Wednesday, July 29, 2026

ஒரு பெண்ணின் கோபம்

நம்ம பெங்களூரு மெட்ரோவில்  ஏறினாலே ஒரு தனி அனுபவம் தான். அன்னைக்கும் அப்படித்தான், கே.ஆர்.புரம் ஸ்டேஷன்ல வண்டிய பிடிச்சு ஹூடி நோக்கிப் போயிட்டு இருக்கேன்.


ரயிலில் ஒரே கூட்டம். ஆனா அதிர்ஷ்டவசமா யாரோ ஒருத்தர் எழுந்து போகவும், எனக்கு அந்த கண்ணாடித் தடுப்பு ஓரமாக ஒரு சீட் கிடைச்சது. நிம்மதியா உட்கார்ந்தேன். எனக்கு அடுத்து ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தார். அவருக்கு பக்கத்துல அவரோட கணவன், அப்புறம் அவங்களோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க வரிசையா உட்கார்ந்திருந்தாங்க.


பொதுவா மெட்ரோவுல நமக்கு பக்கத்துல ஆள் உட்காரும்போது, ஆணோ பெண்ணோ ஒரு ரெண்டு இன்ச் இடைவெளி விட்டு உட்காருவது வழக்கம் தானே? அப்படித்தான் எனக்கும் அந்த பெண்ணுக்கும் நடுவுல ஒரு ரெண்டு இன்ச் இடைவெளி இருந்தது.


அந்தப் பெண்மணிக்கு ஒரு 45 வயசு இருக்கும். ஒல்லியா, மாநிறமா, பாக்குறதுக்கு ஒரு கிராமத்துப் பெண் போல இயல்பா இருந்தார்.


திடீர்னு அந்த ஆளு தன் பொண்டாட்டி கிட்ட ஏதோ தாழ்ந்த குரல்ல சொன்னான். என்ன சொன்னான்னு தெளிவா கேட்கல, ஆனா அவனோட வார்த்தைகள் அந்த அம்மாவோட மூஞ்சிய அப்படியே மாத்திடுச்சு. ஒரு கணத்துல அவங்க முகம் சுருங்கி, கோபமும் சுள்ளென எகிறின ஒரு வெளிப்பாடு.


அடுத்த கணமே, அந்த அம்மா மெல்ல என் பக்கமா நகர ஆரம்பிச்சாங்க. அந்த ரெண்டு இன்ச் இடைவெளியை கடந்து, இன்னும் ஒரு ரெண்டு இன்ச் என் பக்கம் நெருங்கிட்டாங்க. வெளியில இருந்து பாக்குறவங்களுக்கு இது பெருசா தெரியாது.


ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலும் மெட்ரோ வேகம் குறையும் போது, உடம்பு லேசா முன்னாடியோ பக்கவாட்டிலோ தன்னிச்சையா நகர்வது இயல்புதானே? அப்படி பிரேக் போடும்போதெல்லாம் என்னை நோக்கி நகர்ந்து வந்தவள், அதுக்கப்புறம் பழையபடி தன் இடத்துக்குத் திரும்ப நகரவே இல்லை!


கண்ணாடித் தடுப்பு சுவர்ல என்னை அப்படியே அமுக்குற அளவுக்கு நெருங்கி வந்து உட்கார்ந்துட்டாங்க. அவங்களோட மென்மையான தொடைகளின் அழுத்தம் என் தொடையில பலமாகவே பட்டது. உடம்பு சூடு சட்டையைத் தாண்டி அப்படி உறைச்சது. 'ஐயோ, என்னடா இது!'னு எனக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு.


எனக்கு அது ஒரு சாதாரண தொடுதல் மட்டுமே. ஆனா அவங்களுக்கு? அது ஒரு சத்தமில்லாத புரட்சி! தன் புருஷனைப் பழிவாங்கும் ஒரு நுட்பமான வழி. அவ புருஷனுக்கும் அது நல்லாவே புரிஞ்சிருக்கும். ஏன்னா, அவன் அமைதியா தலைகுனிஞ்சு உட்கார்ந்திருக்க, அந்த அம்மாவோட முகத்துல 'உனக்கு நல்ல பாடம் புகட்டிட்டேன்'ங்கிற மாதிரி ஒரு மெல்லிய புன்னகை அரும்பியிருந்தது.


ரெண்டு ஸ்டேஷன் தான்... ஹூடி வந்துடுச்சு. மெல்ல எழுந்து, அந்த அழுத்தத்துல இருந்து விலகி வண்டிய விட்டு இறங்கினேன். இறங்கி பிளாட்பாரத்துல நின்னு பாக்கும்போது, ரயில் கதவு மூடிடுச்சு. அந்த அம்மா அதே புன்னகையோட, அடுத்த ஸ்டேஷனை நோக்கி அந்தப் பயணத்துல போயிட்டே இருந்தாங்க.


நான் வீட்டிற்கு நடந்து போயிட்டு இருக்கும்போது யோசிச்சேன்... பொம்பளைங்களோட கோபமும், அதை அவங்க வெளிப்படுத்துற இந்த மாதிரி விசித்திரமான வழிகளும் உண்மையிலேயே புதிரானதுதான்!

No comments: