Wednesday, July 29, 2026

அக்னி-செல்: இரட்டை அறிவியல் முத்திரை

சென்னையின் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அரங்கத்தில் அன்றைய மாலைப் பொழுது வழக்கம் போல் இல்லை. மெரீனா கடற்கரைக் காற்று கதவுகளின் இடுக்கின் வழியே உள்ளே நுழைந்தாலும், அரங்கத்தினுள் நிலவிய அனல் காற்று சற்றும் குறையவில்லை. மூத்த விஞ்ஞானிகள், தொழிற்துறை வல்லுநர்கள், சர்வதேசப் பத்திரிகையாளர்கள் என அரங்கம் நிரம்பி வழிய, மேடையில் அமைதியே உருவாய் நின்று கொண்டிருந்தார் டாக்டர் சுந்தரம் கோதண்டராமன்.

38 வயதான இந்த ஐ.ஐ.டி மெட்ராஸ் உலோகவியல் ஆராய்ச்சியாளரின் முன்னால், பட்டுத் துணியின் மீது மின்னிக் கொண்டிருந்தது அந்தச் சிறிய உருளை—'அக்னி-செல்' (Agni-Cell).

ஒரு சிறிய கை விளக்கு பேட்டரி -அளவு ரேடியோ ஐசோடோப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த அக்னி-செல், தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் 50 கிலோவாட் மின்சாரத்தை எவ்வித ரீசார்ஜும் இன்றி வழங்கக்கூடிய ஒரு நவீன அற்புதம். வீடுகள், மின்சார வாகனங்கள், கிராமப்புற மருத்துவ மையங்கள் என அனைத்தின் ஆற்றல் தேவைகளையும் ஒரே அடியில் தீர்க்கும் வல்லமை படைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பிற்கு தேசிய விருது வழங்கப்படவிருந்த தருணம்தான் அது.

தலைமை விருந்தினர் விருதை வழங்க எழுந்தபொழுது, மூன்றாவது வரிசையிலிருந்து ஒரு குரல் உரக்க ஒலித்தது.

"இந்த விழாவை உடனடியாக நிறுத்துங்கள்!"

எழுந்தது 'உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு அமைப்பின்' சர்வதேசப் பிரதிநிதி. அவருடன் சில பன்னாட்டு எரிபொருள் நிறுவனங்களின் அதிகாரிகளும் நின்றிருந்தனர்.

"இதனுள் ஆபத்தான அணுக்கதிர்வீச்சுப் பொருள் உள்ளது. நாளை ஒரு வாகன விபத்திலோ அல்லது கட்டிட நெரிசலிலோ இதன் கவசம் உடைந்தால், நகரமே கதிர்வீச்சுப் பிழம்பாக மாறும். முறையான பாதுகாப்புச் சோதனை இல்லாத இந்த உபகரணத்திற்கு விருது வழக்கம் வழக்கம் போல அவசரக்கோலமானது!" என்று சாடினார்.

அரங்கத்தில் மெல்லிய சலசலப்பு ஏற்பட்டது. அமைப்பாளர்கள் திகைத்தனர்.

ஆனால், சுந்தரத்தின் முகத்தில் எவ்வித பதற்றமும் இல்லை. தனது கண்ணாடியைச் சற்று உயர்த்திப் பிடித்தபடி மைக்கை கையில் எடுத்தார்.

"பாதுகாப்பு பற்றிய உங்கள் ஐயம் நியாயமானதுதான்," என்றார் தணிந்த ஆனால் தெளிவான குரலில். "நான் உங்களை  நம்பச் சொல்லவில்லை; நீங்கள் சோதித்துப் பாருங்கள்.  வெளிப்புறக் கூடத்தில் 500 டன் அழுத்தத் திறன் கொண்ட 'ஹைட்ராலிக் பிரஸ்' (Hydraulic Press) மற்றும் பிளாஸ்மா டார்ச் தயாராக இருக்கிறது. உங்கள் வல்லுநர்களைக் கொண்டே இதை உடைத்துத் தாருங்கள், பார்ப்போம்!"

சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூட்டம் அரங்கை விட்டு வெளியே வந்து சோதனைக் களத்தைச் சூழ்ந்தது.

கனரக இரும்புக்கரம் அந்த அக்னி-செல்லின் மீது இறங்கியது. டன் கணக்கில் அழுத்தம் ஏற ஏற, எந்திரத்தின் உழைப்பு சத்தமாக ஒலித்தது.

