Friday, May 05, 2006

பொய்யும் பொய்யர்களும்

நேற்றைய பிரதமரின் பிரசாரத்திற்குப் பிறகு சில விஷயங்கள் பதிலில்லாமல் நெஞ்சை நெருடுகின்றன.

தற்செயலாக இரண்டுமே தயாநிதி, வை கோ தொடர்புடையவை.

தன்னந்தனியாக தலைவன் என்று ஒரு கட்சியை வழிநடத்திச் சென்று ஆட்சி அமைக்கும் தகுதி உடையவர்கள் என்று நான் கருதும் சில தலைவர்களில் இவர்கள் இருவரும் முதன்மையானவர்கள். (சிதம்பரம், திருமா போன்றவர்கள் கட்சி நடத்தலாம்.. ஆட்சியைப் பிடிப்பர்களா என்பது கேள்விக்குறியே. வி.க தேர்தல் முடிந்த பிறகு கட்சியைத் தொடர்ந்து நடத்தட்டும் பிறகு கருத்து கூறுகிறேன்.)

சில காலத்திற்கு முன் வை கோ தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து தி மு க மந்திரி பதவி வாங்கி விட்டது என்றும் அதற்கு தயாநிதி " பிரதமர் வை கோ வைப் பொய்யர் என்று சொன்னார் அது பற்றி தமிழகத்தில் பிரசாரத்துக்கு வரும் போது குறிப்பிடுவார்" என்றும் கூறி இருந்தார்கள்.

பிரதமர் மறந்து விட்டாரா அல்லது தயாநிதி இதை யார் சரி பார்க்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையில் (பார்த்தால் மட்டும் என்ன செய்யமுடியும்?) "அடித்து விட்டாரா"?

இதே போல் வை கோ டா டா நிறுவனத்தை தயாநிதி மிரட்டினார் என்று குற்றம் சாட்டிய போது, அவர் மேல் மான நஷ்டவழக்கு தொடர்ந்தார் தயாநிதி.. அது பற்றியும் பிரதமர் தயாநிதியின் BOSS என்ற முறையில் அவர் யாரையும் மிரட்டவில்லை என்று கூறி இருக்கலாம். இது தயா நிதிக்கு நிறைய அனுதாபங்களைப் பெற்றுத் தந்திருக்கும். ஒரு 5 % ஓட்டுகள் (படித்தவர்களின்) கூட அதிகமாக கிடைத்திருக்கலாம்.. இப்பொது அதை சொல்லாமல் விட்டதால் இந்த மான நஷ்ட வழக்கு ஒரு நாடகமோ என்று எண்ண வைக்கிறது. தேர்தல் முடியும் வரை இப்படி ஒரு நாடகமாடி விட்டு, பிறகு இந்த வழக்கை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமே. மக்கள் மனதில் இவர் பக்கம் நியாயம் இருப்பது போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவிக்க இது உதவு கிறதே..

இதே நிலை தான் கருத்துக் கணிப்புகளுக்கும்.. எதாவது ஒரு கட்டுப் பாட்டுக்குள் இந்த க. க. வர வேண்டும்.. இல்லைஎன்றால் நான் கூட 25 பேரிடம் கருத்து கணித்தேன் என்று கூறி (தொகுதி எண்ணிக்கையில் ஒரு சதவீதம்.) ஜெ அல்லது மு க 233 இடங்களும் வி.க ஒரு இடமும் வெற்றி பெறுவார்கள் என்று பதிவிடலாம்.. (அதென்ன வி க ஒரு இடம் என்று கேட்கிறீர்களா.. இதுவரை அத்தனை பத்திரிகைகளும் ஒத்துக் கொண்ட ஒரெ விஷயம் அது தான்..)

தேர்தல் பொய்களைக் கட்டுப் படுத்த எதாவது சட்டம் வந்தால் நன்றாக இருக்கும். இந்த முறை ஜெயித்த கட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிடத் தடை என்பது போல..

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள். இதெல்லாம் கனவுதான் காணமுடியும் போல ...

அன்புடன் விச்சு

1 comment:

VSK said...

//(அதென்ன வி க ஒரு இடம் என்று கேட்கிறீர்களா.. இதுவரை அத்தனை பத்திரிகைகளும் ஒத்துக் கொண்ட ஒரெ விஷயம் அது தான்..)//



அதுதான் 8-ம் தேதி தமிழகமெங்கும் விஸ்வரூபம் எடுக்கப் போகும் காட்சியும் கூட்ட!

:-)))))))))))