சிகள் வரைஞனின்
வண்ணக்குழம்பிலெ உலகமாய் உண்மையாய்
என்னில் எழுந்த சிந்தனை வாழ்க்கையில்
பொன்னிலே பொறித்திடும் சாதனை செயல்களாய்

Thursday, July 28, 2005

இவருக்கும் பரிசு உண்டா..

இவருக்கும் பரிசு உண்டா..

கண்ண தாசன் கவிதை இது..

காலத்தை வென்றது..

உண்மை நிலைசொல்லும்

உயரிய வார்த்தைகள்.

அன்புடன் விச்சு

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை இதில்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயன்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

நம்பிக்கை 3

நம்பிக்கை 3

கண்ணில்லதவர் பாடிப் பிழைத்தார்
காலில்லதவர் கடையொன்றமைத்தார்
சொல்லில்லா ஊமை செவிகேளா மனிதர்
கையாலே பேசி வாழ்வைப் பிழைத்தார்

ஏழ்மையும் துன்பமும் வாழ்க்கையை நிறுத்துமோ
சோம்பி திரிந்திடல் வாழ்விற்கடுக்குமோ
உடலிலே ஊனம் உள்ளத்தில் இல்லை
உன்னைநீ நம்பினால் வானமே எல்லை.

அன்புடன் விச்சு

நம்பிக்கை 2

நம்பிக்கை கவிதை 2.

நம்பிக் கைதந்த நாயகி ஒருபுறம் - என்மேல்
நம்பிக்கை தந்த குழந்தைகள் ஒருபுறம்.
நம்பிக்கை வளர்த்த பெற்றோர் ஒருபுறம் -தினம்
நம்பித் தோள்தரும் தோழர் ஒருபுறம்..

இவரென்னை நாடி வந்தாரோ இல்லை
அவரை நம்பிநான் நின்றேனோ வாழ்வில்
நம்பிக்கை போனால் நானென்ன நீயென்ன
நம்பினோர் வாழ்க்கையில் நாளும் வசந்தமே

அன்புடன் விச்சு

தினந்தோறும் அல்லது நம்பிக்கையே வாழ்க்கை

நம்பிக்கை கவிதைப் போட்டிக்கு http://mentalcentral.blogspot.com/2005/07/blog-post_112192738039102868.html என் ஆக்கம்.. சுத்தமாக நேரம் இல்லை. வலைபதிந்து ஒரு வாரம் ஆகிறது.. நண்பர் ரங்கனாதன் சொன்னார்.. உன்னால் முடியும் என்று நம்பிக்கை வை.. எழுத நேரம் கிடைக்கும் என்று.. இதோ நான் எழுதியது..

வேலை அழைக்கிறது.

அன்புடன் விச்சு

தினந்தோறும் அல்லது நம்பிக்கையே வாழ்க்கை

காலையில் விழித்தேன் நல்ல நாள் இதுவென்று
அவசரம் அவசரம் ஆயிரம் அவசரம்
குளித்து துடைத்து கண்டதை உடுத்தி
முட்டி மோதி பேருந்து பிடித்து
அலுவல் முடித்தால் மீண்டும் ஓட்டம்
வாழ்க்கை வழிமுறை மாறுமென்ற கனவுகள்
நம்பிக்கை மனதிலே நல்லநாள் விரைவிலே
படுக்கையில் விழுந்தேன் நாளை நல்ல நாள்

Wednesday, July 20, 2005

ரசித்த பாடல் இதயக் கோவில்

ராஜாவின் இசையில் அவர் அண்ணன் பாவலர் வரதராஜன் எழுதிய பாடல். (அவர் இறந்த சிலகாலம் கழித்து பயன்படுத்தப்பட்டது). மணிரத்னம் இயக்கிய இரண்டாவது படம். சத்திய ராஜ் நடித்த பகல் நிலவு தான் முதல் என்று நினைக்கிறேன்.

மற்ற பாடல்களும் இனிமை தான்.. முடிந்தால் பின்னர் தருகிறேன்.

வழக்கம் போல பாலு கலக்கிட்டார்.

அன்புடன் விச்சு

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நாவரண்டு பாடுகின்றேன் (2)

..................வானுயர்ந்த..........................

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

....................வானுயர்ந்த.........................

ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி

....................வானுயர்ந்த............................