டங்க்!

ஒரு பெரும் உலோக முழக்கம். 500 டன் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் எந்திரத்தின் தடிமனான அடிப்பாகமே வளைந்து நொறுங்கியது. எந்திரம் செயலிழந்தது.

ஆனால், அக்னி-செல்? சிறு கீறல் கூட இன்றி, அதே பொலிவோடு மின்னிக்கொண்டிருந்தது!

அடுத்ததாக, 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உமிழும் பிளாஸ்மா டார்ச் மூலம் தொடர்ந்து 10 நிமிடங்கள் சுட்டெரித்தார்கள். சுடர் விலக்கப்பட்ட சில வினாடிகளிலேயே அது இயல்பு வெப்பநிலைக்குத் திரும்பியது. கைகர் கருவியில் கதிர்வீச்சின் அளவு 'பூஜ்ஜியம்' என்றே காட்டியது.

வந்திருந்த வல்லுநர்கள் வாயடைத்துப் போய் நின்றனர்.

சுந்தரம் அந்த அக்னி-செல்லைத் தன் கைகளில் ஏந்தியபடி கூட்டத்தைப் பார்த்தார்.

"நீங்கள் இதன் அணுக்கருப் பாதுகாப்பை மட்டுமே கேள்வி எழுப்பினீர்கள். ஆனால், அந்த அணுக்கரு மூலத்தைப் பாதுகாப்பாக அடைத்து வைக்கும் கவசம்தான் என் ஆராய்ச்சியின் முதல் பகுதி என்பதை நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள்," என்றார்.

அவர் தொடர்ந்தார்: "இந்தக் கதிர்வீச்சு சிறிதும் வெளியேறாமல் இருக்க, வைரத்தை விட அதிக அடர்த்தியும், அணு-துளைக்காத  வலிமையும் கொண்ட ஒரு புதிய 'கார்பன்-இரும்பு கலவையை' (Ultra-dense Carbon-Iron Alloy) உருவாக்க எனக்கு ஏழு ஆண்டுகள் பிடித்தன. இந்த அக்னி-செல்லின் வெளிப்புறக் கூடு, உள்ளிருக்கும் சிறிய எஞ்சின் அனைத்துமே இந்த புதிய உலோகத்தால் தான் செய்யப்பட்டவை."

"எனவே, நான் ஒரே நேரத்தில் இரண்டு மகத்தான கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறேன்—ஒன்று உடைந்தே போகாத ஒரு புதிய 'உலோகக் கலவை', மற்றொன்று 'முடிவில்லா அணு ஆற்றல் பேட்டரி'. எனக்கு ஒரே ஒரு கண்டுபிடிப்புக்கான விருது போதாது, இந்தியாவை உலக எரிபொருள் சந்தையில் முதலிடம் பிடித்து, உலகின் தலையாய     நாடாக்கும் இந்த கண்டு பிடிப்பிற்கு 'இரட்டைக் கண்டுபிடிப்புக்கான' (Double Invention) அங்கீகாரமே தரப்பட வேண்டும்!"

அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. சுந்தரத்தின் பார்வை சர்வதேச பிரதிநிதிகளைச் சென்றடைந்தது.

"நமது சமூகத்தில் ஒரு பழக்கம் உண்டு," என்றார் ஆழமான தொனியில். "ஒரு வெளிநாட்டவர் எதைக் கண்டுபிடித்தாலும், அதில் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் நாம் அதை உடனே தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறோம். ஆனால், இந்தியாவில்—நம்ம சென்னையில்—ஒரு பேனா முனை அளவு சாதனை நிகழ்த்தப்பட்டாலும், அதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறோம். இந்த அடிமைத்தனமான மனநிலையை நாம் என்றைக்கு மாற்றப்போகிறோம்?"

எதிர்ப்பு தெரிவித்த வல்லுநர்கள் தங்கள் தவறையும், சுந்தரத்தின் அறிவாற்றலையும் உணர்ந்து தலைகுனிந்தனர். விழா மேடையில் ஏற்பாட்டாளர்கள் சுந்தரத்திற்கு உரிய மரியாதையை வழங்கினர்.

"இந்தக் கண்டுபிடிப்பு முழுமையாகவும், எவ்வித ஆபத்துமின்றியும் பாதுகாப்பானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக டாக்டர் சுந்தரத்திற்கு இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physics) கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்; அதற்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையை நாங்கள் உடனடியாகச் செய்கிறோம்!"

No comments: